நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 31, 2011

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.



உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்,  நண்பர்களுக்கும் மற்றும்  உறவுகளுக்கும்:

மனசாட்சியின்:

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்






















Thursday, December 29, 2011

ஓவியரின் அதிநுட்பமான கலைப்படைப்பு!



 உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஓவியரின் (John Lennon) கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியம் முற்றிலும் வித்தியாசமானது, ஒரு ஓவியத்திற்குள் பல ஓவியங்கள் மறைக்கப்பட்டுள்ளன அதாவது பல சிறிய உருவங்களை வரைவதன் மூலம் பெரிய உருவமொன்று தோற்றம்பெற்றுள்ளது.

சாதரணமாக பார்க்கும்போது பெரிய உருவம் தெரிந்தாலும் சற்று உற்று நோக்கினால் அதன் உண்மைத்தன்மை நன்கு புலப்படும், நீங்கள் இருக்கும் இருக்கையை விட்டு சற்று பின்னோக்கி சென்று இந்த படங்களை பாருங்கள் பெரிய உருவம் தெளிவாகத் தெரியும்





Tuesday, December 27, 2011

அழகிய பெண் கண்ணை மூடினால்?




முதலில் எனக்கும் விளங்கவில்லை அப்படி என்னதான் அதிசயம் இருக்கிறது என்று. பார்த்த பிறகுதான் உன்மையிலேயே இது ஒரு அதிசயம் என்று உணரமுடிந்தது. கண்ணை மூடினா கனவில நீதானே என்ற பொன்மொழியை உண்மையாக்கும் விதத்தில் இருக்கிறது இந்தப் புகைப்படத்தின் சிறப்பு.



முதலில் இந்தப்படத்தில் இருக்கும் பெண்ணின் மூக்கில் இருக்கும் சிவப்புப் புள்ளியை ஒரு 30 செக்கன்களுக்கு உற்று நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்,

பின்னர் உங்கள் கண்களை வேறு எங்காவது உள்ள ஒரு முகப்பரப்பை நோக்கித் திருப்புங்கள், அடுத்து கண்களை மூடுங்கள், மூடியவண்ணம் சிறிந்துநேரம் காத்திருங்கள்.

இப்போது உங்கள் நினைவுகளில் தெரிபவள் யார் எனச் சொல்லுங்கள்உங்கள் விழித்திரையில் அழகிய பெண் உருவம் அசைந்தபடி வருவதை அவதானிக்கலாம்அப்படி இல்லையாயின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.. உங்கள் கனவு தேவதை காட்சி தருவாள்..

வேதாளத்தின் கேள்வி!



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.
 

“விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார்! கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர்! மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்! வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்?’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே? ‘அடுத்த வாரிசு யார்?’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது!

இது போதாதா? வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது! ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது! போரில் 3 அப்பாவிகள் பலியாகினர்! கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார்! பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார்! அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது!

ஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று! பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று!

குறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார்! ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன்? நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன? விக்ரமாதித்தா!இந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது!


நன்றி : தினமணி

அன்னை சொன்னால் ஒழிய விலகமாட்டேன்!






மனசாட்சி : அன்னை குரங்கும் பதவியினைப் பிடித்து தொங்குதே???

Monday, December 26, 2011

ஜாம்பவான்களே...உங்களால் முடியும்!?

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல 
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன் - தேவர் மகனில் கமலஹாசன்.

மனசாட்சி: இப்படி தமிழனை உசுபேத்தியே..., எந்த ஏரியாவை காட்டி கல்லா கட்டினிகளோ அந்த ஏரியாவில்தான் தண்ணி பிரச்னை - ஒரு குரல் கொடுங்களேன். (முடியுதான்னு பார்ப்போம், விஷயங்கள் பல அறிஞ்சவர் - வெவரங்கள் பல புரிஞ்சவர்) 
   

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா.
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா - படையப்பாவில் ரஜினிகாந்த்.

மனசாட்சி: சார், அவ்வளவு எல்லாம் வேணாம். முல்லை பெரியாருக்காக
 ஒரு குரல் கொடுங்களேன். (எல்லாம் வீண் ஜம்பம்.  தமிழனின் காசு வேணும். தமிழனை வைத்து பிழைக்கணும்).
எல்லாம் காலம் கடந்து புரியுது - புரிய வைத்தமைக்கு நன்றி   

டிஸ்கி - எதுக்காக தமிழ் நடிகர் திலகம் போட்டோ கேட்பவர்களுக்காக - இந்த இரு படங்களிலும்  ஒரு ஒற்றுமை  என்னனா தமிழ் நடிகர் திலகம் இவங்களோட நடித்து இருப்பார்.. நடிகர் திலகம் போட்டாவை பார்த்தாவது தமிழ் நடிகர் நடிகைளுக்கு தமிழ் உணர்வு வருதான்னு பாப்போம்

தமிழச்சி பால் குடிச்சவண்டா.....தமிழன் பாரதிராஜா





முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.


இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால் மக்களை உணர்வுப்பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள். அந்தப் பெருந்தன்மை காரணமாகவே இன்று தன் உரிமைகளையும் இழந்து வருகின்றனர். இனியும் இந்த நிலை தொடர வேண்டுமா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.


ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தைச் சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் இனி ஏமாந்தால் பாலைவனமாகிவிடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்? இனி இந்தப் பெயரே இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயரை மாற்றுங்கள்.
 


முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.



கொசுறு:  

தனது கொடிவீரனும், அன்னக்கொடியும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் பாரதிராஜா. மேலும், தனது இரு மலையாள நாயகிகளையும் அனுப்பி வைத்து விட்டாராம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தானே மலையாள நடிகைகளை வைத்து படத்தை தொடர்ந்து இயக்கினால் சரியாக இருக்காது - பாரதிராஜா.


மனசாட்சி:

தமிழன்டா.. இவர் கேட்பதை தான் தமிழ் நாட்டு மக்களும் கேட்கின்றனர் - அடியே, ஆப்பு இருக்குடி. 

