நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 3, 2011

பலமான வரவேற்பு காத்திருக்கிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி 195 நாட்கள் டெல்லி திகார் சிறையிலிருந்து ஜாமீனில் நவம்பர் 29-ம் தேதி விடுதலையாகியிருக்கும் கனிமொழி இன்று டிசம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார்.

அவரை வரவேற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தி.மு.க.வினரை வரும்படி ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் கனிமொழியை தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் வரை ஊர்வலமாக அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியாக விமான நிலையத்திலிருந்து அறிவாலயம் வரை தொடர்ச்சியாக சரம் சரமாக பட்டாசு வெடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அறிவாலயம் வந்த பிறகு 1 மணி நேரம் கட்சியினருடன் அமர்ந்து பேசி அவருக்கு என்ன பதவி தரவேண்டும் என்ற முடிவும் எடுக்கப்படவிருக்கிறது.

சனிக்கிழமை கனிமொழிக்கு மகுடாபிஷேகம் நடந்தாலும் ஆச்சரியம் பட முடியாது?

பின்பு அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக சி.ஐ.டி. காலனிக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கே குடும்பத்தினரின் முக்கியமான நண்பர்களைச் சந்தித்து பேச இருக்கிறார்.

பின்னர், பிற்பகலில் தி.மு.க.வின் ’நிரந்தர’ உணவுத்துறை அமைச்சரான ஏ.வ. வேலு ஏற்பாடு செய்திருக்கும் சரவண பவன் ஹோட்டலின் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.


No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...