நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, August 13, 2012

அவளது பார்வை

வணக்கம்


மனசாட்சியின் பஜ்ஜிகடையில், பஜ்ஜியை (பதிவுகள்)  சுவைத்து    விரும்புவோர்கள்   இதுவரையில் 100..

ஆரம்பித்து வைத்த முதல்வர்   எங்கள்  சித்தப்பு சி.பி.செந்தில் குமார் (அட்ரா சக்க) அவர்களுக்கும், அதை தொடர்ந்து 98 உறுப்பினர்கள்  அனைவருக்கும்   மற்றும் 100 வது உறுப்பினராக  இணைந்த மாணவி சிவரஞ்சனி சதாசிவம் (சிவரஞ்சனி சதாசிவம்) அவர்களுக்கும் கோடி நன்றிகள்.

ஒரு சிறப்பான ஆச்சரியம் என்னவென்றால்....உங்களுக்கே தெரியும் மனசாட்சிக்கு  கோவை தான்  பூர்வீகம்.  மனசாட்சியின் பஜ்ஜியை (பதிவு) விரும்புவோர் வரிசையில் முதல் மற்றும் 100 வது  இருவரும் அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் (ஈரோடு)  மிக்க மகிழ்ச்சி.

இது வரை நம்ம கடைக்கு வந்து சுவைத்து சென்றவர்கள் மற்றும் விரும்பி  சுவைத்து கொண்டு இருப்பவர்கள் - காரம், மணம், குணம், உப்பு, குறை, நிறைகளை பின்னூட்டங்களில் கூறி  செம்மை படுத்தும் அனைத்து நட்புகளுக்கும் கோடான கோடி நன்றிகளை மகிழ்ச்சியுடன்  இங்கே பதிவு செய்கிறது  மனசாட்சி.  எல்லாம் உங்கள் வரவாலே... ஆதரவாலே.


பொன்வண்டு:  ஊருக்குள்ள ஒரு வதந்தி தெரியுமா?

தவளை: கொய்யால, அதனால தானே நான் இங்கே வந்து தொங்கிட்டு இருக்கேன்.


எப்போதும் நினைவில் கொள்ளவும்

உங்களை ஒருவர் முட்டாள் ஆக்குகின்றார் எனில்

அவரது முன்னிலையில் சிரித்து விடுங்கள்
  
நிச்சயமாக, நீங்கள்  அவர் இல்லாத போது அழுவீர்கள்

ஏனெனில்,

அந்த முட்டாள்கள் நமது உண்மையான நண்பர்கள்



மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல  

அவளது பார்வை:

உலகின் மிக சரியான மனிதன் அவளுடைய தந்தை

உலகின் மிக தவறாக பயன்படுத்தபடுபவன் அவளுடைய சகோதரன்

உலகின் மிக அழகான மனிதர் அவளுடைய  மகன்

உலகத்திலேயே அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் அவளுடைய சகோதரியின்  கணவன்

உலகின் மிக நன்றி உள்ள, நம்பிக்கை உள்ள   மனிதன் அவளுடைய மரூமகன்

ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும்  மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்த இழுபறியா  மனிதன் அவளுடைய  கணவர்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஆடி மாசத்துல பிரிச்சி வச்சிபுடாங்கலேன்னு

எம்புட்டு சோகம், வருத்தம் பயபுள்ள முஞ்சில

ஏக்கத்துல்ல உர்ருன்னு........... அடி.....ஆத்தி....





Sunday, August 12, 2012

உங்களுக்கு தெரியுமா அஞ்சலி

வணக்கம்

இந்த பதிவுக்கான  செய்தி சேகரித்து எழுதி சில மாதங்களாகவே
டிராப்டில் இருந்தது இன்று நண்பர் மணிமாறன் (மனதில் உறுதி வேண்டும்)
அவர்களின் பதிவு வாசித்தேன,மிகவும் வேதனையாக இருந்தது மனமோ பாரமானது.

உங்களுக்கு தெரியுமா??

10% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்களுக்கு
மணிக்கட்டு, வெப்ப நோய்த்தாக்கம் போன்ற  நோய்கள் பாதிக்க பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

20% மென்பொருள் தொழில்துறையில் உள்ளவர்கள்  அவர்களது துறையை சார்ந்தவர்களேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்/விரும்புகிறார்கள். 