தமிழன் முன்னுக்கு வர சினிமா மாயை விட்டாலே போதும்.

நன்றி - படங்கள் கூகிள்

அமைச்சரவை விரைவில் மாற்றம்



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,
தொழில்துறை அமைச்சர் வேலுமணி,

வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி

வனத்துறை அமைச்சர் பச்சமால்,

வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

மனசாட்சி : 6 மாதத்தில் 7வது முறையாக மாற்றம் 

செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.



வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.

எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.

பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.

மனசாட்சி: செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.

இவரு தான் செயல் படலைனா போற இடம் எல்லாமுமா # டவுட்டு

பாப்பாவுக்கு இப்படி படுத்தால்....வருதாம்.






பாப்பாவுக்கு இப்படி படுத்தால் தான் தூக்கம் வருதாம்






சின்ன வயதில் விளையாடிய கன் அதாங்க துப்பாக்கி.

தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் கைது



பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.


மனசாட்சி: அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்

Saturday, December 24, 2011

மனசாட்சியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2011



கிறிஸ்துமஸ்  நல்வாழ்த்துக்கள் 2011







அணையுடைப்பும் கடையடைப்பும்

 



இது... நியாயத்தை உணர்ந்ததாலா?
வாழ்க்கையை நடத்த வேண்டியிருப்பதாலா?
எப்படியோ... எதிர்ப்பைப் பதிவு செய்தாயிற்று!





டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது - கடவுளை வேண்டுகிறேன் ஏ.ஆர்.ரஹ்மான்



தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

ரஹ்மானின் இந்த வேண்டுதல், முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி வரும் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது. ஒரு தமிழராக இருந்து கொண்டு ரஹ்மான் இப்படிச் சொல்லலாமா என்று அனைவரும் குமுறுகின்றனர்..

இந்தப் படத்தின் இரு பாடல்கள் தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதில் அப்பாடல்கள் வெற்றி பெறத்தான் ரஹ்மான் வாழத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி: தமிழகத்தில் பெரும் புயலையும், சர்ச்சையையும் கிளப்பிய இப்படத்துக்கு ஆதரவாக இசைப் புயல் கருத்து தெரிவித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமே...!

விண்ணைத் தொடும் விலைவாசி - தத்தளிக்கிறது கேரளா!



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.

Wednesday, December 21, 2011

ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் மம்மூட்டி- கேரள அரசு தூது




முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இனவெறிப் பிரச்சினையாக்கி விட்டனர் கேரளத்தில் உள்ள சிலர். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் போனாலும், யார் போனாலும் தாக்குகிறார்கள், கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார்கள், சபரிமலை பக்தர்களை மிகக் கேவலமாக அர்ச்சிக்கிறார்கள். இதனால் கொந்தளித்துப் போன தமிழகத்தில் உள்ள சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத கேரள அரசு தமிழகத்தில் உள்ள மலையாளிகளை யாரும் தாக்கக் கூடாது என்று கோரி வருகிறது. ஆனால் கேரளாவில் தாக்குதலை தடுக்கவோ, நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபடுவோரைக் கைது செய்யவோ அங்குள்ள போலீஸார் சுத்தமாக முயல்வதில்லை. மாறாக அவர்களே தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் கூறுகிறார்கள்.



இந்த நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி சென்னை வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கால் மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்த மம்முட்டியிடம் முதல்வரிடம் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு பதிலளிக்கக் கூட நேரமில்லாமல் விருட்டென போய் விட்டார் மம்முட்டி.



முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் உள்ள அத்தனை சினிமாக்காரர்களும் உள்ளனர். கேரள அரசுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒரு சினிமா சங்கமும் இதுவரை கேரள அரசுக்கு எதிராக களம் இறங்கவில்லை. முதல்வர் சொல்லட்டும் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமும் நடத்தியுள்ளனர்.




இந்த நிலையில் மம்முட்டி வந்து போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக திரைத்துறையினரை போராட விடாமல் தடுக்க தூதராக அவர் வந்து போனாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழகத் திரைத்துறையினர் இப்போதைக்கு தமிழக அரசுக்கு ஆதரவாக போராடுவதாகத் தெரியவில்லை.

மனசாட்சி:  தமிழ் நாட்டில் தமிழ் நடிகர் என்று எவரும் கிடையாது இருந்தா தானே போராட, தமிழனை  ஏமாற்றி சம்பாதிக்கணும் அவ்வளவு தான் இங்குள்ள தமிழ் நடிகர்களின் நோக்கம் - இனி இவனுங்க பருப்பும் வேகாது.

'ஆன்லைனில்' குப்பையைக் கொட்டுங்க!





குப்பைகளை கொட்டுவது எங்கே என்று தவித்து வந்த தமிழக மக்களுக்கு நற்செய்தியாக, குப்பைகளை வீட்டிலேயே வந்து வாங்கி செல்ல வசதியாக ஒரு வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வீ்ட்டில் வந்து வசூலிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பதுதான் இதில் விசேஷம்.

காய்கறி கழிவுகள், பழைய பேப்பர்கள், தேவையற்ற பொருட்கள் என்று வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உருவாகும் கழிவுகள் ஏராளம். கழிவுகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்த அரசு பல திட்டங்களை திட்டி அதற்காக பணியாளர்களையும் நியமித்து உள்ளது.

ஆனாலும் குப்பைகள் முழுமையாக நீக்கப்பட்டது என்று கூற முடியவில்லை. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த பல பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை என்று குற்றசாட்டு மக்களிடையே வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் குப்பைகளை சேகரிப்பதற்காக தனி வெப்சைட் ஒன்று துவக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஜெகன், அவரது மனைவி சுஜாதா உள்ளிட்டோர் இந்த வெப்சைட்டை துவக்கி உள்ளனர்.

எம்.சி.ஏ பட்டதாரிகளான ஜெகனும், சுஜாதா துவக்கி உள்ள இந்த வெப்சைட், http://www.kuppathotti.com/. வீ்டுகளில் சேகரமாகும் பழைய பொருட்கள், பால் பாக்கெட் கவர்கள், பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு, அலுமனியம் கழிவுகளை உள்ளிட்டவற்றை பெற்று நெல்லையில் உள்ள பல குடோன்களில் சேகரிக்கப்படுகிறது.

