நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, July 1, 2015

தொட்டால் தொடரும்

 
ஏம்மா நீங்க ரத்த அழுத்த மாத்திரை நிறுத்திட்டீங்கள
 
அந்த கெரகத்தை நிறுத்தி 4 வருசமாசிப்பா
 
ஏங் கண்ணு கேக்குற...
 
இல்ல நாங், ரத்த அழுத்த மாத்திரை நிறுத்தலாமுன்னு..
 
அந்த கெரகத்த வேணாமுன்னா .. கேக்கமாட்டங்குற...இப்ப ஏங்கண்ணு...திடீருன்னு
 
அது ஒண்ணுமில்லம்மா...ரத்த அழுத்த மாத்திரை எடுத்தது மொத நெஞ்செரிச்சல், மூச்சு இளைப்பு, உடம்பு எடை கூடுது, வயிறு உப்புசம்....
அப்பறம் அதுக்கு வேறு மாத்திரை ஒரே இம்சையா இருக்கு அதாங்.

அதுவும் செரிதேங்
 
நேத்து நெட்ல படிச்சேங்
 
நெட்ல?!
 
ஆமாம்மா இணையதளத்தில் 
 
சேரி சேரி
 
அந்த ரத்த அழுத்த மாத்திரை பக்க விளைவு அப்படின்னு நெஞ்செரிச்சல், மூச்சு இளைப்பு, உடம்பு எடை கூடுதல், வயிறு உப்புசம்......நாளடைவில் க்கல்லீரல் கூட கெட்டுபோகுமாம்.
 
அட கெரகமே
 
அதாங் அந்த கருமத்த தூக்கி வீசிப்புடலாமுன்னு...
 
கல்லீரல் கெட்டுபோச்சின்னு...மருத்துவர் கிட்ட போனா குடிப்பியான்னு கேப்பாங்க ..
 
மருத்துவர்க்கு  கல்லீரல்  கெட்டதுக்கு காரணம் மாத்திரைன்னு தெரியுங்... ஆனா பழிய தூக்கி குடிமேல போட்டுட்டு இவங்க தப்பிச்சுக்குவாங்க.
 
அதுக்காக குடிக்கிக்கு கொடிபுடிக்கலம்மா, எதுவும் அளவோட இருந்த நல்லதுதேங் - மாத்திரை அளவோடுதான் எடுத்துக்குறோம் ஆனா பாருங்க கல்லீரல் பாதிக்கும்றாங்க.
 
இடையில,.. அம்மணி, ஏனுங்க பி பி யை கண்ட்ரோல் பண்ணலாம்  க்யூர் பண்ண முடியாதுங்க - மாத்திரையை   'தொட்டால் தொடரும்' ...ஹாங்.

செரி செல்லம்.
 
 
ஏம்மா...இப்ப ரத்த அழுத்த  மாத்திரைக்கு பதிலா என்ன பண்ணுறீங்க
 
கண்ணு, நெல்லிக்காய் அளவுல இஞ்சி எடுத்து தட்டி சாறு எடுத்து
அதில ரெண்டு சொட்டு எலுமிச்சை சாறு கலந்து...
தல சுத்தற மாதிரி/படபடப்பு தோனுச்சின்னா குடிச்சிடுவேங் அம்ம்புட்டுதேங்...தினம் தயார் பண்ணி வச்சிருக்கேங் என்ர தேவைக்கு.
 
இம்புட்டு தானா..
 
கண்ணு அப்படியே கொஞ்சம் தேன் கலந்துக்கோ
 
ஏம்ம்மா
 
காராமா இருக்கும்பா
 
நாங் என்ன சின்ன பையனா
 
ஹா ஹா எனக்கு எப்பவும் கொழந்தை தானே நீயி
 
வூருக்கே நாட்டாமையானாலும் வூட்டுக்கு புள்ளதானே.
 
ம்ம்.. 
 
ஆம்மா,,.. கண்ணு சின்ன புள்ளைய இருக்கும் பொது இஞ்சி சாறு குடிக்க
எம்புட்டு அழுவே காரம் கண்டு..
 
ம்ம்
 
கண்கண்ட தெய்வம் தாய் - நாங் குடியிருந்த கோவில் அல்லவா... சொன்னா செரியாதாங் இருக்கும் .
 
ஏனுங்க எனக்கும் செரி, உங்கம்மா சொல்றதுக்கும் செரின்னா என்னங்க அர்த்தம்
 
ரெண்டு பெரும் சொல்றது செரிதேங்
 
தலைப்புக்கா உனக்கு செரின்னேன்
 
 
பதிவுக்காக அம்மாவுக்கு செரின்னேன்
 
பதிவுக்குதேங் இந்த பில்டப்பா - ஒங்க பதிவுல  தீய வைக்க.... க்ஹும்.


ஆத்தீ...இந்த வெட்டு வெட்டிட்டு போறா .......
போச்சா இன்னைக்கு ராத்த்ரி போச்சா............

