நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, December 21, 2011

ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் மம்மூட்டி- கேரள அரசு தூது




முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இனவெறிப் பிரச்சினையாக்கி விட்டனர் கேரளத்தில் உள்ள சிலர். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் போனாலும், யார் போனாலும் தாக்குகிறார்கள், கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார்கள், சபரிமலை பக்தர்களை மிகக் கேவலமாக அர்ச்சிக்கிறார்கள். இதனால் கொந்தளித்துப் போன தமிழகத்தில் உள்ள சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத கேரள அரசு தமிழகத்தில் உள்ள மலையாளிகளை யாரும் தாக்கக் கூடாது என்று கோரி வருகிறது. ஆனால் கேரளாவில் தாக்குதலை தடுக்கவோ, நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபடுவோரைக் கைது செய்யவோ அங்குள்ள போலீஸார் சுத்தமாக முயல்வதில்லை. மாறாக அவர்களே தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் கூறுகிறார்கள்.



இந்த நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி சென்னை வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கால் மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்த மம்முட்டியிடம் முதல்வரிடம் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு பதிலளிக்கக் கூட நேரமில்லாமல் விருட்டென போய் விட்டார் மம்முட்டி.



முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் உள்ள அத்தனை சினிமாக்காரர்களும் உள்ளனர். கேரள அரசுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒரு சினிமா சங்கமும் இதுவரை கேரள அரசுக்கு எதிராக களம் இறங்கவில்லை. முதல்வர் சொல்லட்டும் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமும் நடத்தியுள்ளனர்.




இந்த நிலையில் மம்முட்டி வந்து போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக திரைத்துறையினரை போராட விடாமல் தடுக்க தூதராக அவர் வந்து போனாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழகத் திரைத்துறையினர் இப்போதைக்கு தமிழக அரசுக்கு ஆதரவாக போராடுவதாகத் தெரியவில்லை.

மனசாட்சி:  தமிழ் நாட்டில் தமிழ் நடிகர் என்று எவரும் கிடையாது இருந்தா தானே போராட, தமிழனை  ஏமாற்றி சம்பாதிக்கணும் அவ்வளவு தான் இங்குள்ள தமிழ் நடிகர்களின் நோக்கம் - இனி இவனுங்க பருப்பும் வேகாது.

'ஆன்லைனில்' குப்பையைக் கொட்டுங்க!





குப்பைகளை கொட்டுவது எங்கே என்று தவித்து வந்த தமிழக மக்களுக்கு நற்செய்தியாக, குப்பைகளை வீட்டிலேயே வந்து வாங்கி செல்ல வசதியாக ஒரு வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வீ்ட்டில் வந்து வசூலிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பதுதான் இதில் விசேஷம்.

காய்கறி கழிவுகள், பழைய பேப்பர்கள், தேவையற்ற பொருட்கள் என்று வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உருவாகும் கழிவுகள் ஏராளம். கழிவுகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்த அரசு பல திட்டங்களை திட்டி அதற்காக பணியாளர்களையும் நியமித்து உள்ளது.

ஆனாலும் குப்பைகள் முழுமையாக நீக்கப்பட்டது என்று கூற முடியவில்லை. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த பல பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை என்று குற்றசாட்டு மக்களிடையே வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் குப்பைகளை சேகரிப்பதற்காக தனி வெப்சைட் ஒன்று துவக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஜெகன், அவரது மனைவி சுஜாதா உள்ளிட்டோர் இந்த வெப்சைட்டை துவக்கி உள்ளனர்.

எம்.சி.ஏ பட்டதாரிகளான ஜெகனும், சுஜாதா துவக்கி உள்ள இந்த வெப்சைட், http://www.kuppathotti.com/. வீ்டுகளில் சேகரமாகும் பழைய பொருட்கள், பால் பாக்கெட் கவர்கள், பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு, அலுமனியம் கழிவுகளை உள்ளிட்டவற்றை பெற்று நெல்லையில் உள்ள பல குடோன்களில் சேகரிக்கப்படுகிறது.

