நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, November 13, 2011

தமிழனின் அடிமைத்தனம்

நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு  ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது.

தமிழர்களின் தேசபக்தி: "தமிழர்களை தேசபத்தியில் மிஞ்சுபவர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது" என்று நாம் பெருமையாக சொல்லிகொள்ளலாம். ஏன் என்றால்? தம் உறவுகள் ஈழத்திலே கொத்து கொத்தாக கொல்லப்படும் போது அதற்க்கு ஒரு பாரிய எதிர்ப்பை காட்டாமல் மவுனம் சாதித்த இனம்தானே நாம், வரலாறுகள் உங்களை அடிமைகளாக எழுதட்டும்.

தமிழனின்  அடிமைத்தனம்:  உயிர், இன, மொழி, கலாசாரம், எல்லாவற்றிலும் தமிழன் அடிமைபட்டு கிடக்கிறான். வடநாட்டுகாரன் தமிழனை ஆண்டாண்டாய் ஆளுகிறான். தமிழன் உயிர்பயத்தில் உணர்வுகள் செத்து அடிமையாக வட இந்தியனுக்கு சேவகம் செய்கிறான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 1: மெரிக்காவில் கலிபோர்னிய என்று ஒரு மாநிலம் உண்டு, மேச்சிகொவுக்கு சொந்தமான அந்த மாநிலம் 1846 நடந்த சண்டையில்  அமெரிக்காவின் 31  மாநிலமாக சேர்க்கப்பட்டது,

இருந்தாலும் அங்கு குடியிருக்கும் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்காக அந்த மாநிலத்தின் வங்கிகளில், அரசு தம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் ஸ்பானிஷ் பேச தெரிந்தவர்கள் வேலையில் இருப்பார்கள் அந்த மொழியிலும் படிவங்கள் இருக்கும். இது போதாது என்று அங்கு வாழும் மேக்ஸ்சிகன் மக்கள் தங்கள் மேக்சிகொவின் சுதந்திர தினத்தை அமெரிக்காவில் கொடி கெட்டி கொண்டாடுவார்கள். 

அதுமட்டுமா, டிரைவிங் டெஸ்ட் நீங்கள் ஹிந்தி, உருது, பஞ்சாபி, இப்படி எந்த மொழிகளில் வேண்டுமானாலும் எழுதலாம். அவசர போலீஸ், தீயணைப்பு, மருத்துவம் என்ற பிரிவுகளுக்கு நீங்கள் போன் செய்தால் உங்களுக்கு ஆங்கிலம் தெரிய தேவையில்லை உங்களுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் டிரான்ஸ் லேட் பண்ணும் நபர்கள் உடனே லைன் இல் வருவார்கள். இப்போ புரியும் நாம எப்படி இந்தியாவில் அடிமையா இருக்கிறோம் என்று.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 2:
தமிழக மீனவர்கள் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் சூடு, சுரணை, மானம் வெட்கம் இல்லாம் உணர்வற்ற பிண்டங்களாய், அடிமைகளாய் வாழ்கிறோம். வாழ்வது ஒரு முறை வீழ்வதும் ஒரு முறை என்கிற பழமொழி எல்லாம் தமிழில்தான் இருக்கு அதுவெல்லாம் தமிழனுக்கு ஏனோ புரியவில்லை.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 3: கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த அணுமின் நிலையத்தை கேரளாவில் நிறுவவேண்டியது தானே, கர்நாடகாவில், ஆந்திராவில் முடியாது அதுவும் இளிச்சவாயன் தமிழன்தான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 4 :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இது ஏற்ப்படுத்தும் கெடுதி இருகிறதே! இதை இந்தியாவின் எந்த மாநிலமும் அனுமதிக்கவில்லை. வந்தவர்களை வாழவைக்கும் தமிழர்களே இதிலும் இளிச்சவாயர்கள்.

உலகிலே ஒருவன் அடிமைத்தனத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அவன் தமிழர்களிடம் இருந்து கற்று கொண்டால் போதுமானது. தமிழா உன் அடிமை விலங்கை தகர்த்தெறி! சுதந்திர தமிழகமே எமது இலட்சியம் என்று முழங்கு! மானம் உள்ள தமிழனாக வாழவேண்டுமா! நீ சுதந்திர தமிழ் நாட்டின் குடிமகனாக வேண்டும்