நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label அவள். Show all posts
Showing posts with label அவள். Show all posts

Saturday, July 14, 2012

இப்பெண்ணின் பார்வையால்

வணக்கம்

   
பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய் ஒரு துளி 25 லிட்டர் தண்ணீரை மாசுபடுத்த முடியும்

மிக உயரமாக வளரும் கற்றாழை (saguaro cactus)  20 மீட்டர் உயர் வரை வளர்ந்து 300 ஆண்டுகள் வரை வாழும்

சராசரி வாடிக்கையாளர் எதையும் வாங்கும் முன்பு பேரங்காடியில் 15 நிமிடங்கள் செலவழிக்கிறார்கள்


நாக்கு தான் உடலில் வலுவான தசை



நெருப்புக்கோழி மட்டுமே  சிறுநீர்ப்பை கொண்ட பறவை




மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல


எல்லோரும்  சொல்கிறார்கள்  காதல் இல்லாமல்
வாழ முடியாது என்று..??!!

ஆக்சிஜன் மிகவும் முக்கியமானது
என்று  மனசாட்சி  நினைக்கிது.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

இந்த பார்வையால் தான் பல பேர் செத்து செத்து பொழைக்கிறான்   

Wednesday, June 20, 2012

திருமணத்துக்கு பின் இது சகஜமா

ஒரு காலத்தில், ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டுவிழா  கொண்டாடினார்கள்

அவர்கள் இருவருக்குள்ளும் 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மோதல், சண்டை சச்சரவு,  குக்கர் மூடி வீசுறது, பூரி கட்டை எறிவது இது எல்லாம் நடந்ததே இல்லை. இந்த செய்தி நகரில் பிரபலமாக,
 
உள்ளூர்  செய்தித்தாள் ஆசிரியர் இந்த ரகசித்தை  கண்டு  பிடிக்க  ஆவல் கொண்டு, தம்பதிகளை சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

அதன் பின் நடந்த உரையாடல்:


ஆசிரியர்:.. "ஐயா, இது அதிசயமாகவும்  நம்பமுடியாததும்  எப்படி இந்த சாதனை செய்ய முடிந்தது?

தனது பழைய தேனிலவு நாட்கள் நினைவுக்கு வர  கணவர் கூறினார்:


"நாங்கள்  திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு ஊட்டி போயிருந்தோம் .
இறுதியாக  குதிரை சவாரி செய்யாலாம் என்று  இரண்டு வெவ்வேறு குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாங்கள் சவாரி தொடங்கினோம்.


என் குதிரை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் என் மனைவி சவாரி செய்த குதிரை ஒரு   பைத்தியக்காரன் போல் தெரிந்தது.


போகும்  வழியில் அந்த குதிரை என் மனைவியை  திடீரென்று குதித்து
 கவிழ்த்தது, நிலத்தில் இருந்து தனது நிலையை மீட்டு,
என் மனைவி மீண்டும் குதிரை  சவாரி செய்யும் முன்  "இது உனக்கு முதல் முறை ஆகும்" என்றார்.


அவள் மீண்டும் குதிரை அமர்ந்து  சவாரி தொடர்ந்தது.  பிறகு
அதே போன்று மீண்டும் நடந்தது.
அவள் இந்த முறை மீண்டும் அமைதியாக வந்து  "இது உனக்கு இரண்டாவது முறை ஆகும்" என்று தொடர்ந்தார்...

குதிரை அவளை  மூன்றாவது முறை கைவிடப்பட்ட போது, அவள்  அமைதியாக பர்ஸ் இருந்து சுழல் துப்பாக்கி எடுத்து குதிரையை சுட்டு விட்டார் !


நான் என் மனைவிடம்  கத்தினேன்: "நீ என்ன காரியம் செய்தாய் ஒரு அப்பிராணியை கொன்று விட்டாயே . நீ என்ன பைத்தியமா? 

அவள் ஒரு அமைதியான பார்வை பார்த்து விட்டு  கூறினார்:.

"! இது உங்களுக்கு முதல் முறை" "

கணவன்:  "அது தான்..... அதன் பிறகு நாங்கள் இப்போது வரை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்."

டிஸ்கி :  ஹி ஹி ஹி இதிலிருந்து அறியப்படும் நியதி என்னவெனில்....திருமணத்துக்கு பின் இதுவெல்லாம் சகஜமப்பா.
கட்டிக்கிட்டு ஆடுறது கட்டாம ஆடுறது அதான் சலங்கை இது எல்லாம் கல்யாணத்துக்கு முன்.....கால் கட்டு போடணும் கால் கட்டு போடணும் சொல்வாங்களே அதன் இதா ம்



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

ஏய்ய்ய்   வர்றீய்யா... ஒத்தைக்கு ஒத்த போட்டு பார்த்திடுவோம்
 
நம்புங்க, இந்த பதிவுக்கு அடிப்படை காரணம் மச்சி வீடு சுரேஷ்  இங்கே . இது  எதிர் பதிவு,.. இல்ல   ஆதரவு பதிவு,... எப்பூடீ வேணாலும் எடுத்துக்கோங்க  அது  உங்கள்  விருப்பம்.