நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, April 2, 2012

பெண்ணின் விதிகள் (ரூல்ஸ்..) - கலாட்டா கும்மி


மாற்று கருத்துக்கள் வரவேற்க படுகிறது - சீரியசாக தயவு கூர்ந்து எடுத்துக்கொள்ள (கொல்ல) வேண்டாம்.
  1. பெண் தான் எப்பவுமே விதிகள் அமைப்பது.  
  2. விதிகள் இடத்துக்கு இடம் மாறும் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி. 
  3. எல்லா விதிகளும் ஆண்களுக்கு தெரிந்து இருக்கோணும் என்று அவசியம் இல்லை  
  4. ஆணுக்கு  விதிகள்  தெரிந்து விட்டதோ என சிறு சந்தேகம் ஏற்பட்டாலோ, விதிகள் மாற்றப்படலாம் அல்லது திருத்தபடலாம்.
  5. பெண் பக்கம் தவறே கிடையாது.
  6.  பெண் பக்கம் தவறு இருப்பின், அது சரியாக புரிந்து கொள்ளவில்லை என்ற அடிப்படையில் தான் பார்க்கப்படும்.  
  7. விதி எண் 6 ஏற்று கொண்டால், ஆண் உடனடியாக மன்னிப்பு கேட்டு ஒப்புக்கொள்ளவேண்டும்.
  8. பெண் எந்த நிமிடத்திலும் தங்களின் மனநிலையை மாற்றிக்கொள்ளமுடியும்.
  9. ஆண்கள் எந்த சூழ்நிலையிலும் மனநிலையை மாற்றக்கூடாது அப்படி மாற்றனும் என்றால் பெண்ணிடம் முன் அனுமதி பெறல் அவசியம்
  10. பெண் எந்த நேரத்திலும் கோபம் அல்லது கவலையாகவும் இருக்க உரிமை உண்டு.
  11. பெண் கோபம் அல்லது சோர்ந்து போய் இருக்க விரும்புகிறார் ஆண் அமைதியாக இருக்க வேண்டும்.
  12.  ஆண்  கோபம் அல்லது கவலையாக இருக்க விரும்புகிறார் என்பதை பெண்ணிடம்  எந்த சூழ்நிலையிலும் தெரியப்படுத்த வேண்டும்.
  13. விதிகள் ஆவணப்படுத்த  முயற்சி செய்யவில்லை எனில் உடலில் காயம் உண்டாக்கும்  விளைவுகளை ஏற்படுத்தலாம்.

டிஸ்கி 1 : எப்ப்ப்பூடீ.....உங்களுக்கு தெரிந்த விதிகள் ஏதாவது இருந்தா சொல்லுங்க... தெரிஞ்சிக்குவோமே..
 விஸ்கி:லொள்ளு & ஜொள்ளு



ஆரஞ்சுப்பழம் ஆயுதம் எடுக்கிறதே!

 கண்களால்.


34 comments:

  1. ரொம்ப நொந்து போய் இருக்கீங்க போல.

    ReplyDelete
    Replies
    1. திருப்பியும் அதே கேள்வியா...சகோ.

      முதல்ல இதுக்கு டாட் வைக்கணுமே யோசிக்கிறேன்.

      Delete
  2. பெண் சிறு விசயத்திற்கு கூட கடலளவு கண்ணீர் சிந்தலாம். ஆனால், ஆண் உலகமே புரண்டாலும் கண்ணீர் சிந்த கூடாது

    ReplyDelete
  3. பெண் செருப்பு தைச்சது முதற்கொண்டு சின்ன விசயத்தை கூட அம்மாவிடமோ அல்லது பிறந்த வீட்டாரிடம் ஆலோசனை கேட்கலாம். ஆனால், வீடு கட்டுதல் போன்ற பெரிய விசயங்களை கூட தன் வீட்டாரிடம் மூச்சு விடக்கூடாது.