30% மென்பொருள் தொழில் நிபுணர்கள்  இருபாலரும் அலுவலகம் மற்றும் வீட்டு  பொறுப்பை வெறுக்கிறேன்.

40% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள்  இந்தியா அல்லது வெளிநாடு எங்கு செட்டில் ஆவது என்ற குழப்பத்திலேயே வாழ்கிறார்
கள் 

50% மென்பொருள் நிபுணர்கள் தங்களின் வங்கி கணக்கில் எந்த சேமிப்பும் இல்லை.

60% மென்பொருள் தொழில் நிபுணர்கள்  அவர்கள் பெரும்  தற்போதைய ஊதியங்கள் திருப்தி இல்லை

70% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள்  உலகம் முழுவதும்  8 மணி நேரத்துக்கும் மேலேயே வேலை செய்கிறார்கள்

80% மென்பொருள் தொழில்துறை சார்ந்தோர்கள் பெற்றோர்கள் விட்டு விலகி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்


90% மென்பொருள் தொழிலில்  அவர்களின் வாழ்க்கை கட்டமைப்பில் - காலக்கெடுக்கள்,  திருப்தி, ஊக்க தொகை, பதவி உயர்வுகள், சம்பள உயர்வு, ஆன்சைட் பயணங்கள், மனைவி, குழந்தைகள், விசா  மற்றும் கடமைகள் பற்றி மகிழ்ச்சியாக இல்லை.

100% மென்பொருள் தொழில்துறை சார்ந்தவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது குறைந்தது ஒரு முறையாவது கணினியை விடுத்து வேறு ஏதாவது செய்யனும் விருப்பம் / மற்றும் நினைகிறார்கள்  



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு 
அஞ்சலி! மச்சி........ அஞ்சலி மச்சி......... அய்யோ! அஞ்சலி! மச்சி!

ஷ்.........யபா முடியல

Saturday, August 11, 2012

மானு சிக்குமா

வணக்கம்


மானை காரில் (Toyota -land cruiser)  விரட்டி பிடிக்கும் மஹாபுருசர்கள்...

புட்ரா புட்றா....மவனே...மாட்டுனா, பிரியாணி தான்..  





புது வகையான ஆடை அறிமுகம்.....

இந்த உடை போடுறதும், போடாம இருப்பதும்...அட போங்கப்பா..





                                               மாடும்  மானபங்க படுத்தும்.....



மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

நீங்கள் காலையில் நினைக்கும்  முதல் நபர்


மற்றும் இரவு நினைக்கும் கடைசி நபர்

ஒன்று உங்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்


அல்லது உங்கள் மனதில் வலி ஏற்படுத்தும்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


குளிச்சா இந்த மாதிரி குளிக்கணும்......இது குளியல் 

(மாப்ஸ்...இப்பூடி எங்கே போனா  குளிக்கலாம்)




குறிப்பு: ஸ்பேம் பாக்ஸ் தெரியுமா

Wednesday, August 8, 2012

முந்தானை முடிச்சி

வணக்கம்


   ஒரு நாட்டில்........, மிகவும் குழப்பமான நாள்

தந்தையர் தினம் 

80%  யாருக்கு வாழ்த்து தெரிவிப்பதுன்னு தெரியாது

20%  பயந்து நிலையில்.. யாரேனும் வந்து வாழ்த்தி விடுவார்களோன்னு.



புரிதல் இல்லை என்றால் நாய் கூட குடும்பத்தை சின்னா

 பின்னாமாக்கும்.


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எல்லோரும், நேசத்தால் காயம்/ரணம்   என்கிறார்கள் 

ஆனால் அது உண்மை இல்லை

தனிமை காயப்படுத்துகிறது

நிராகரிப்பு காயப்படுத்துகிறது

யாரோயோ இழந்தது காயப்படுத்துகிறது

பொறாமை காயப்படுத்துகிறது

எல்லோரும்   இந்த விஷயங்களால்  குழப்பி, பலியோ நேசத்தின் மேல்


ஆனால் உண்மையில்

நேசம் என்ற ஒன்று தான் உலகில் அனைவரையும் எவ்வளவு வலிகளுக்கு இடையுளும் ஓன்று சேர்க்கிறது


( குறிப்பு _ நேசம் = அன்பு ஆனால், இங்கு காதலை  குறிப்பிடவில்லை)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

சேலையில் பார்த்ததுண்டு பல வகையான முந்தானைகள்...

