நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 5, 2011

ஐய்யோ சாமி - பதிவர்களே உங்களுக்காவது புரியுதா??

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது :

முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம்; முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக 1998ம் ஆண்டு நாள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன்; அந்த வழக்கில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அணையின் நீர் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; இதனை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை; அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தற்போது அணை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது;

இதே போன்று கூடங்குளம் அணுமின் நிலையம் வர கூடாது என சிலர் பிரச்னை செய்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்;

தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது;

சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது; அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்;

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவிற்கு குற்றம் செய்துள்ளாரோ அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார்.

 இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கனிமொழி குற்றம் நிரூபிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக சிறை செல்லவேண்டும்...!!

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...