நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, October 23, 2011

சர்வாதிகார மன்மோகன் அரசு- ஜெயலலிதா

தமிழக அரசுக்கு தேவையான நிதியினை விடுவிக்காத மத்திய அரசினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
நேற்று புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பாராமுகத்தைக் குறிப்பிட்டு, மத்திய அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது, இது ஒரு சர்வாதிகார அரசு என்று குற்றம் சாட்டினார்.

இந்த தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சியில், சரிவிகித சமான நிலையினை எட்டுவதற்கான கொள்கைகளை வரைவு செய்யும் முக்கியப் பணியினை இந்த கவுன்சில்தான் மேற்கொள்கிறது. இந்தக் குழுவின் கூட்டமானது, எந்தவிதத்திலும் பயனற்ற, சம்பிரதாயமான ஒரு கூட்டம்தான் என்று ஜெயலலிதா கூறினார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது என்று கடுமையாகச் சாடினார். இதற்கு சான்றாக, மத்திய ஆளும் கூட்டணியின் மிக முக்கிய கூட்டணிக் கட்சியான திரிணமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்துக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை எடுத்துக் கூறினார் ஜெயலலிதா. இவை தமிழ்நாட்டுக்கு மறுக்கப்படுவதன் காரணத்தையும் வினவினார்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...