இப்பதான் பாக்க நேர்ந்தது புது வகையான  முந்தானை

Monday, August 6, 2012

திருட்டு முழியிலும் திர்ல் இருக்கு

வணக்கம்


யாரோ ஒருவர் கேட்டார் ஒரு பெண்ணிடம்:

நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா?


அந்த பெண் பதிலளித்தார்:

மனைவி - ஆமாம்,   24 மணிநேரம்  வீட்டில் முழு நேரம் வேலை செய்பவள்.



நான் ஒரு அம்மா ,ஒரு மனைவி, மகள் மற்றும் மருமகள்.

நான் ஒரு அலாரம் வைத்த கடிகாரம் தான்

ஒரு சமையல்காரி

வேலைக்காரி

ஒரு ஆசிரியர்

ஒரு பணியாளராக

ஒரு ஆயா

ஒரு நர்ஸ்

ஒரு பாதுகாப்பு அதிகாரி

ஒரு ஆலோசகரும்

ஒரு இன்ப நலம் பேணுபவர்

எனக்கு   விடுமுறை இல்லை

மருத்துவ விடுமுறையோ  அல்லது பாதி நாட்கள் வேலை அப்படி  எதுவும் இல்லை......

முழுவதும் வேலை வேலை மற்றும் இரவு பகல்  இல்லாமல், சொற்சொடர் தான் நான் வாங்கும் சம்பளம்..

நீங்கள் வீட்டில் எல்லா நாளும் என்ன பண்ணுவீர்கள் என இனி எவரேனும் கேட்டால்........................??       கேட்பாங்க...

எல்லா அம்மாக்களும், மகள்/மருமகளுக்கும் , சகோதரிககளுக்கும்
இது சமர்ப்பணம்.



மனபிராந்தி : காத்துவாகில & காதுல

வரலாற்று உண்மை,  உள்நாட்டு போர்கள் நடந்த போது,

அனைவரும் வாசித்து தெரிந்துக்கொள்ள, படைகள் எந்த சேதம் இல்லாமல் திரும்பி வந்தது என எழுதி வைப்பார்கள். 
 
O பேர் பலி (O கொல்லப்பட்டார்கள்), அதாவது O Killed இங்கிருந்து நாம் OK  என்ற சொல்லை பயன் படுத்த ஆரம்பித்தோம்.

அதாவது ஆல் இஸ் வெல்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

                             திருட்டு முழியிலும் திர்ல் இருக்கத்தான் செய்து...

தூக்கமோ  கண்ணுக்கு எட்டா தொலைவு ... 



முக்கிய குறிப்பு: 

Wednesday, August 1, 2012

என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

வணக்கம்


யாரு யாரை பிடிச்சிருக்காங்க


தற்கொலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்


கேர்ள் பிரண்டு போய்ட்டா...என் இதயம் ஓடைஞ்சிடுமா.. 

ஹே.. என் இதயம் என்ன சீனா தயாரிப்பா?

அப்பா சொல்லி இருக்கார் - பெண்களை நம்பாதேன்னு


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உதடுகளால் செய்ய முடிந்த  இரண்டாவது 
சிறப்பு மிக்க  விஷயம் புன்னகை


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கோடம்பாக்கமே திரண்டு  காலண்டர்  தயாரிப்பில் அதுவும் கவர்ச்சியான காலண்டர்  தயாரிப்பில் ஈடுபட்டது...  நம்ப முடிகிறதா?

சினிமா கிரிக்கெட்டுக்காக....அமலா பால், சமீராரெட்டி, ஸ்ரேயா, பிரியாமணி, ரிச்சா, சார்மி, பாவனா போன்ற தமிழ்சினிமாவில் ஜொலிக்கும் கனவுக் கன்னிகளின் போட்டோ சூட்டிங் காட்சிகளை நீங்களும் பாருங்கோ:


இலியானாவ  பாத்தாலே கடுப்பாகிடும் , குளிச்சிட்டு ஒரு துண்ட கட்டிட்டு  படுத்திற பாடு இருக்கே:


முக்கிய குறிப்பு:

Monday, July 30, 2012

குடி மகளே பெரும் குடிமகளே

வணக்கம்

ஹேர் ஸ்டைல் 2012


குடி மகளே ஹ்ஹா ஹஹா பெரும் குடிமகளே.....

