நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, November 20, 2011

ஊழல் - கறுப்பு பணம் விழிப்புணர்வு ரதயாத்திரை - 40 நாள் இன்று நிறைவு

நாட்டில் மலிந்து விட்ட ஊழல் , கறுப்பு பண விவகாரத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் எழுச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.,அத்வானி ‘ஜன்ஷேத்னா ’ ரத யாத்திரை இன்று டில்லியில் நிறைவு பெறுகிறது. நண்பகல் 12 மணி யளவில் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் விழாவில் தே.ஜ.,கூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.


கடந்த 39 நாட்களில் 22 மாநிலங்களில் முக்கிய நகரங்களில் மக்கள் பெருவாரியான வரவேற்பு அளித்தனர் . இதில் மக்கள் ஆதரவையும் , எழுச்சியையும் காண முடிந்ததாக பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர். யாத்திரை பா.ஜ.,வுக்கு பெரும் செல்வாக்கு தேடித்தந்திருப்பதுடன் அத்வானிதான் பிரதமர் வேட்பாளர் என்று ஊர்ஜிதம் செய்திருப்பதாக என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். யார் பிரதமர் வேட்பாளர் என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது பா.ஜ.,வை பொறுத்தவரை திறம்பட பணியாற்றும் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். பிரதமர் தேர்வு என்று வரும் போது கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடக்கும் என்றார். மோடி பிரதமர் பதவிக்கு வரஆசைப்படுவதாகவும், இதனால் அத்வானியின் ரத யாத்திரைக்கு அவர் ஆதரவு அளிக்க மாட்டார் என்றும் யூகங்கள் வெளியாகின ஆனால் குஜராத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்த அத்வானியுடன் இணைந்து பல இடங்களுக்கு சென்று சிறப்பான வரவேற்பையும் பெற்றுத்தந்தார் என்றார் மிகையாக இருக்க முடியாது.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...