    ReplyDelete
  4. என்ன திரும்பியிருக்கு...? சரியில்லையே

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

      Delete
  5. அனுபவசாலி
    நீங்க சொன்ன கரட்டதான் இருக்குமுங்கோ

    இதில் நிறைய விஷயம் உண்மைதான் (:

    ReplyDelete
    Replies
    1. யப்படா....சப்போர்ட்டுக்கு வந்தீங்களே

      Delete
  6. இந்த விதிபடி நடந்தாத்தா சோறு கிடைக்குமா உங்க வீட்ல....
    ரொம்ம பாவமுங்க நீங்க!

    ReplyDelete
    Replies
    1. இந்த பீலிங் பிடிச்சிருக்கு

      Delete
  7. ம்ம்...ஓகே ஓகே...ரொம்ப அடி வாங்கி இருக்கிறீர்களோ..!

    ReplyDelete
  8. ஹெஹெ..ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...மீ பாவம்!

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொன்னா எப்பூடீ

      Delete
  9. "பெண் தான் எப்பவுமே விதிகள் அமைப்பது"

    அப்படியா ? முதல் பாயிண்டே எல்லாமே முடிஞ்சி போச்சி !

    ReplyDelete
  10. மிகச் சரியாகச் சொல்லிவிட்டு
    மாற்றுக்கருத்து கேட்டால் எப்படி ?

    ReplyDelete
    Replies
    1. மாற்று கருத்து இல்லை என்றால் சர்தான் - நன்றி

      Delete
  11. பெண்கள் நீங்கள் போட்ட படத்தில் உள்ளது போல செக்ஸியாக உடை அணிந்து வருவார்கள் அதை ஆண்கள் கவனித்தால் அம்மா தாயே சரணம் என்று கன்னத்தில் போட்டு கொண்டு அவர்களை தெய்வம் போல வணங்கி செல்ல வேண்டும் வேறு எந்த தவறான கண்ணோட்டத்தால் பார்க்க கூடாது

    ReplyDelete
    Replies
    1. அது எப்புடீயுங்க, இம்புட்டு கரைகிட்டா சொல்லிபுட்டீங்க.....விதி எண் 15.

      Delete
    2. //அது எப்புடீயுங்க, இம்புட்டு கரைகிட்டா சொல்லிபுட்டீங்க.//////

      எல்லாம் உங்க இந்த பதிவை படித்து அறிவைதீட்டியதால்தனுங்க.

      Delete
    3. எப்படியோ? அறிவை தீட்டி... வளர்த்தால் சரிதானுங்கோ.

      Delete
  12. இந்த விதியைஎல்லாம் மதியால் வெல்ல முடியாதோ?!

    ReplyDelete
    Replies
    1. வெல்லலாலாலாலாலாம்.............வேணாம் வேணாம் விட்ருங்.., விஷப்பரீச்சை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

      Delete
  13. எப்படியெல்லாம் பதிவு தரிங்க துணிச்சல் அதிகம் தான் போங்க .

    ReplyDelete
    Replies
    1. ஏதோ முடிஞ்சது அம்புட்டுதேன் ஹி ஹி ஹி

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  14. //விதிகள் ஆவணப்படுத்த முயற்சி செய்யவில்லை எனில் உடலில் காயம் உண்டாக்கும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.//

    என்னத்த சொல்றது? ...முடியில....

    ReplyDelete
  15. பேசாம ஆண்களின் (தலை )விதிகள்னு தலைப்பை மாத்திடலாமா....

    ReplyDelete
    Replies
    1. அட... இது கூட நன்னாஇருக்கே பேஷ் பேஷ்

      Delete
  16. ஆரஞ்சுப்பழம்....!!!!..ஹி..ஹி...கண்டிப்பா கலர வச்சுத்தானே(ஐ மீன் டிரஸ் கலர...) இப்படி சொன்னீங்க?. அந்த கடைசி வார்த்தை மட்டும் இல்லைனா....(ஏனுங்க...நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?)

    ReplyDelete
    Replies
    1. தப்பா.., இல்லைங்... கடைசி வார்த்தை ஹி ஹி ஹி

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...