 உங்கப்பன் ஆழ்துளை கிணத்துல  பெட்ரோல் எடுக்குறான் நீ புல் கட்டு கட்ற

தக்காளி செத்தான்  செவிலு.....
  

சிரியா நாட்டு பொண்ணுங்க

டி ஷர்டுல அந்த நாட்டு அரசியல் தலங்க

அதுல எழுதி இருக்குங்க,

நாங்கள் உன்னை விரும்புல
 (மொழிபெயர்ப்பு நண்பனுக்கு நன்றி) 

கொய்யால... அப்புறம் எதுக்கு அந்தாளு படத்தை நீ போட்டுகிற





என்ன ஒரு கற்பனை 

சர்தாரின் தலைப்பாகை....மார்பு கச்சையாக... 

யப்பா எப்பூடி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா

தலை சுத்துதா........ தலை கீழ பாருங்க...
 


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல 



   அழகு சந்தோஷத்தை கொடுக்கும்
      ஆனால்,
   மகிழ்ச்சி எப்போதும் அழகு சேர்க்கும்.



சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு வழிகள் உள்ளன.

உங்களை நீங்கள்  உண்மையிலேயே மேம்படுத்தவும் அல்லது உங்கள் எதிர்பார்ப்புகளை குறைக்கவும்.




 விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

முந்தய பதிவின் தொடர்ச்சியாக   அடிச்ச அடியில  ஒரு பய புடிக்கல......சரி
வாரீயலா....மாத்தி மாத்தி போட்டு புடுச்சி வெளயாடுவோம்


முக்கிய அறிவிப்பு:

ஸ்பேம் பாக்ஸ் உசார்  

Wednesday, July 25, 2012

போதை ஏறி போச் மாமோய்

வணக்கம்

நண்பர்களே இது சரக்கு பத்திய ஆய்வு  பதிவு - சரக்கு  விரும்பாதவர்ளும்  போதை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்


அதாம்பா, சரக்கு போட்டா சும்மா ஜிவ்வுன்னு ஏறுமே போதை அதை பற்றிய சிறு ஆய்வு.

போதையில மூணு வகை போதை இருக்குங்க

அது என்ன மூணு வகை போதை

அது எந்த விதம் அப்படின்னா... (கொய்யால சீக்கிரம்  சொல்லும்வோய்  நிறைய  இடத்துக்கு  போகணும்..  ஏலேய் என்னல சவுண்டு அங்கே )


ஒக்கே,,. ஒக்கே சொல்றேன்:



ஒண்ணு  அற்பபோதை  

ரெண்டு  ஆடம்பர போதை 

மூணு  ராஜபோதை




அற்பபோதை 

அப்படின்னாக்க,

குவாட்டார் சரக்கில் மூடியில் கொஞ்சூண்டு ஊத்தி குடிச்சிட்டு பயபுள்ள பன்ற அளப்பரைக்கு (ஏய் ..இந்த,.. அந்தா..... தெக்கால... வடக்கால... சும்மா
கண்டமேனிக்கு அக்கப்போர் பண்ணி அடிவாங்கி சுருண்டு போய்டுவான்)   விடிஞ்ச என்ன நடந்ததுன்னு ஒரு மண்ணும் புரியாது அதுக்கு பேரு அற்பபோதை 


ஆடம்பர போதை

குவாட்டார் சரக்கை  குடிச்சிட்டு பயபுள்ள பன்ற  பந்தாவுக்கு   (வெய்ட்டரை  அழைத்து சோடா, வாட்டர், சைடிஷ், மீதி பணத்தை கீப் டிப்ஸ்)
அடிச்ச போதை  அரைகுறையா  தின்னுபோட்டு வாந்தி எடுத்து நாசம் பண்ணி  விடிஞ்ச தலைவலியோடு லொளாயே படும்  பய புள்ளக்கு பேரு  ஆடம்பர போதை


ராஜபோதை

சரக்கை புல்லா  (புல் பாட்டல) அடிச்சிட்டு  சும்மா  ஸ்டேடியா...  புல் மீல்ஸ் ஐ ஒரு கட்டு கட்டிட்டு அப்பூடிக்க நடந்து....,டூ வீலோ -போர் வீலோ ஓட்டிகினு வீட்டுல  போய் சத்தமில்லாம  தூங்கிறரான்  விடிஞ்ச ரொம்ப தெளிவா பொழப்பை பார்த்து  தானும்  சந்தோசப்பட்டு   மற்றவர்களையும் தொல்லை பண்ணாமல் இருக்காய்ங்க பாருங்க  அது தான்      ராஜபோதை. 

