நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, October 8, 2012

உசுர சுண்டி இழுக்குறா..

வணக்கம்

இம்புட்டு நாளா அப்படி எனக்கு தோனலங்க ஏன்னா, பதிவுகள் மூலமே தொடர்புகள்  இருந்ததால்.

சமீபகாலத்தில் பதிவுலகில் நண்பர்கள் பலருடன் சாட்டிங்/ தொலைபேசி/ மின்னஞ்சல் தொடர்புக்கு பின் பதிவுலக  நண்பர்கள் எனது பெயர் என்ன? உங்களை எப்படி அழைப்பது என்று கேள்வி  கேட்டார்கள்.. அவர்களின் அன்பு அந்த நட்பு என் உசுரை  சுண்டி இழுத்தது. பின்ன இருக்காதா, எல்லோருக்கும் ஒரு பேரு இருக்க...  நானோ     வலைபூவின்  (ப்ளாக்) பேரில்.. அதானே நான் ஏன் என் பெயரை சொல்லாமல்  விட்டேன்... ஙே.

அந்த கேள்விக்கு விடையாக:

நண்பர்களே, சிறு வயது முதல் எனது பெற்றோர் அன்பாக செல்லமாக அழைத்த   முத்தரசு.....ஆம், இனி முதல் பதிவுலக நண்பர்களாலும் அவ்வாறே அழைக்க வேண்டுகிறேன்.  (அப்பாட ஒரு வழியா பேர  சொல்லிடான்டா...எலேய் நல்லா வருவல)

தெரியும் அடுத்து நீங்க என்ன எதிர்பாப்பிங்கன்னு...கேப்பிங்கன்னு......ம்  -எனது போட்டோ? வரும்... நேரம் வரும் போது அதுவும் வரும் -இப்பதானே  பாஸ்  பேர  சொல்லி  இருக்கோம்.

மனசாட்சி என்பது  ப்ளாகின் தலைப்பு -இன்னும்  சில  நாட்களுக்கு  எனது  பின்னூட்டங்கள் அதாங்க  உங்களின் வலைப்பூவில் நான்  இடும்  கருத்துக்களில்  எனது பெயருடன் அதாவது, முத்தரசு (மனசாட்சி) என்று இருக்கும் அப்புறம் முத்தரசு ஆக  இருக்கும்.

தொடர்ந்து உங்களின்  நல்ஆதரவுடன்......

புரிதலுக்கு நன்றி  

நேசமுடன்

கோவை முத்தரசு



ரொம்பவே ஒசந்தவங்க - வாழ்க வளமுடன்
 
வித்தியாசமான நிஜ ஜோடிகள்






வாழ்க பல்லாண்டுகள்



பார்ரா....., இப்பூடி கூட ?? 

இது கூட நல்லாத்தாம்யா இருக்க்கு 

மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல

நட்புக்கு மரணம் இல்லை

அப்படி இறந்தால்,

அது இயற்கையான மரணம் இல்லை

கொலை செய்யப்பட்டுள்ளது..

மனப்பாங்கு

அறியாமை

நான் என்னும் அகங்காரம்.

இவைகளால்.


விஸ்கி :  லொள்ளு & ஜொள்ளு

அச்சச்சோ அச்சச்சோ  கெளப்புறா கெளப்புறா

பழைய  நெனப்ப  கெளப்புறா

உசுப்புறா உசுப்புறா உசுர  சுண்டி இழுக்குறா

அச்சச்சோ அச்சச்சோ.... 




 நன்றி படங்கள் முகநூல் மற்றும் கூகிள்

38 comments:

  1. நட்புக்கு மரணம் இல்லை

    அப்படி இறந்தால்,

    அது இயற்கையான மரணம் இல்லை

    கொலை செய்யப்பட்டுள்ளது..
    மனப்பாங்கு

    அறியாமை

    நான் என்னும் அகங்காரம்.

    இவைகளால்.

    /////////////////////////////
    ஆம் மாம்ஸ் உண்மைதான்.....!