இந்த புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுஜாதா செயல்படுகிறார். கடந்த மாதம் 11ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள், ஒவ்வொரு வீடுகளாக சென்று குப்பை கழிவுகளை சேகரித்து வருகின்றனர். குப்பைகளை தரும் வீட்டினருக்கு ஊக்கத் தொகையையும் அளிக்கின்றனர்.

இது குறி்த்து ஜெகன் கூறியதாவது,

நாங்கள் எந்த காரியத்தையும் புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய விரும்புகிறோம். அதற்காக இந்த வெப்சைட் சேவையை துவக்கி உள்ளோம். இந்தியாவில் குவியும் குப்பைகளை அகற்ற தகுந்த நிறுவனம் எதுவும் செயல்படுவதாக தெரியவில்லை. இலவசமாக செய்யும் இந்த சேவைக்கு நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

எங்களின் கிளைகள் சென்னை அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் செயல்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் கிளைகளை மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். http://www.kuppathotti.com/ இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்வது இலவசம். இதுவரை எங்களிடம் 150 பேர் பெயர்களை பதிவு செய்து உள்ளனர், என்றார்.

தமிழ்நாடு சியெம் அதிரடிக்கு காரணம் குஜராத் சியெம்

 
 
சியெம்மின் அதிரடிக்கு காரணம், குஜராத் சியெம் மோடி என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. நம்ம சியெம்முக்கு மருத்துவ உதவிக்காக மோடி அனுப்பிய நர்ஸ், கார்டன்ல நடக்கிற விஷயத்தை மோடி தரப்புக்கு கொண்டு போயிட்டாராம்... இதனால, சியெம்முக்கு மோடி அட்வைஸ் பண்ணினாராம்...


அதுல சுதாரிச்சுக்கிட்டவங்க, எல்லாருக்கும் கல்தா கொடுக்க, வாய்ப்பை எதிர்பார்த்திட்டு இருந்தாராம்... வாய்ப்பு கிடைச்சதுமே கழற்றி விட்டுட்டார்னு கார்டனுக்கு நெருக்கமானவங்க, பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்... சியெம்மோட அண்ணன் மகள்தான், இப்போ அவருக்கு உதவியா கார்டன்ல தங்கியிருக்காராம்.

இந்த நடவடிக்கையால, அரசு லாயர்ஸ் ஒரு பகுதியினர் ஆடிப்போயி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சசிகலா ரெகமண்ட்ல வந்தவங்களாம். உயிர் தோழி நீக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் சில வக்கீல்கள் ராஜினாமா செய்யற முடிவுக்குக் கூட வந்துட்டாங்களாம்... கலங்கிப் போனவங்க லிஸ்ட்ல சில அமைச்சர்களும், பல அரசு வக்கீல்களும்தான் முன்னணி இடத்துல இருப்பதாக கூறப்படுகிறது.


முதல்வர் ஜெயலலிதாவை சுத்தி இருந்த மன்னார்குடி கூட்டம் துரத்தப்பட்டதால் இனி அடிக்கடி எந்த மாற்றமும் நடக்காது என்று கட்சிக்காரங்க நம்புறாங்களாம்...’ ‘கட்சி வேலைகளை ஒழுங்கா செய்யலாம்... காங்கிரீட்டான நம்பிக்கையில பொறுப்பை வகிக்கலாம்னு முக்கிய நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாம்... இந்த அதிரடி நீக்கத்தால ரொம்ப சந்தோசமானது சியெம் குடும்பம்தானாம்...

அப்படி என்றால் தோழி ஆட்சி போயி இன்னும் ஜெ.யின் குடும்ப ஆட்சி ஆரம்பமாக போகுதோ...! இன்னும் தமிழக மக்கள் இதுவரை தெரியாத முதல்வர் ஜெயலலிதாவின் பல உறவுகளை, சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம்...!! என்ன தவம் செய்தாயோ தமிழா...!!! நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!