நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, October 18, 2011

ஒரு கல் ஒரு கண்ணாடி

உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. ஹன்சிகா நாயகியாக நடிக்க ராஜேஷ் இயக்கி வருகிறார். படத்தின் பெயரை சுருக்கி OK OK என்றே இணையதளங்களில் குறிப்பிடப்படுகிறது.

இப்படத்தின் FIRST LOOK சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் 'ஏழாம் அறிவு' படத்துடன் வெளிவர இருக்கிறது. படத்தின் பாடல்கள் இன்னும் தயார் ஆகாத காரணத்தினால் ' ஒரு கல் ஒரு கண்ணாடிபடத்தின் TEASER மட்டுமே வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வேலாயுதம்' படத்துடனும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் TEASER வெளிவர இருக்கிறது. விஜய்யும் உதயநிதி ஸ்டாலுனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது இணையத்தில் கூறியிருப்பது " ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் TEASER விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'வேலாயுதம்' படத்துடனும் வெளிவர இருக்கிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.

தீபாவளி தினத்தன்று  ' வேலாயுதம்', 'ஏழாம் அறிவுஎன இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களுடன் தான் நாயகனாக அறிமுகமாகும் படத்தின் TEASER வெளிவர இருப்பதால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஓட்டுப் போடவில்லை!

மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாகவும், கமல்ஹாசன் வெளிநாடு போய் விட்டதாலும் ஓட்டுப் போட வரவில்லை.

எந்தத் தேர்தலையும் தவற விடாமல் ஓட்டுப் போட்டு விடுவது இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் வழக்கமாகும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் ஓட்டுப் போட வந்தபோது மீடியாக்களிடம் சிக்கி திணறிப் போய் விட்டனர்.

இந்த நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் இருவருமே ஓட்டுப் போடவில்லை.

ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை. அவரது குடும்பத்தினரும் யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை.

அதேபோல கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர்கள் பிரசன்னா, எஸ்.வி.சேகர், நடிகை சினேகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இன்று வாக்களித்தனர். மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாகவும், கமல்ஹாசன் வெளிநாடு போய் விட்டதாலும் ஓட்டுப் போட வரவில்லை.

எந்தத் தேர்தலையும் தவற விடாமல் ஓட்டுப் போட்டு விடுவது இந்த இரு முன்னணி நட்சத்திரங்களின் வழக்கமாகும். கடந்த சட்டசபைத் தேர்தலின்போது இவர்கள் இருவரும் ஓட்டுப் போட வந்தபோது மீடியாக்களிடம் சிக்கி திணறிப் போய் விட்டனர்.

இந்த நிலையில் இன்று நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் இருவருமே ஓட்டுப் போடவில்லை.

ரஜினிகாந்த் உடல் நலம் காரணமாக ஓய்வில் இருந்து வருவதால் ஓட்டுப் போடவில்லை. அவரது குடும்பத்தினரும் யாரும் ஓட்டுப் போட்டதாக தெரியவில்லை.

அதேபோல கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு போயிருப்பதால் வரவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர்கள் பிரசன்னா, எஸ்.வி.சேகர், நடிகை சினேகா உள்ளிட்ட திரையுலகினர் பலர் இன்று வாக்களித்தனர்.


உச்சநீதி மன்றத்தில் முன்கூட்டியே வரவழைக்கப்பட்ட காவிரி வழக்கு: ஜெயலலிதா திட்டம்தான் என்ன?

காவிரி நதிநீர் பங்கீடு குறித்த நடுவர் மன்றத்தின் உத்தரவு தொடர்பாக தமிழக அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு இன்று அவசரம் அவசரமாக விசாரணைக்கு வரவைக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான இந்த மனுவை ரவீந்திரன், பட்னாயக் மற்றும் கோகலே ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரிக்கிறது. இந்த மனு நாளையே விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும் என முன்னதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வைத்தியநாதன் கேட்டிருந்தார். ‘ஏன் இந்த திடீர் அவசரம்…. என்ன பின்னணி? என்று நீதிபதி ரவீந்திரன் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.
உடனே தமிழக அரசு வழக்கறிஞர் வைத்தியநாதன், “இதற்கான அவசர அவசியம் இப்போது வந்திருப்பதாக தமிழக அரசு கருதுவதால் நாளைய விசாரணையில் இந்த வழக்கு பட்டியலிடப்பட வேண்டும், என கூறியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின் போது தமிழக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திங்களன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ பன்னீர் செல்வம், வேளாண் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, பொதுப்பணிச் செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேறே்றனர்.

துரிதப்படுத்துவது ஏன்?

இந்த வழக்கு அக்டோபர் 3 வது வாரத்தில்தான் வரவிருந்தது. ஆனால் ஒரு வாரம் முன்னதாகவே விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தியுள்ளது. இந்த அவசரத்தின் பின்னணி குறித்து பலவாறு பேசப்படுகிறது.
இந்த வாரத்தில் (அக்டோபர் 20-ம் தேதி) சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருக்கு போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் காவிரி விவகாரம் கிளறப்படுவதன் மூலம், பெங்களூரில் அமைதியற்ற சூழல் உருவாகக் கூடும்.
அதைப் பயன்படுத்தி, விசாரணைக்கு போகாமல் ஜெயலலிதா தவிர்த்துவிட வாய்ப்பு கிட்டுமல்லவா… சென்சிடிவ் பிரச்சினையான காவிரி வழக்கு விசாரணையை முன்கூட்டி கொண்டு வர இதுவே முக்கிய காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

என்ன ஒரு வில்லத்தனம்!