நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label திருமண. Show all posts
Showing posts with label திருமண. Show all posts

Tuesday, June 24, 2014

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும்...

பத்து கேள்விகள்  எ'மது'  பதில்கள்
 
 
இந்த களத்தில் எம்மை எறக்கிவிட்ட ச்சே கோத்துவிட்ட தோழர் இல்யாஸ்.....வாழ்க வளமுடன்.
 
 
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்கொண்டாட விரும்புகிறீர்கள்? 
 
எ'மது'  ஆரோக்கியத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றிகள் - ஒங்களுடன் சேர்ந்து கொண்டாடவே விருப்பம்.
 
 
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
 
தெனம் தெனம் புதுசு புதுசா கத்துக்கிட்டுதான்  இருக்கேன் - (இந்தா, 10 கேள்வி 10 பதில்கள் புதுசு தானே)
 
 
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
 
 
மணி நேரத்துக்கு  முன்னாடி - கடந்த 21.9.2013  நீச்சல் குளத்தில் போட்டா எடுத்தது அதை இன்று காண நேர்ந்து அதை பேஸ்புக்குல பதிவு பண்ணுனேன்.
 
 
4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
 
 ஹிக்கும் அப்படி ஒரு நெலமை வராதுங்க 
 
 
5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
 
(எனது மகளுக்கும் - மருமகளுக்கும்) பொறந்த வீட்டு குல  பெருமையை பீத்திக்காம மனதில் நிறுத்தி, புகுந்த வீட்டு குல பெருமையை நிலைநாட்டு - வாழ்க வளமுடன்.
 

 
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 
எல்லாப்பிரச்சனையும்.....

 
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
 
சூழ்நிலை, காரண காரியங்களை பொருத்து மாறுபடும்
 

 
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 
பரப்புவோரின்  இயலாமை எண்ணி வருந்தும் அதே வேளையில்......,
எம்மை பிரபலபடுத்தும் அந்த நல்லவர்களை மனதார வாழ்த்துவேனுங்க
 
 
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

 
எமது நண்பர்......ம்.,    நண்பருக்கு நண்பர் எமது சொல் மாறுபடும்
 

 
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
 
சமையல் செய்வேன்

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும் யாமே

Wednesday, June 20, 2012

திருமணத்துக்கு பின் இது சகஜமா

ஒரு காலத்தில், ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டுவிழா  கொண்டாடினார்கள்

அவர்கள் இருவருக்குள்ளும் 25 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு மோதல், சண்டை சச்சரவு,  குக்கர் மூடி வீசுறது, பூரி கட்டை எறிவது இது எல்லாம் நடந்ததே இல்லை. இந்த செய்தி நகரில் பிரபலமாக,
 
உள்ளூர்  செய்தித்தாள் ஆசிரியர் இந்த ரகசித்தை  கண்டு  பிடிக்க  ஆவல் கொண்டு, தம்பதிகளை சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

அதன் பின் நடந்த உரையாடல்:


ஆசிரியர்:.. "ஐயா, இது அதிசயமாகவும்  நம்பமுடியாததும்  எப்படி இந்த சாதனை செய்ய முடிந்தது?

தனது பழைய தேனிலவு நாட்கள் நினைவுக்கு வர  கணவர் கூறினார்:


"நாங்கள்  திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு ஊட்டி போயிருந்தோம் .
இறுதியாக  குதிரை சவாரி செய்யாலாம் என்று  இரண்டு வெவ்வேறு குதிரைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாங்கள் சவாரி தொடங்கினோம்.


என் குதிரை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் என் மனைவி சவாரி செய்த குதிரை ஒரு   பைத்தியக்காரன் போல் தெரிந்தது.


போகும்  வழியில் அந்த குதிரை என் மனைவியை  திடீரென்று குதித்து
 கவிழ்த்தது, நிலத்தில் இருந்து தனது நிலையை மீட்டு,
என் மனைவி மீண்டும் குதிரை  சவாரி செய்யும் முன்  "இது உனக்கு முதல் முறை ஆகும்" என்றார்.


அவள் மீண்டும் குதிரை அமர்ந்து  சவாரி தொடர்ந்தது.  பிறகு
அதே போன்று மீண்டும் நடந்தது.
அவள் இந்த முறை மீண்டும் அமைதியாக வந்து  "இது உனக்கு இரண்டாவது முறை ஆகும்" என்று தொடர்ந்தார்...

குதிரை அவளை  மூன்றாவது முறை கைவிடப்பட்ட போது, அவள்  அமைதியாக பர்ஸ் இருந்து சுழல் துப்பாக்கி எடுத்து குதிரையை சுட்டு விட்டார் !


நான் என் மனைவிடம்  கத்தினேன்: "நீ என்ன காரியம் செய்தாய் ஒரு அப்பிராணியை கொன்று விட்டாயே . நீ என்ன பைத்தியமா? 

அவள் ஒரு அமைதியான பார்வை பார்த்து விட்டு  கூறினார்:.

"! இது உங்களுக்கு முதல் முறை" "

கணவன்:  "அது தான்..... அதன் பிறகு நாங்கள் இப்போது வரை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்."

டிஸ்கி :  ஹி ஹி ஹி இதிலிருந்து அறியப்படும் நியதி என்னவெனில்....திருமணத்துக்கு பின் இதுவெல்லாம் சகஜமப்பா.
கட்டிக்கிட்டு ஆடுறது கட்டாம ஆடுறது அதான் சலங்கை இது எல்லாம் கல்யாணத்துக்கு முன்.....கால் கட்டு போடணும் கால் கட்டு போடணும் சொல்வாங்களே அதன் இதா ம்



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு  

ஏய்ய்ய்   வர்றீய்யா... ஒத்தைக்கு ஒத்த போட்டு பார்த்திடுவோம்
 
நம்புங்க, இந்த பதிவுக்கு அடிப்படை காரணம் மச்சி வீடு சுரேஷ்  இங்கே . இது  எதிர் பதிவு,.. இல்ல   ஆதரவு பதிவு,... எப்பூடீ வேணாலும் எடுத்துக்கோங்க  அது  உங்கள்  விருப்பம்.