தொடரும்...... 
ரொம்பநாளா விளக்கம் கேட்டு தொந்தரவு பண்ண மக்காஸ்  இதுதம்யா போதையின் உள்குத்து ரகசியம்.

இப்ப இதுல யாரு யாரு எந்த எந்த கேட்டகிரின்னு சண்டை போடாம.... அப்படியே முடிஞ்ச பின்னூட்டத்திலும் செப்பலாம்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

 மக்காஸ்,.... மூன்று போதையும் ஒரே  இடத்துல


இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும்

முப்போதையும் மூவர்ணத்தில்

அகர வரிசையில்...அ ,  ஆ , ரா .




முக்கிய குறிப்பு:   ஸ்பேம் பாக்ஸ்  

Monday, July 23, 2012

 எம்புட்டு பேரு கெறங்கி கெடக்குறாங்க



இதுக்கு பேர் தான்.... கிடுக்கு  பிடியோ
வாழ்வா சாவா.... 
 





பிரிந்தவர் கூடினால்.......


ஷ்... ஒரே.. வலிப்பா



கீழ் காணும் முன்று மற்றும் நான்காவது (பொள்ளாச்சி) படங்களை எடுத்தது மனசாட்சி தனது காமரவில், எடுத்த இடம் கோவை வ உ சி பூங்கா:  



நாங்களும் ப்ரோபஸ்னல் போட்டோகிராபர் தானுங்கோ


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

இந்த படம் ஒலக  சிறப்பு மிக்கதுங்க ஏன்னா,

இரு பதிவர்கள் சந்தித்து கொண்டது இங்கு தான். 

பொள்ளாச்சியில் உள்ள  பண்ணை வீடு,  கடந்த ஜூன் (2012) மாதம் ஒரு மாலை  பொழுதில் பிரபல பதிவருடன் நாட்டு நடப்பு பேசி,.. நீராகாரம் முடித்து... சிறப்பான சந்திப்பு.

மனசாட்சியை வந்து சந்தித்த பதிவர் இந்திய புகழ் பெற்ற பிராப்ள ச்சே பிரபல பதிவர்........,. யாருன்னு சொல்.... அவருதான் பிரபலமாச்சே.

(யோவ், யாருன்னு வெளக்கமா சொல்லும்மோய் ஒண்ணும் வெளங்கல..... யாருல அது அங்கிட்டு சவுண்டு உட்றது பிச்சி புடுவேன் பிச்சி)


விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு

கொய்யால இப்ப தான் புரியுது அம்புட்டு

பெரும் ஏன் கெறங்கி கெடக்குறாங்கன்னு

மல மல கல கல ன்னு...சிரிப்பை சொன்னேன்


முக்கிய குறிப்பு:

பின்னூட்டங்கள், ஸ்பேம் பாக்ஸ்  - விழிப்புணர்வு  

Wednesday, July 18, 2012

பில்லா 2 - தல வழி

காலங்காத்தாலைல இருந்தே நொய்யு நொய்யுன்னு.......அடேய்  நாதாரி இந்த கொசு தொல்லை தாங்கலடா....

என்னதானுங்டா உங்கபிரச்னை?

அண்ணே நீங்க ஒரு மேதைன்னே..

அடேய் ங்கொக்கமக்கா நிர்த்து .....மேட்டருக்கு  வா

அண்ணே சகுனி படத்துக்கு விமர்சனம் பண்ணீங்

கொய்யாலே நா எப்படா பண்னேன்?

இல்லீங்னே கருத்து சொன்னீங்

ஆமா சொன்னேன் - சகுனி - முடிச்சவுக்கி.... அதுக்கு இப்ப என்னாங்கற.?

எப்டீங்ணே?

டேய் அதுக்கெல்லாம் லிவர் வேல செய்யணும்டா கோமுட்டிதலையா.... அந்த படத்துல எத்தனை முடிச்சை சகுனி அவுக்காறு (படத்திலும் இடைவேளைக்கு முன்  ஒரு டயலாக் இருக்கே)  அதை தான்டா ஒத்தை வார்த்தையில் சொன்னேன்.