இந்த புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுஜாதா செயல்படுகிறார். கடந்த மாதம் 11ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள், ஒவ்வொரு வீடுகளாக சென்று குப்பை கழிவுகளை சேகரித்து வருகின்றனர். குப்பைகளை தரும் வீட்டினருக்கு ஊக்கத் தொகையையும் அளிக்கின்றனர்.

இது குறி்த்து ஜெகன் கூறியதாவது,

நாங்கள் எந்த காரியத்தையும் புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய விரும்புகிறோம். அதற்காக இந்த வெப்சைட் சேவையை துவக்கி உள்ளோம். இந்தியாவில் குவியும் குப்பைகளை அகற்ற தகுந்த நிறுவனம் எதுவும் செயல்படுவதாக தெரியவில்லை. இலவசமாக செய்யும் இந்த சேவைக்கு நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

எங்களின் கிளைகள் சென்னை அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் செயல்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் கிளைகளை மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். http://www.kuppathotti.com/ இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்வது இலவசம். இதுவரை எங்களிடம் 150 பேர் பெயர்களை பதிவு செய்து உள்ளனர், என்றார்.

தமிழ்நாடு சியெம் அதிரடிக்கு காரணம் குஜராத் சியெம்

 
 
சியெம்மின் அதிரடிக்கு காரணம், குஜராத் சியெம் மோடி என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. நம்ம சியெம்முக்கு மருத்துவ உதவிக்காக மோடி அனுப்பிய நர்ஸ், கார்டன்ல நடக்கிற விஷயத்தை மோடி தரப்புக்கு கொண்டு போயிட்டாராம்... இதனால, சியெம்முக்கு மோடி அட்வைஸ் பண்ணினாராம்...


அதுல சுதாரிச்சுக்கிட்டவங்க, எல்லாருக்கும் கல்தா கொடுக்க, வாய்ப்பை எதிர்பார்த்திட்டு இருந்தாராம்... வாய்ப்பு கிடைச்சதுமே கழற்றி விட்டுட்டார்னு கார்டனுக்கு நெருக்கமானவங்க, பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்... சியெம்மோட அண்ணன் மகள்தான், இப்போ அவருக்கு உதவியா கார்டன்ல தங்கியிருக்காராம்.

இந்த நடவடிக்கையால, அரசு லாயர்ஸ் ஒரு பகுதியினர் ஆடிப்போயி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சசிகலா ரெகமண்ட்ல வந்தவங்களாம். உயிர் தோழி நீக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் சில வக்கீல்கள் ராஜினாமா செய்யற முடிவுக்குக் கூட வந்துட்டாங்களாம்... கலங்கிப் போனவங்க லிஸ்ட்ல சில அமைச்சர்களும், பல அரசு வக்கீல்களும்தான் முன்னணி இடத்துல இருப்பதாக கூறப்படுகிறது.


முதல்வர் ஜெயலலிதாவை சுத்தி இருந்த மன்னார்குடி கூட்டம் துரத்தப்பட்டதால் இனி அடிக்கடி எந்த மாற்றமும் நடக்காது என்று கட்சிக்காரங்க நம்புறாங்களாம்...’ ‘கட்சி வேலைகளை ஒழுங்கா செய்யலாம்... காங்கிரீட்டான நம்பிக்கையில பொறுப்பை வகிக்கலாம்னு முக்கிய நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாம்... இந்த அதிரடி நீக்கத்தால ரொம்ப சந்தோசமானது சியெம் குடும்பம்தானாம்...

அப்படி என்றால் தோழி ஆட்சி போயி இன்னும் ஜெ.யின் குடும்ப ஆட்சி ஆரம்பமாக போகுதோ...! இன்னும் தமிழக மக்கள் இதுவரை தெரியாத முதல்வர் ஜெயலலிதாவின் பல உறவுகளை, சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம்...!! என்ன தவம் செய்தாயோ தமிழா...!!! நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!

Tuesday, December 20, 2011

20 வருடமாக அதிமுகவை ஆட்டிப் படைத்த 14 பேர்!!



திமுகவில் அவமானப்பட்டு, தனது உழைப்பெல்லாம் சுரண்டப்பட்ட பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், பின்னர் ஆரம்பித்து தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக மாறிய அதிமுகவை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் பிடியிலிருந்து கட்சி முதல் முறையாக விடுபட்டுள்ளது. சசி குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்தான் இந்தக் கட்சியை இத்தனை காலமாக ஆட்டிப்படைத்து வந்தவர்கள்.

அந்த 14 பேர் குறித்த ஒரு அலசல்...



எம்என் எனப்படும் நடராஜன்

இந்த குருப்பின் தலைவராக முதலில் இருந்தவர் எம்.நடராஜன். இவருக்கு அதிமுக வட்டாரத்தில் முன்பு எம்என் என்றுதான் செல்லப் பெயர். பலர் எமன் என்றும் கூட மகா செல்லமாக அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு அதிமுகவை ஆட்டிப் படைத்தவர் நடராஜன் - ஒரு காலத்தில்.

இவர் ஆரம்பத்தில் மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலராக இருந்தார். அப்போதுதான் கலெக்டராக இருந்த சந்திரலேகாவுடன் நட்பு ஏற்பட்டு அவர் மூலம் தனது மனைவி சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் நடராஜன்.

பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு விரட்டப்பட்டார். அதன் பிறகு புதிய பார்வை என்ற மாதம் இருமுறை இதழின் ஆசிரியரானார். தொடர்ந்து இதை நடத்தி வருகிறார்.



சசிகலா

8வது வகுப்பு வரை படித்த சசிகலா, கணவருக்கு அடங்கிய மனைவியாக மட்டுமே இருந்து வந்தவர். இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் அசைக்க முடியாத 'சகோதரியாக' மாறுவோம் என்பதை இவர் நிச்சயம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் கணவர் நடராஜனின் புண்ணியத்தால் ஜெயலலிதாவின் நிழலாக மாறி கடந்த 29 ஆண்டுகளாக அவரை ஆட்டிப் படைத்த பெருமைக்குரியவர்.