    ReplyDelete
    Replies
    1. ஆதரவுக்கு நன்றி மாப்ளே

      Delete
  2. நட்புக்கு மரணம் இல்லை என்பது உண்மைதான் தோழரே

    ReplyDelete
    Replies
    1. புரிதலுக்கு நன்றி தோழா

      Delete
  3. நட்புக்கு மரணம் இல்லை.... இதில்
    உண்மையான நட்புக்கு என்று இருந்தால் நன்றாக இருக்கும்.
    .....
    முத்தரசு....
    மனசாட்சி என்றதே நன்றாக இருந்தது. ஹா ஹா ஹா..
    ......
    போட்டோ வேற போடப்போறீங்களா...?
    வேண்டாம் மனசாட்சி... ஓ சாரி.. முத்தரசு.
    என்ன அதிலும் கண்ணாடி போட்டு முகத்தை மறைத்திருப்பீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. அது என்னங்க உண்மையான நட்பு - போலியான நட்பு - புரியல நட்புன்னா நட்புதான் சகோ

      Delete
    2. உங்க அளவுக்கு புறா படம் இல்லாமல் என்னுடைய பிம்பத்தையாவது போடுறேன் சரியா

      Delete
  4. மனச விட்டு சொல்ல இவ்ளோ நாள் :)

    ReplyDelete
  5. ஆமா முத்தரசு வந்தாச்சி முத்தழகி எப்ப ?

    ReplyDelete
    Replies
    1. என் வித்துக்கு சொத்தாக
      இரு முத்துக்கு தாயாக
      என் முத்தழகி வந்து
      14 ஆண்டுகளாச்சி...
      சகோ

      Delete
  6. வித்தியாசமான படங்கள அனைத்தும் சூப்பர்.

    ReplyDelete
  7. படங்கள் ஆயிரம் விசயங்கள் சொல்கின்றன...

    நன்றி...

    ReplyDelete
  8. எப்படியோ பேரைப் போட்டு ஒரு பதிவை முடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்

    இப்படி இருந்தால் தான் பழகுவேன் என்பது நல்ல நட்பும் அல்ல ஒருமுறை ஏற்றுக்கொண்ட பின் நண்பனின் குணத்தை மாற்ற எண்ணாமல் பிரிபவர் நல்ல நண்பர்களும் அல்லர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ சரியா சொன்னீங்க

      Delete
  9. முத்தரசு
    முத்தரசு
    முத்தரசு

    மூணு வாட்டி காதுல சொல்லியாச்சு இல்லேன்னா சாமி குத்தம் ஆயிடும்

    ReplyDelete
  10. இந்த படங்களையெல்லாம் தேட எவ்வளவு நேரம் எடுத்துப்பீங்க சகோ,,?

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி கூகிள் இமேஜில் நேரம் போவதே தெரியாத அளவுக்கு

      Delete
  11. கோயம்புத்தூர்ல எதோ கேரளாக்காரபுள்ளய ரவுசு உட்ருக்கிங்க..... அப்படிதானே

    ReplyDelete
    Replies
    1. ஐயய்யோ இது என்ன புது கதை - கேரளாகாரரே,
      நல்லாத்தாம்யா கோர்த்து வுடுரீக

      Delete
  12. ஆனாலும் கம்பூட்டர் ஜோடி....ஜிவ்வ்வ்வவ்வ்வ்

    ReplyDelete
  13. கோவை முத்தரசு வாழ்க வளர்க..!

    ReplyDelete
  14. கம்ப்யூட்டர் படம் அருமை

    ReplyDelete
  15. என் வித்துக்கு சொத்தாக
    இரு முத்துக்கு தாயாக
    என் முத்தழகி வந்து
    14 ஆண்டுகளாச்சி...
    சகோ ////


    கவிஞர் முத்தரசு . வாழ்க..

    ReplyDelete
    Replies
    1. மாப்ள

      புலவர்.... எங்க சொல்லுங்க புலவர்

      ஆங்.

      Delete
  16. முத்தரசுசுசுசுசுசு அழகான பேரு அண்ணா !
    அண்ணா ட்ரீட் எப்போ ?

    ReplyDelete
  17. அச்சச்சோ முத்தரசு..... நல்லா இருக்குது பாஸ்......
    நீளமான பதிவெங்கிறதி இதைத்தானோ.....(படங்களைச் சொன்னேன்)

    ReplyDelete
  18. chi அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete
  19. முத்தரசு... அழகிய தமிழ் பெயர்...

    படங்கள் அழகிய தேர்வு... தொடருங்கள் படைப்புக்களை இனி முத்தாக...

    ReplyDelete
  20. வரவேற்கிறேன்...
    என்னதான் பெயரை மாற்றினாலும் லொள்ளு ஜொள்ளு எல்லாம் போகாது போல...

    ReplyDelete
  21. எலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் முத்தரசுசுசுசுசுசூசூசூசூ....
    சும்மா குதிரும்பி பாக்கிறயானு கூப்பிட்டு பார்த்தேன் பங்காளி.....:-)))

    வித்தியாசமான சோடிகள் சூப்பர்....
    கடைசி அம்மனி படம் ஆல்சோ...ஹிஹிஹிஹி :-))))

    ReplyDelete
    Replies
    1. யோவ் பங்காளி ஏம்யா கத்துரீறு செத்த இரும் வாறன்

      Delete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...