திரிஷாவை தெலுங்கு படமொன்றில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக வதந்தி பரவியது. பட வாய்ப்புகள் இல்லாததால் அண்ணி கேரக்ட்டருக்கு இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் வெங்கடேஷ், மகேஷ்பாபு என இரு நாயகர்கள் நடிக்கின்றனர்.
வெங்கடேஷ்பாபுவின் தம்பியாக மகேஷ்பாபு நடிக்கிறார். வெங்கடேஷ் மனைவி வேடத்தில் திரிஷா நடிக்கிறார். அதாவது மகேஷ்பாபுவின் அண்ணியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.
இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது வருத்தப்பட்டார். அவர் கூறியதாவது:-
மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு நான் ஒப்பந்த மாகவில்லை. எனவே மகேஷ்பாபுவின் அண்ணியாக நடிக்கிறேன் என்ற கேள்வியே எழவில்லை. விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
திறமையை காட்டுவதற்கு /// மேல கொஞ்சம் காட்டுறாங்க .
ReplyDelete