நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, October 29, 2011

iPhone மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள்

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றாக ஜபோன் இப்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஜபோன் கெமராவில் ஒரு விசேட மென்பொருள் மூலம் சாதாரணமான ஆடையுடன் வருபவர்களை ஆடைகளை நீக்கி நிர்வாணமாகக் காட்டும் வசதியொன்று செய்யப்பட்டுள்ளது.
எனினும், இது ஐபோன் செய்துகொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இதுவொரு பிரத்தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடிகையின் தங்கைகளுக்கு வலைவீசும் டைரக்டர்கள்!

நடிகை ஒருவரின் 5 தங்கைகளுக்கு தமிழ் சினிமா டைரக்டர்கள் வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகையோ இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவங்களாவது படித்து பெரிய அதிகாரி ஆகணும்  என்று கூறி நடிப்பு உலகத்துக்கு வர தடை போட்டு விட்டாராம். ஆறு பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு. அப்படி 5 தங்கைகளுடன் பிறந்திருக்கிறார் நடிகை பூர்ணா. ஆனால் அவரது குடும்பம் இப்போது மிக மகிழ்ச்சியாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான்.

படித்துக் கொண்டிருந்த போதே ஸ்கூல் டிராமாவில் நடித்த பூர்ணாவை பார்த்த சினிமாக்காரர்கள் அப்படியே அள்ளிக் கொண்டு வந்தார்கள். தனது 5 தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பூர்ணா படிப்பை விட்டுவிட்டு படத்தில் நடிக்க ஆரம்பித்தார். படங்கள் எதுவும் வெற்றி பெறாவிட்டாலும், எப்படியோ போராடி சொந்த ஊரில் பெரிய பங்களா கட்டிவிட்டார். இப்போது தனது தங்கைகளுடன் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கும் பூர்ணாவுக்கு ஒரே ஒரு கவலைதானாம். தங்கைகளையும் சிலர் நடிக்க அழைப்பது பொறுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறாராம் அம்மணி. வாய்ப்புகளுடன் தேடி வந்த டைரக்டர்களிடம், இந்த பொழப்பு என்னோட போகட்டும்; அவர்களாவது படித்து பெரிய பெரிய அதிகாரி ஆகணும். அவர்களை விட்டுடுங்களேன் என்று கெஞ்சாத குறையாக அனுப்பி வைக்கிறாராம்.

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மாற்றம்?

தமிழ்நாட்டில் நவம்பர் முதல் வாரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று உறுதியான தகவல்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க. அமைச்சரவை அமைந்து இன்னும் ஆறு மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள் மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதாவது, இரண்டு மாதங்களுக்குள் மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடந்ததும், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. அதனால், அடுத்தக் கட்ட அமைச்சரவை மாற்றம் நடக்கவில்லை.
 
சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், உள்ளாட்சித் தேர்தல் வந்துவிட்டது. இதில் அ.தி.மு.க. தனித்து நின்று யாருமே எதிர்பாராத அளவுக்கு வெற்றியும் பெற்றுவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் எங்காவது, கடுமையான தோல்வி கண்டிருந்தால், அம்மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர்களை மாற்றலாம் என்றால், அதற்கும் வாய்ப்பில்லை.
 
ஆனாலும், கடந்த சட்டமன்றத்தொடரில் அமைச்சர்களின் பணி மற்றும் நடவடிக்கைகளை கண்டு, சில பேரை மாற்றியே தீர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
 
இந்த அமைச்சரவை மாற்றத்தில், பதவியை இழக்கப் போகிறவர்கள் பட்டியலில் ஐந்து அல்லது ஆறு பேர் இருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அதன்படி கோகுல இந்திரா, சண்முகவேலு, உதயகுமார், சண்முகநாதன் ஆகிய இவர்களுடன் இன்னும் சிலர் பதவி இழக்கலாம். அதே நேரத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் டாக்டர் விஜய் வேறு துறைக்கு மாற்றப்படலாம். தொழில்துறை அமைச்சராக இருக்கும் வேலுமணியும் வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த மாற்றங்கள் எல்லாம் நவம்பர் 3ம் தேதிக்கு பிறகு நடக்கும். ஏன், உடனே நடக்காதா என்று கேட்டால், அதற்கு கவர்னர் தேவையாயிற்றே என்று பதில் வருகிறது.
 
கவர்னர் ரோசய்யா, வரும் 30, 31 மற்றும் நவம்பர் 1ம் தேதிகளில் இந்திய கவர்னர் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த கவர்னர் மாநாட்டுக் குழு தலைவராக, இந்தியாவில் இருக்கும் கவர்னர்களில் மிக குறைந்த வயதுடைய ரோசய்யா தான் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் மிகப்பெரிய தகவல்.
 
அவர் மாநாட்டை முடித்துக் கொண்டு வந்ததும், அமைச்சரவை மாற்றம் இருக்கும். புதிதாக அமைச்சர் பட்டியலில் இடம் பெறப் போகிறவர்கள் யார் என்பது, யாருக்குமே தெரியாது, முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர. யாரெல்லாம் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்பதை வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தெரிந்துவிடும்.

செயற்கை ரத்தம் விஞ்ஞானிகள் சாதனை

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர்.

இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கினர்.

இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.இவை இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய ஆபரேசன், இருதய மாற்று ஆபரேசன் மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என டாக்டர்கள் கருதுகின்றனர்