எம்.ராமச்சந்திரன்

இவர் நடராஜனின் தம்பி. தன்னால் முடிந்த வரை அதிமுக மூலம் ஆதாயம் பெற்றவர், தனது செல்வாக்கால் பல காரியங்களை இவரும் நிகழ்த்தியுள்ளதாக கூறுகிறார்கள்.



டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன். ஜெயலலிதாவிடம் கடைசியாக வந்த சசிகலா குடும்பத்தவர்களில் இவரும் ஒருவர். வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்றார் தனது அத்தை சசிகலாவின் உதவியால்.

ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அதிகார மையமாக மாறினார் வெங்கடேஷ். கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்பட பல விஷயங்களிலும் வெங்கடேஷின்ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

வெங்கடேஷால் அவமானப்படுத்த மூத்த தலைவர்கள் பலர் ஒதுங்கிப் போயினர். பலர் கட்சியை விட்டும் வெளியேறினர். ஜெயலலிதா தொடங்கிய இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையின் நிர்வாகியாக இவர் இருந்து வந்தார்.

டிவி மகாதேவன்-தங்கமணி

இந்த இருவரும் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் பிள்ளைகள் ஆவர். இவர்கள் ஆடிய ஆட்டமும் கொஞ்சநஞ்சமில்லை. அதிலும் மகாதேவின் ஆட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் அதிகமாகவே இருந்து வந்தது. இவர்களும் இப்போது ஆப்பு தரப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.




'மகா பெரியவர்' தினகரன்!

சசிகலா குருப்பிலேயே தனி செல்வாக்குடன் இருந்தவர் டிடிவி தினகரன். இவரை பெரியகுளம் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அந்த அளவுக்கு செல்லப் பிள்ளையாக வைத்திருந்தார். ஒரு காலத்தில் சசிகலாவுக்கு அடுத்து தினகரனுக்குத்தான் அதிமுகவில் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.

ராஜ்யசபா எம்.பியாகவும் இவரை ஆக்கியவர் ஜெயலலிதா. இவர் சசிகலாவின் அக்காள் வனிதாவின் மூத்த மகன் ஆவார்.




தத்துப் பிள்ளை சுதாகரன்

வனிதாவின் 2வது மகன் பாஸ்கரன் மற்றும் கடைசி மகன் சுதாகரன் ஆகியோரும் அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இவர்களில் சுதாகரனுக்கு, ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாகும் அதிர்ஷடமும் அடித்தது.

நடராஜன் தம்பி மகன்கள் குலோத்துங்கன், ராஜராஜன்

இதேபோல நடராஜனின் தம்பி மகன்களான குலோத்துங்கன், ராஜராஜன் ஆகியோரும் கூட அதிமுகவில் ஓரளவு செல்வாக்கோடு வலம் வந்தவர்கள்தான். இப்போது கூட்டத்தோடு கூட்டமாக இவர்களையும் விரட்டி விட்டார் ஜெயலலிதா.

தம்பி திவாகரன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள இன்னொருவர் திவாகரன். இவர் சசிகலாவின் தம்பி. இவர்தான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை. மன்னார்குடியில் இருக்கிறார். இவரும் அதிமுகவில் ஆடியவர்தான்.

ராவணன்

அதிமுகவின் ராவணன் என்று அதிமுகவினராலேயே கரித்துக் கொட்டப்பட்டவர் இந்த ராவணன். மிடாஸ் மது பான ஆலையில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார்கள். இவர் சசிகலாவின் சித்தப்பாவுடைய மருமகன் ஆவார். அதிமுக தலைமைக் கழகத்தில் இவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை இருந்ததாம்.

எம்.ஜி.,ஆர். உருவாக்கி வளர்த்த கட்சியை இந்த 14 பேரும்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளாளுக்குப் பங்கு போட்டு உண்மையான அதிமுகவினரை கேவலப்படுத்தி, ஓரம் கட்டி, முடக்கிப் போட்டவர்கள் என்பதால் இவர்களது நீக்கத்தால் உண்மையான அதிமுகவினர் மனம் குளிர்ந்துள்ளனர்.

Monday, December 19, 2011

ஆட்சியிலும் கட்சியிலும் 'நந்தி'யாக சசி - ஜெ.!



முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.

நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

டிஸ்கி 1: இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

டிஸ்கி 2: சசிகலா நீக்கம்- அதிமுகவினர் பெரும் உற்சாகம்-மொட்டை அடித்துக் கொண்டாட்டம்!

பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா!





அமெரிக்க அதிபர் ஒபாமா தனது 2 மகள்களும் 18 வயதை அடையும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தத் தடை விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மால்யாவுக்கு வயது 13, இளைய மகள் ஷாஷாவுக்கு வயது 10. அவர்கள் இருவரும் 18 வயதை எட்டும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் குடும்ப விஷயங்கள் அடுத்தவர்களுக்கு தேவையில்லாமல் தெரிவிக்கப்படுவதை தடுக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நமக்கு யார் என்றே தெரியாதவர்களிடம் நாம் ஏன் நம் குடும்ப விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும். அதனால் தான் எனது மகள்களை 18 வயதாகும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்றேன். இன்னும் 4 ஆண்டுகளில் இது பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்.

ஒபாமாவின் பேஸ்புக் பக்கத்தில் 24 மில்லியன் பேர் லைக் பட்டனை அழுத்தியுள்ளனர். இந்த வார துவக்கத்தில் அண்மையில் எடுத்த தனது குடும்ப போட்டோவை பேஸ்புக்கில் போட்டு புதிய ஒபாமா குடும்ப போட்டோ என்று பெயரிட்டிருந்தார். அந்த போட்டோவுக்கு 71,000 பேர் லைக் கொடுத்திருந்தனர், 11,000 பேர் கமென்ட் எழுதியிருந்தனர்.

