நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, October 25, 2011

பீர் குடித்தால் எலும்பு வலுவடையும்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்   பாதிப்பில் இருந்து பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எலும்பின் உறுதிக்கு பீரின் பங்களிப்பு குறித்து ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு உறுதி அளிப்பதுடன் புதிய எலும்புகளின் பேரில் வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:

மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் நலமாக  இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம்.

பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் வலுவாக  வளரவும் உதவும்.

பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு   என்றே கூறலாம். அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 comments:

  1. அடடடடா பீர்'ல இம்புட்டு மேட்டர் எல்லாம் இருக்கா...?? புதுதகவலா இருக்கே...!!!!

    ReplyDelete
  2. கமென்ட் பகுதியில் உள்ள வேர்ட் வெறிபிகேசனை மாற்றுங்கள் அப்பத்தான் ஈசியா கமெண்ட்ஸ் போடமுடியும் நண்பா...

    ReplyDelete
  3. மதுபானம் அளவாக குடித்து, நன்றாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லதுதான், மேலை நாடுகளில் அப்பிடிதான் சாப்பிடுகிறார்கள்...!!!

    ReplyDelete
  4. -:)
    தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள் உறவினர்களிற்கும் !......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

    ReplyDelete
  6. MANO நாஞ்சில் மனோ said...
    கமென்ட் பகுதியில் உள்ள வேர்ட் வெறிபிகேசனை மாற்றுங்கள் அப்பத்தான் ஈசியா கமெண்ட்ஸ் போடமுடியும் நண்பா...


    நன்றி - மாத்திட்டேன்

    ReplyDelete
  7. MANO நாஞ்சில் மனோ said...
    அடடடடா பீர்'ல இம்புட்டு மேட்டர் எல்லாம் இருக்கா...?? புதுதகவலா இருக்கே...!!!!


    இன்னும் இருக்கு - தொடரும்ல

    ReplyDelete
  8. MANO நாஞ்சில் மனோ said...
    மதுபானம் அளவாக குடித்து, நன்றாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லதுதான், மேலை நாடுகளில் அப்பிடிதான் சாப்பிடுகிறார்கள்...!!!

    ஒத்த சொல்லு சொன்னாலும் சரியாக சொன்னிர்கள்

    ReplyDelete
  9. ரெவெரி said...
    -:)
    தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    உங்களுக்கும் உங்கள் கும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அம்பாளடியாள் said...
    என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள் உறவினர்களிற்கும் !......
    வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........


    உங்களுக்கும் உங்கள் கும்பத்தார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. பீர் விற்பனை எகிறிடும்!

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...