நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, October 19, 2011

ஆண்களை கடத்தி பாலியல் சகோதரிகள் கைது

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள் 3 பேரை பொலீசார் கைது செய்தனர்.
ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா(28), சோபியா(26), நெட்காய் கோக்வாரா(24). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் பொது மக்களை காக்கும் பொலிஸ் ஒருவரையே கடத்திச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களின் செயல் குறித்து பொலீசாருக்குத் தெரிய வரவே அவர்களை பொலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

1 comment:

  1. இது மாதிரி நம்மள யாரும் கடத்த மாட்டேன்கிராங்களே

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...