அண்ணே இந்த லிவருன்னா ?..

தெரியலயா? அதுக்குத்தான்டா ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்றது, அடேய் கோமுட்டி தலையா, மூளை மட்டும் வேலை செஞ்சா போதாது, லிவரு அந்த லிவருதான்டா முக்கியம், லிவரு போச்சுன்னா நீயும் போயிருவ ஸ்ட்ரெயிட்டா ஊ ஊஊதான்.

அண்ணே எல்லாம் சரிண்ணே இப்ப தல நடந்திருகற ச்சீ நடிச்சிருக்கற பில்லா - 2 அதுக்கும் உங்க விமர்சனம் ?

டேய் ஸ்டாப்பு நோ விமர்சனம் ஒன்லி சிங்கிள் வேர்டு

பில்லா II - தல வலி 

என்னனே இப்புடி சொல்லிபுட்டீங்க...

வேற எப்பட்றா சொல்லணும் பாஸ்பரஸ் வாயா..?

அடேய் அந்த படம் நீ பார்த்தயில்ல ஆரம்பச்சதுல  இருந்து முடியிற  வரைக்கும் தல போகற வழியெல்லாம் எம்புட்டு வேதனை, ரணம் இவ்வளவு சிக்கல் (படத்துல தலயோட டயலாக் 'என்னோட வாழ்க்கைல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்குனதுடா”) அதெல்லாம் வலிதானடா கோமுட்டி தலையா அதான் சொன்னேன் பில்லா II  தல வலின்னு .

அண்ணே இன்னும் வேற ஏதோ கருத்துன்னு சொன்னீங்களே?

அதுவாடா,  இங்க பதிவுலகத்துல சினிமா விமர்சனம் பண்றவங்க  கொள்ள பேரு இருக்காங்கடா மொதல்ல அவுங்க எல்லாம் சொல்லட்டும் அப்பறமா நாம சொல்லலாம்..


அண்ணண்ண்ணே ....


என்னடா சவுண்டு?


அண்ணே,, அடுத்து துப்பாக்கி வருது.....

ஓங்கி அப்புனன்னா உங்கன்னத்துல சவுண்டும் வரும், அடுத்து துப்பாக்கி வரும்.....விஸ்வருபம் வரும்... கோச்சடையான் வரும்...... அதுக்கு என்னடா இப்ப? ...               அடேய் கிளிசரின் தலையா எல்லாம் வரட்டும்டா  வச்சிக்கலாம்..

எப்புடின்னே இப்படி எல்லாம் திங் பண்றீங்க?

அதத்தாண்டா சொன்னேன் கோமுட்டி தலையா லிவருன்னு

அண்ணே எனக்கும் சொல்லி தாங்கண்ணே

அடேய் கோமுட்டி மண்டையா  இதெல்லாம் சொல்லி வரக்கூடாதுடா தானா வரணும்,,,.. அதுக்கு நீ ஒரு நாலு விசயத்தை தூக்கி கடாசனும்  முடியுமா?

என்ன அண்ணே அந்த நாலு விஷயம் ?

அப்பூடி  கேளு,

அரசியல், சினிமா, ஜாதி, மதம்  இந்த நாலையும் தூக்கி  அப்பாலிக்கா  வச்சுட்டு  சாதாரணமா எலும்பு,  சதை, ரத்தம்,  மனசாட்சி உள்ள மனுசனா தமிழனா  வா எப்பூடின்னு சொல்லி தாரேன்.

இப்ப அந்த கிளாஸ் எடு  லார்ஜை உத்து..    தொடரும் 


Sunday, July 15, 2012

இப்படியும் ஒரு பதிவர் - நல்லா வருவீக

வணக்கம் நண்பர்களே

ஒரு முறை அடித்தால்  சரி தெரியாமா கை பட்டுடுச்சி, ஒக்கே.

மீண்டும் அடித்தால் என்ன அர்த்தம் கொழுப்புன்னு அர்த்தம்.

மனசாட்சி ஏற்கனவே தனது பதிவில் வலை பூக்களில் கமண்ட்டு போட்ட அதுவாவே டிலிட் ஆவுதே இல்ல டிலிட் பண்றாங்களா புரியலையே  கேட்டு இருந்தது.