Sunday, December 18, 2011

மலையாள கட்சிகளின் எதிர்ப்பு-பணிந்தார் ப.சிதம்பரம்




கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய மற்ற பேச்சாளர்களை போல் நானும் கேரள மாநிலம் பிரவோம் இடைத்தேர்தல் காரணமாக கேரள கட்சிகள் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தை கையாள்வதாக கூறினேன். இந்த கருத்தை நான் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

இந்த கருத்து தேவையில்லாதது. யாருடைய மனதையும் புண்படுத்த இந்த கருத்தைக் கூறவில்லை. இந்த பிரச்னையை இரு மாநிலங்களும்பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்.

சென்னை காமராஜர் அரங்கில் நடந்த முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினை ஒரு விளக்கம் என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், பிரவோம் இடைத் தேர்தலை மனதில் கொண்டே கேரள கட்சிகள் முல்லைப் பெரியாறு பிரச்சினையை தீவிரப்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


டிஸ்கி : மத்திய உள்துறை மந்திரி எப்படியெல்லாம் பேசுகிறார் பாருங்கள் மக்களே - அவருக்கு புள்ளி விவர கணக்கு தெரியாமலா பேசி இருப்பார்.


Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறு ஒரே தீர்வு




முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரு மாநில மக்களும் வன்முறையில் இறங்குவது முட்டாள்தனமானது. தமிழக மக்கள் கேரளாவில் நுழைந்து அணையை கைப்பற்றுவது போல் பேரணி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கேரளாவுக்குள் நுழைந்தால் உயிரிழப்பு தான் நடக்குமே தவிர உருப்படியாக நடக்கப் போவது ஒன்றுமில்லை என்பதை இங்கே கண்டிப்பாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

கேரள அரசாங்கத்தை முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழகத்தோடு ஒத்துழைக்க வேண்டுமென்றால் எனக்கு தெரிந்த ஒரே ஒரு தீர்வு இதுதான்...

1. கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும். அதாவது கல் அடித்ததும் கடையை அடித்தலும் கூடாது.

2. தமிழர்களின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கு தண்ணீர் தரவில்லை என்றால், நமது வாழ்க்கையும் வீணாகி போய்விட வேண்டும் என்று கேரள மக்கள் யோசிக்க வேண்டும்.

3. கேரளாவில் எந்த சுற்றுலா தளத்திற்கும் தமிழ்நாட்டிலிருந்து செல்லக் கூடாது என்று அறிவித்து வாகனங்கள் இயக்குவதையும் தடைசெய்ய வேண்டும்.

4. .சபரிமலைக்குச் செல்வதைத் தவிர்த்து தமிழ்நாட்டிலேயே ஏதாவதொரு இடத்தில் ஐயப்பனுக்கு கோயில் கட்டி மற்ற மாநில மக்களை அங்கே வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இப்படியொரு சமுதாய புறக்கணிப்பு போராட்டத்தை தமிழர்கள் இரண்டு மாதம் நடத்தினாலே போதும். முதலில் அந்த மக்கள் உணர்வார்கள். பிறகு, அந்த மக்களே அரசாங்கத்துக்கு உணர்த்துவார்கள்.

அதைவிடுத்து இரு தரப்பும் அடித்துக் கொண்டு சாக வேண்டும் என்று நினைப்பதும், அதை அரசியல் கட்சிகளும் சில திடீர் தலைவர்களும் தூண்டிவிடுவதும் சரியானதல்ல.



நன்றி தமிழ் லீடர்

Wednesday, December 14, 2011

நடிகைகள் பீர் அபிஷேகம்!




நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில sonia agarwalவெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ?

குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். (இப்படியெல்லாம் நமக்கு தோணலையே என்றுதான்)

கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு மேகம் போல மிதக்குமாம். கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் இந்த அழகுராணி. இந்த கண்டுபிடிப்பு மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி, இன்று அநேக நடிகைகள் இந்த பீராபிஷேகத்தைதான் விரும்புகிறார்களாம்.

தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நீள்கிறது இந்த பட்டியல். சமீபத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் படப்பிடிப்பு செலவில் பாட்டில் பாட்டிலாக பீர் கணக்கு வர, என்ன ஏது என்று விசாரித்தார்களாம். அங்குதான் தெரியவந்தது இந்த பீராபிஷேக மேட்டர். சோனியா அகர்வாலின் பஞ்சு ஹேருக்கு இந்த பீர்தான் காரணமாம்.

முல்லைப் பெரியாறு - வைரமுத்து ஆவேசம்



இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

"முல்லைப் பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் தீவிரம் அடைவது கவலை தருகிறது. அந்த தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்பதால் இன்னும் கூடுதலாக வலிக்கிறது.

கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். கேரளம் தங்கள் உணவுக்கு எதிராகவும், எங்கள் உணர்வுக்கு எதிராகவும் நடந்து கொள்வது என்ன நியாயம்?

உடைந்த சோவியத் யூனியன்
என்னவோ தெரியவில்லை. உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற கணிப்பு ஒன்று உண்டு. அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

அணை பலவீனமாகி விட்டது என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டு 33 ஆண்டுகள் கழிந்து விட்டன. அதன்பிறகு நவீன தொழில்நுட்பத்தோடு அணையும் வலிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. 33 ஆண்டுகள் உடையாத அணையை உங்கள் சுயநலம் உடைக்கப் பார்க்கிறது.

'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்'
எங்களைப் போன்ற படைப்பாளிகள் கலக்கத்தோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம். நியாயத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு சாதகமாக ஒரு நிரந்தர தீர்வு இதில் எட்டப்படாவிட்டால், எங்களைப் போன்றவர்களையும் காலம் களத்தில் இறக்கிவிடலாம். பச்சைத் தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம். 'முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். மலையாளிகளைத் தொட மாட்டோம்' என்ற முழக்கத்தோடு முன்னேறுவோம்.

தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு. இந்திய அரசே தலையிடு.''

உண்ணாவிரதத்தை கேலி செய்த தி.மு.க. எம்.பி.க்கள்!



முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தியது.

