நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 24, 2011

மகளுக்காக காத்திருக்கிறார்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஜாமின் கோரி, இன்று மனு தாக்கல் செய்வதால், டில்லி சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று அங்கேயே தங்கினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டதால், ஜாமின் கோரி கனிமொழி, இன்று மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி தாக்கல் செய்யப்படும் போது, பெண் என்ற வகையில், அவருக்கு உடனே ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.அவர் ஜாமினை சி.பி.ஐ., எதிர்க்காது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களுக்காகவே, கருணாநிதி நேற்று சென்னை திரும்பவில்லை என்றும், மகளுக்கு ஜாமின் கிடைத்ததும், அவருடன் சேர்ந்து சென்னை திரும்புவதற்காக, நேற்று டில்லியிலேயே தங்கி விட்டார் என்றும், தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.அதே சமயம், மகளைத் திகார் சிறையில் சந்தித்த போது, அதிக அளவு இருவரும் உணர்ச்சிவயப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...