இதுக்கு நண்பர் குருவியார் கூட நான் அப்படி அல்ல என்று விவரமாக விளக்கமாக காமடியாக ஒரு பதிவே போட்டார் மனசாட்சி உள்ள குருவி .

சரி மேட்டருக்கு வாரேன்.... சரின்னு அமைதியா  விட்டுட்டேன்.

சமீபத்தில், சில பதிவுகளை  படித்து விட்டு   கமண்டு  போட்டேன்  கொய்யாலா மீண்டும் பழைய அதே சம்பவம், ஒரு வேளை ஸ்பேம் பொட்டில விழுந்து இருக்கும்னு,  நினச்சி   -  மீண்டும் கமன்ட் போட்டேன்  (please release my comments from your spam box )  தமிழ்  மற்றும்  ஆங்கிலத்தில்  போட்டேன்... கொன்னியாள அதுவும்   வரல....கமன்ட் போட்டதும் இருக்கும் ரீ பிரெஸ்  பண்ணா  ஓடி  போய்டும்.
  
சில   பதிவர்கள் செவி சாய்த்தார்கள் ஆனா சில  பதிவர்கள்்.?!  தொடர்ந்து கூறியும் செவி சாய்க்காத... அந்த ஆணியே புடுங்கவேண்டாம் என முடிவு செய்து தெரிஞ்சவங்களா   போனதால் தூக்கி  விட்டேன்  என் தெரிஞ்சவங்க லிஸ்ட்ல இருந்து,    இல்லைனா,..... 

அவர்களின் பதிவு லிஸ்ட்ல வரும்  போய்  படிக்கணும் கமண்டனும்  அவுக    டெலீட்  பண்ணுவாக  தேவையா?????  என்ன மக்காஸ் சர்தானே. (எதோ நம்மால் முடிந்தது)  ஏன்னா எந்த பதிவு படிச்சாலும் மனசாட்சி வந்து போன சுவடு விட்டு வருவது வாடிக்கை.

(மனசாட்சி போட்ட காமன்டுகள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிருக்கேன் தேவைனா ரீலிஸ் பண்ண வேண்டியது தான்... நண்பர்கள் வேண்டுதலுக்கு இணங்கி இப்ப வெளியிடல)

அதே நேரத்தில் புரிந்து கொண்ட அன்பு உள்ளம்  பதிவர் சிட்டுகுருவி

மனசாட்சி கமண்டு ஸ்க்ரீன் ஷாட் :





புரிந்து கொண்ட அன்பு நெஞ்சம் பதிவர் கலாகுமரன்

இதோ அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்:



மனசாட்சியின் வேண்டுதல் என்னான்னா - தயவு கூர்ந்து உங்களின் பதிவை வெளியிடும் முன் உங்களின் முந்தைய பதிவு கமன்டுகள் எதாவது ஸ்பேம் பெட்டியில்...பாருங்கள்.....ரீலிஸ் பண்ணுங்கள்..

இல்லை என்றால்  உங்கள் விருப்பம் டிலிட்...... எப்படியோ... அதுக்கு  கமன்ட் பெட்டியே நீக்கிவிடலாமே!!??   நல்லா வருவீக.



கொசுறு: ஏலேய் மாப்ளைங்களா உங்களுக்கு அந்த பதிவரின் லிங்க் அனுப்புறேன்.

Saturday, July 14, 2012

இப்பெண்ணின் பார்வையால்

வணக்கம்

   
பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய் ஒரு துளி 25 லிட்டர் தண்ணீரை மாசுபடுத்த முடியும்

மிக உயரமாக வளரும் கற்றாழை (saguaro cactus)  20 மீட்டர் உயர் வரை வளர்ந்து 300 ஆண்டுகள் வரை வாழும்

சராசரி வாடிக்கையாளர் எதையும் வாங்கும் முன்பு பேரங்காடியில் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள்


நாக்கு தான் உடலில் வலுவான தசை



நெருப்புக்கோழி மட்டுமே  சிறுநீர்ப்பை கொண்ட பறவை




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


எல்லோரும்  சொல்கிறார்கள்  காதல் இல்லாமல்
வாழ முடியாது என்று..??!!

ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது
என்று  மனசாட்சி  நினைக்கிது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இந்த பார்வையால் தான் பல பேர் செத்து செத்து பொழைக்கிறான்