இதன் ஒரு பகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலும் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக தி.மு.க. எம்.பி.க்கள் அறிவித்தனர். அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காந்திசிலை முன்பாக பகல் 12 மணிக்கு ஜின்னா, வசந்தி ஸ்டான்லி ஆகிய இரு எம்.பி.க்கள் மட்டுமே அடையாள உண்ணாவிரதத்திற்காக அமர்ந்தனர்.

பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து படம் எடுக்கும் படலம் முடிந்ததும் பிற்பகல் 2 மணிக்கு இருவரும் எழுந்து சென்றனர்.

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதிமாறன், ஜெ.கே. ரித்திஷ், தாமரைச்செல்வன் ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்திலே இருந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

5b3b493a-2865-4e1d-93c6-b971f3366067HiResதி.மு.க. தலைமை அறிவித்த போராட்டத்தில் நான்கு எம்.பி.க்கள் டெல்லியில் இருந்து கொண்டே கலந்து கொள்ளவில்லை. இந்த நான்குபேர் தலைமை அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவமரியாதை செய்ததைவிட, இருவர் உண்ணாவிரதம் என்ற பெயரில், இரண்டு மணிநேரம் உண்ணாவிரதம் என்று இருந்து, போஸ் கொடுத்துவிட்டு, ஒரு கேலி கூத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

இந்த இரண்டு மணிநேர உண்ணாவிரதமும், அதுவும் புகைப்படக்காரர்கள் வந்து படமெடுத்து பிறகு எழுந்து சென்றதும் எதற்காக? இப்படியொரு சடங்கு, சம்பிரதாயம் தேவையா?

உண்ணாவிரதம் என்றால் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை என்று இருத்தல்தானே நியாயம்.

இந்த பார்ட் டைம் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் டெல்லியில் இருந்துக்கொண்டே உண்ணாவிரதத்தைப் புறக்கணித்தவர்களையும் தி.மு.க. தலைமை கண்டிக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்காதோ என்று தோன்றுகிறது.

ஏனென்றால், 2009-ம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட போரில் அப்பாவி தமிழர்கள் குண்டுகளுக்கு பலியானதை கண்டித்து மூன்றரை மணிநேரம் அதாவது பார்ட் டைம் உண்ணாவிரதத்தை நடத்தியவரே தி.மு.க. தலைவர் கருணாநிதிதானே. இவர் எப்படி எம்.பி.க்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை கண்டிக்கப்போகிறார் என்று தான் தெரியவில்லை?


நன்றி தமிழ் லீடர்

தனுஷுக்கு குறிவைக்கும் 'டேம் 999' படத்தின் டைரக்டர்

 
 
போகிற போக்கை பார்த்தால் சேட்டன் கடை டீக்கும் வேட்டு வைத்துவிடுவார்கள் போலிருக்கிறது. மணப்புரம் கோல்டு ஹவுஸ் மேலே பறக்கும் கல், சேட்டன் கடையை பதம் பார்க்க எத்தனை நேரம் பிடிக்கும் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழக இளைஞர்களில் சிலர். இப்படி அண்டை மாநிலத்திற்குள் சிண்டுபிடி சினேகத்தை வளர்த்துவிட்டு ஹாயாக சுற்றிக் கொண்டிருக்கிறார் சோஹன்ராய். டேம் 999 படத்தின் இயக்குனர் இவர்தான்.

பல வருடங்களாகவே விவாதிக்கப்பட்டு வரும் முல்லை பெரியாறு பிரச்சனை இந்தளவுக்கு கொடூர முகத்தை காட்டுவதற்கு காரணமே இவரது படமும் அதற்கு விதிக்கப்பட்ட தடையும்தான். இதையடுத்து ஊரே உருமிக் கொண்டிருக்க, சத்தம் போடாமல் அடுத்த வெடிகுண்டை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறாராம் இந்த மேதாவி.

ராமேஸ்வரம் பகுதியில் அடித்த சூறாவளி காரணமாக ஒரு காலத்தில் காணாமலேயே போய் விட்ட தனுஷ்கோடியின் வரலாற்றை எடுக்கப் போகிறாராம். இப்போதும் அந்த பகுதியில் எலும்புக் கூடாக நிற்கும் சில வீடுகளும், தேவாலயம் ஒன்றும் இந்த குரூரத்திற்கு சாட்சியாக இருக்கிறது. இந்த சோகத்தைதான் அவர் படம் பிடிப்பதாக இருக்கிறாராம்.

இவ்வளவுக்கு பிறகும் தமிழ்நாட்டு எல்லையில் கால் வைக்க விடுவார்களா இவரை

Tuesday, December 13, 2011

ராஜாவுக்கெல்லாம் ராசா - ராயல் சல்யுட்







ரசிகர்களின் விளையாடல்!




இதை பற்றி நீங்க என்ன சொல்றிங்க???






நன்றி தினமணி

அன்புள்ள ரஜினிகாந்த்...


சூப்பர் ஸ்டார் என திரையுலகம் கொண்டாடும் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12. தமது பிறந்த நாளைக் கூட அறிந்திராத பல ரசிகர்கள் கொண்டாடத் துடிக்கும் திருநாள். அதிலும் உடல் நலக் குறைவு காரணமாக முக்கியமான சிகிச்சை மேற்கொண்டு மறு பிறவி எடுத்துள்ளதால் இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

"கட் அவுட்'டுகள், தோரணங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், இணையதளங்களில் சிறப்புக் கட்டுரைகள் என தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் தங்களது தங்கத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தும் வாழ்த்த வயதில்லாதவர்கள் வணங்கியும் தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் தவறேதும் இல்லைதான்.

அதே சமயம் நடுநிலையோடு செயல்பட வேண்டிய ஊடகங்களும் ரசிகர்களுக்குப் போட்டியாக ரஜினியின் பிறந்த நாளை பல சிறப்பு நிகழ்ச்சிகள் வாயிலாக ஒளிபரப்பி விளம்பர வருவாய் மூலம் பணமீட்டி வருகின்றன. நாளிதழ்களும், வார இதழ்களும் சிறப்பு மலர்களை வெளியிட்டுள்ளன.

