நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, November 15, 2011

2G ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்

நாட்டையே உலுக்கிய 2G அலைவரிசை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம்கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கியதாக மத்திய தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங் கூறியுள்ளார். சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப் போல 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ரூ.2645 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்

மத்திய கணக்குத் தணிக்கைக்கான இயக்குநராக இருந்த ஆர்.பி.சிங் பதவியில் இருந்தபோதுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பு குறித்த அறிக்கை வெளியாகி நாட்டையே உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் திமுக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டதோடு மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் திகார் சிறைசெல்வதற்கும் காரணமாக அமைந்தது.

2G அலைவரிசை ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியதாக அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.ஆனால்,ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கூட்டு நாடாளுமன்றக் குழு அவரை நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க அழைப்பு விடுத்ததையடுத்து இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் சிங். அவரிடம் கூட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் கூறியதாவது:

தொடக்கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் வருவாய் குறித்த கணக்கெடுப்புக்கெல்லாம் திட்டமிடப்படவில்லை. பின்னர்தான் அதை சேர்த்தனர். ஏலம் தொடர்பாக டிராய் எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கவில்லை. மத்திய அமைச்சரவையும் அதே முடிவில்தான் இருந்தது.எனவே ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.அப்படி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாக கணக்கிடவும் முடியாது.

என்னைப் பொறுத்தவரை ரூ.2645 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கருதுகிறேன். இந்த நிலையிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லை. மேலும் சிஏஜியின் முந்தைய அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும் சிங் கூறியதால் இவ்விவாகாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2 comments:

  1. //இவ்விவாகாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது//

    எதிர்பார்த்ததுதான்

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...