நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label பார்வை. Show all posts
Showing posts with label பார்வை. Show all posts

Monday, August 13, 2012

அவளது பார்வை

வணக்கம்


மனசாட்சியின் பஜ்ஜிகடையில், பஜ்ஜியை (பதிவுகள்)  சுவைத்து    விரும்புவோர்கள்   இதுவரையில் 100..

ஆரம்பித்து வைத்த முதல்வர்   எங்கள்  சித்தப்பு சி.பி.செந்தில் குமார் (அட்ரா சக்க) அவர்களுக்கும், அதை தொடர்ந்து 98 உறுப்பினர்கள்  அனைவருக்கும்   மற்றும் 100 வது உறுப்பினராக  இணைந்த மாணவி சிவரஞ்சனி சதாசிவம் (சிவரஞ்சனி சதாசிவம்) அவர்களுக்கும் கோடி நன்றிகள்.

ஒரு சிறப்பான ஆச்சரியம் என்னவென்றால்....உங்களுக்கே தெரியும் மனசாட்சிக்கு  கோவை தான்  பூர்வீகம்.  மனசாட்சியின் பஜ்ஜியை (பதிவு) விரும்புவோர் வரிசையில் முதல் மற்றும் 100 வது  இருவரும் அதே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் (ஈரோடு)  மிக்க மகிழ்ச்சி.

இது வரை நம்ம கடைக்கு வந்து சுவைத்து சென்றவர்கள் மற்றும் விரும்பி  சுவைத்து கொண்டு இருப்பவர்கள் - காரம், மணம், குணம், உப்பு, குறை, நிறைகளை பின்னூட்டங்களில் கூறி  செம்மை படுத்தும் அனைத்து நட்புகளுக்கும் கோடான கோடி நன்றிகளை மகிழ்ச்சியுடன்  இங்கே பதிவு செய்கிறது  மனசாட்சி.  எல்லாம் உங்கள் வரவாலே... ஆதரவாலே.


பொன்வண்டு:  ஊருக்குள்ள ஒரு வதந்தி தெரியுமா?

தவளை: கொய்யால, அதனால தானே நான் இங்கே வந்து தொங்கிட்டு இருக்கேன்.


எப்போதும் நினைவில் கொள்ளவும்

உங்களை ஒருவர் முட்டாள் ஆக்குகின்றார் எனில்

அவரது முன்னிலையில் சிரித்து விடுங்கள்
  
நிச்சயமாக, நீங்கள்  அவர் இல்லாத போது அழுவீர்கள்

ஏனெனில்,

அந்த முட்டாள்கள் நமது உண்மையான நண்பர்கள்



மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல  

அவளது பார்வை:

உலகின் மிக சரியான மனிதன் அவளுடைய தந்தை

உலகின் மிக தவறாக பயன்படுத்தபடுபவன் அவளுடைய சகோதரன்

உலகின் மிக அழகான மனிதர் அவளுடைய  மகன்

உலகத்திலேயே அதிர்ஷ்டமான மற்றும் மகிழ்ச்சியான மனிதன் அவளுடைய சகோதரியின்  கணவன்

உலகின் மிக நன்றி உள்ள, நம்பிக்கை உள்ள   மனிதன் அவளுடைய மரூமகன்

ஆனால், உலகின் மோசமான நடத்தை மற்றும்  மிகவும் சுயநலமான, இதயமற்ற, மொத்த இழுபறியா  மனிதன் அவளுடைய  கணவர்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

ஆடி மாசத்துல பிரிச்சி வச்சிபுடாங்கலேன்னு

எம்புட்டு சோகம், வருத்தம் பயபுள்ள முஞ்சில

ஏக்கத்துல்ல உர்ருன்னு........... அடி.....ஆத்தி....