சரி போகட்டும்... மக்கள் செல்வாக்குள்ள நட்சத்திரத்தைப் பற்றி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தங்களது நேயர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி அவர்களது வரவேற்பைப் பெற இது போன்ற உத்திகள் தேவைப்படுகின்றன என எடுத்துக்கொள்ளலாம்.

ரஜினிகாந்த் இவற்றையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்கிறார்? தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ரசிகர்கள் தன்னைப் பார்க்க சென்னைக்கு வர வேண்டாம் என்றும் அப்போது அவர் இமயமலையிலோ, பெங்களூரிலோ அல்லது படப்படிப்பிலோ இருப்பதாகவும் செய்திகள் வெளியாகும். பிறந்த நாளுக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்போது போக்குவரத்து பிரச்னை, எதிர்பாராத விபத்து, தேவையற்ற செலவு போன்றவற்றால் தன்னுடைய ரசிகர்கள் அலைக்கழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் ரஜினியின் உண்மையான கவலை. மற்றபடி, தன்னை வாழ வைத்த தமிழ் ரசிகர்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவருக்கு இருந்ததில்லை என்பதை அவருடைய பேச்சும் நடவடிக்கைகளும் உணர்த்துவதாகவே கருதிக்கொள்வோம்.

அதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஏழை எளியோருக்கும் ஆதரவற்றோருக்கும் உதவிகள் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதbharathi_112aa வகையில் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுங்கள் என தன்னுடைய ரசிகர் மன்றங்களுக்கு அன்புக் கட்டளையிடுவதுண்டு. அதை ரசிகர்களும் பின்பற்றுவதுண்டு. இப்படியாக பல வருடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன. இனியும் கடக்கலாம். ஆனால் ரஜினி நினைத்தால் இந்த நிலையை மாற்றலாம். ஏன்?

அதற்குக் காரணம்... கண்ணீரை வரவழைக்கும் கவலை தரக் கூடிய ஓர் இன்றியமையாத விஷயம்தான். நூற்றுக்கணக்கானவர்களிடம் கேட்டு அறிந்து அல்ல "அதிர்ந்த' பிறகே இங்கே இந்தக் கருத்து முன் வைக்கப்படுகிறது.

விஷயம் இதுதான்... "டிசம்பர் 12 என்ன நாள்?' என்று கேட்டபோது 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக "அன்று ரஜினி பிறந்த நாள்' என்று சரியாகக் கூறினர். அதே போல "டிசம்பர் 11 என்ன நாள்?' என்று கேட்டபோது உண்மையில் 15 லிருந்து 20 சதவீதம் பேர் மட்டுமே "அன்று மகாகவி பாரதியார் பிறந்த நாள்' என்றனர். அவர்களில் கூட சிலர் "அன்று பாரதியார் பிறந்த நாளோ, இறந்த நாளோ' என்று சந்தேகத்துடன்தான் கூறினர்.

வேற்று மாநிலத்தில் பிறந்த ரஜினி பிறந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடத் தெரிந்த நம்மில் பலருக்கு எட்டையபுரத்தின் எழுச்சி நாயகன் பாரதியின் பிறந்த நாள் கூட சரியாகத் தெரியவில்லை. இதற்குக் காரணம் என்ன? நடிகர், நடிகையர் பிறந்த நாளை போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடும் ஊடகங்கள், பாரதியின் பிறந்த நாளைப் பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளாததுதான்.

அது சரி... பாரதி என்ன செய்துவிட்டார்?

தானும் தன் குடும்பமும் பசித்திருந்தபோதும் தமக்கான உணவை காக்கை, குருவி எங்கள் ஜாதி என அவற்றுக்கு வாரி வழங்கிய "கஞ்சன்'தானே?

தன்னுடைய எழுச்சிமிகு எழுத்துகளாலும் புதிய சிந்தனை கொண்ட புரட்சிப் பாடல்களாலும் நாட்டில் சுதந்திர வேட்கையை விதைத்த "தீவிரவாதி'தானே?

சாதிய வெறியையும், உயர் சாதி-கீழ் சாதி வேறுபாடுகளையும் களைந்து சமுதாயத்தில் சம தர்மத்தை நிலை நிறுத்த முயற்சித்த பிரிவினைவாதிதானே?

நாடு சுதந்திரம் பெறாத போதே "ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என சுதந்திரப் பள்ளு பாடிய "பிற்போக்குவாதி'தானே?

இன்றும் சர்ச்சைக்குள்ளாகி வரும் சேது சமுத்திரத் திட்டம், நதி நீர் இணைப்பு குறித்து அன்றே "சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம், வங்கத்திலோடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளிற் பயிர்செய்குவோம்' என்று விழித்துக்கொண்டே கனவு கண்ட "சோம்பிலிதானே'?

நினைவில் வைத்துக்கொண்டாட இன்னும் என்னவெல்லாம் காரியம் செய்து தொலைத்திருக்கிறான் பாரதி?

"எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்று தனக்குத் தொழில் "நாட்டுப் பணி' என்று ஆணித்தரமாகக் கூறி அதன்படி வாழ்ந்துகாட்டி வறுமையில் உழன்ற பாரதி, அவர் வாழ்ந்த காலத்திலேயே "பிழைக்கத் தெரியாதவன்' என்று போற்றப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவருடைய பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டாடுவதா என நினைத்தோ என்னவோ பலர் மறந்திருக்கலாம்.

விஷயத்திற்கு வருவோம்... ஆக ரஜினிகாந்த் வழக்கமாகத் தன்னுடைய பிறந்த நாளை மேற்கூறியவாறு ரசிகர்களிடம் இருந்து ஒளிந்தும், மறைந்தும், விலகியும் கொண்டாடி வருகிறார். அதுசரி, பாரதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த ஒரு விஷயத்தில் இங்கு ரஜினி ஏன் வருகிறார்? அவருடைய அபரிதமான மக்கள் செல்வாக்குதான் காரணம்.

எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கினாலும் ரஜினிக்கு என்று ஒரு மாபெரும் இளைஞர் பட்டாளமும் அபிமானிகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அந்த சக்தியை அவர் புதிய வழியில் பயன்படுத்தி பாரதியின் புகழை மென்மேலும் பரப்பலாம்.

bharathiar4அதாவது தன்னுடைய பிறந்த நாளுக்கு முதல் நாள் வரும் மகாகவியின் பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி, அந்த நாளில் பாரதி பற்றிய கருத்தரங்குகள், அவருடைய சிறப்புகள், நாட்டுக்கு அவர் ஆற்றிய நற்செயல்கள், அவருடைய பாடலின் பெருமைகள் போன்றவற்றைத் தகுந்தவர்கள் மூலம் பரப்ப தனது ரசிகர்கள் மன்றங்களைப் பணிக்கலாம். அப்படிச் செய்தாலே அது தனது பிறந்த நாளைக் கொண்டாடியதற்கு சமம் என அறிவிக்கலாம்.

ரஜினி ஒரு தடவை சொன்னால் போதாதா? ரசிகர்கள் அவர் எதிர்பார்ப்பதை விட நூறு மடங்கு செய்துகாட்டி விடமாட்டார்களா? ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். ரஜினி ரசிகர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல மரியாதை உண்டாகும்.

தன் பின்னால் அலையும் ஊடகங்களை ரஜினிகாந்த் இந்த நல்ல காரியத்துக்கு அருமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஊடகங்கள் ஒரே நாளில் உலகின் போக்கையே மாற்றி விடும் வல்லமை பெற்றவை. உதாரணத்துக்கு, கடவுளர்களைப் பற்றி ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் உருவான "திருவிளையாடல்', "சரஸ்வதி சபதம்', "கந்தன் கருணை' போன்ற படங்களைக் குறிப்பிடலாம். இவை உள்ளிட்ட இது போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு சிவபெருமான், விநாயகர், முருகப் பெருமான், சரஸ்வதி தேவி உள்ளிட்ட பல கடவுளர்களைப் பற்றிய மக்களின் சிந்தனை இந்தப் படங்கள் வெளியான பிறகு முற்றிலும் மாறின. படித்தவர்கள், கேள்வியறிவு பெற்றவர்கள் என குறிப்பிட்ட சாரார் மட்டுமே அறிந்திருந்த கடவுள் புராணங்களையும் சுதந்திரப் போராட்ட வரலாற்றையும் காட்சிகள் வாயிலாக பாமரனையும் சென்று அடையச் செய்ததில் சினிமா ஊடகம் பெரும்பங்காற்றியிருக்கிறது.

அப்படிப்பட்ட சினிமா ஊடகம் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளில் புகழ் பெற்றவரும் ஒரு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் செல்வாக்குள்ள ஐம்பது பிரபலங்களில் ஒருவருமான ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் ஆவன செய்யலாம்.

தமிழகத்தில் ஆன்மிக ஆர்வலர்கள் மட்டுமே அறிந்து வணங்கி வந்த ராகவேந்திர சுவாமிகளைத் தன்னுடைய இஷ்ட தெய்வம் என்று ரஜினி சொன்னதாலேயே அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் ராகவேந்திரர் பக்தர்களாக மாறி, ருத்திராட்சம், துளசி மாலை அணிந்து வியாழக்கிழமைகளில் ராகவேந்திரர் ஆலயங்களுக்குப் படையெடுத்ததையும் கண்டிருக்கிறோம்.

மற்றவர்கள் கட்சி தொடங்கி புரட்சி செய்யட்டும். ரஜினிகாந்த் மக்களுடைய மனங்களைக் கவரும் விதத்தில் தனக்கேயுரிய வித்தியாசமான பாணியில் நல்ல காரியங்களைச் செய்து "தன் வழி தனி வழி' என நிரூபிக்கலாம். அதன் பிறகு மாநிலம், மொழி பேதமில்லாமல் மக்களே அவரை அரசியலுக்குக் கூட விரும்பி அழைத்து வரக்கூடும்.

அதனால் தமிழ்த் தாயின் தவப்புதல்வன் பாரதியின் புகழை பாரெங்கும் பரப்ப மேற்கூறப்பட்ட கருத்துகளைப் பற்றி ரஜினி கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் செய்தால் அவரைப் பின்பற்றி பல பிரபலங்களும் தங்களது பிறந்த நாள்களைக் கேளிக்கை, விருந்து என களிக்காமல் தங்களது ஆதரவாளர்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்த வாய்ப்புண்டு. ஊடகங்களும் தமது மனப்போக்கை மாற்றிக்கொள்ள வழிகோலும்.

புனிதமான மனிதன், நேர்மையான பத்திரிகையாளன், பயன்படு கவிஞன், பன்மொழிப் புலவன், சமூக சீர்திருத்தவாதி, பெண்ணுரிமைப் போராளி, தத்துவஞானி, தீர்க்கதரிசி, அப்பழுக்கற்ற தேச பக்தன் என பல முகங்களைக் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற மகாகவிஞனுக்கு இந்த மெகா கலைஞன் என்ன செய்யப் போகிறார்?

நாடு போற்றும் ஒரு கவிஞனின் புகழைப் பாட ஒரு சினிமாக்காரனை நாடுவதா என சிலர் நினைக்கலாம். அந்த எண்ணம் கூட அவர்கள் பாரதியின்பால் கொண்ட அன்பால்தான் என உணர முடியும். ஆனால் இந்த விஷயத்தில் காரியம் பெரிதா? வீரியம் பெரிதா? எனக் கருதும்பட்சத்தில் காரியமே பெரிது என எடுத்துக்கொள்ளுதலே தகும்.

வேறு என்ன செய்ய..? பாரதி என்ற அவதார புருஷனை மறந்துவிட்டவர்களுக்காக, அவர் புகழ் பாடவும் புகழ் நிலைக்கவும் மக்கள் செல்வாக்குள்ள ஒரு மனிதனிடம் மனமிரங்கி இறைஞ்சும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்த இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைக்கும்போது நமக்கும் நெஞ்சு பொறுக்குதில்லைதான்!


நன்றி : மனோஜ் கிருஷ்ணா
தினமணி