...சாப்பாட்ட சொன்னேங்க.

Thursday, January 8, 2015

என்ன நீ திட்டுவ..



பொண்ணு : ஹாய்

பையன் : ஹை

பொண்ணு :  என்னாச்சி

பையன் : ஒண்ணுமில்ல

பொண்ணு : இல்ல...சொல்லுப்பா என்னாச்சி...முகம் வாடிபோய் இருக்கே

பையன் : நா உங்கிட்ட ஒன்னு கேப்பேன் நீ உண்மைய சொல்வியா

பொண்ணு : ம்...சொல்றேங்

பையன் : ஆரூ அவங் ...பேஸ்புக்குல உங் எல்லா ப்ரோபில் படத்துக்கும் லைக் பண்ணுறாங் உன் ஸ்டேட்டாஸ் கம்மண்டுறாங்...ஆரந்த முட்டாள்

பொண்ணு : தயவு செய்து அவனை பத்தி எதுவும் சொல்லாதே

பையன் : ஏங்...உங் பழைய பாய் பிரண்டா? இன்னும் அவனை காதலிக்கிறாயோ?

பொண்ணு :நா எதுக்கு லவ்வனும்...நீ மட்டும்தேங் எங் லவர்

பையன் : அப்படிங்னா அவங் உங் சகோதரனா?

பொண்ணு :இல்ல இல்ல அப்படீலாம் இல்ல

பையன் : அப்படிங்னா ஆரவன்?

பொண்ணு :நாம வேற எதாவது பேசுவோமா?

பையன் : ஆக எங்கிட்ட எதையோ மறைகிற....அந்த அளவுக்கு நீ அவங்ட தொடர்புள்ள இருக்க..... அவங்தேங் ஒனக்கு முக்கியம்..அப்படிதானே?

பொண்ணு : அந்த ரகசியத்தை சொன்ன கண்டிப்பா என்ன நீ திட்டுவ

பையன் : எனக்கு எரிச்சலா  இருக்கு எங் பொறுமைய சோதிக்காதே

பொண்ணு : வேணாம் விடேங்...பிளிஸ் டா
பையன் :இப்ப நீ சொல்லல இந்த நிமிசமே நாம பிரிஞ்சுடலாம்.

பொண்ணு :ம்ம் சொல்றேங்...சத்தியம் பண்ணு என்னை திட்ட மாட்டேங்னு

பையன் : ம்.....ஒக்கே

பொண்ணு :ம்ம்ம்ம்ம்...அது என்னோட பேக் ஐ டி- யாருமே லைக்
பண்ணலேங்னா....அந்த பேக் ஐ டி மூலமா நா லைக் போடுவேங் அப்பறம் நீ நல்ல அழகா இருக்கே...கவர்ச்சியா இருக்கே அப்டீங்னு கமண்டுவென்...
........!!!!!

பையன் :____________________ (?)

Tuesday, August 26, 2014

அந்த ஏழு இரவுகள்

திங்கள் இரவு
 
 
மனைவி : இன்னைக்கு என்ன குடிச்சிட்டு வந்தீங்களா? 

கணவன் : ஆமான்டா செல்லம் ஆபிஸ்ல வெளிநாட்டு வாடிக்கையாளருடன் சந்திப்பு அப்படியே குடிக்க வேண்டியதா போச்சி


  
செவ்வாய் இரவு
மனைவி: என்ன இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே
 
கணவன் : ஆமான்டா செல்லம் நண்பனுக்கு நிச்சயம் பண்ணியதுக்கு பார்ட்டி கொடுத்தான் அதான் அப்படியே தவிர்க்க முடியல...


 
புதன் இரவு
 

மனைவி: இன்னைக்கும் குடிச்சிட்டு வர்றீங்க
 
கணவன் : ஒரு நண்பனுக்கு டிவேர்ஸ்...மனஉளைச்சல் அவனை ஆசுவாச படுத்தி அப்படியே....

 
 
வியாழன் இரவு
 
மனைவி: இன்னைக்குமா..... இப்ப எந்த நண்பனுக்கு டிவேர்ஸ் ஆச்சு
 
கணவன் : டிவோர்ஸ் இல்லமா...ஆபிஸ்ல வேலை பளு ஒரே டென்சன் அதனால...


 
வெள்ளி இரவு
 

மனைவி : இன்னைக்கு ஏங்..
 
கணவன் : செவ்வாகிழம நண்பனுக்கு நிச்சயம் பண்ணாங்களா இன்னைக்கு அவனுக்கு கல்யாணம்,,, மகிழ்ச்சியில் பார்ட்டில கலந்துகிட்டு குடிச்சி...


 
சனி இரவு
 

மனைவி : ம்ம்ம்...இப்ப
 
கணவன் : பழைய நண்பனை சந்தித்தேன்..என்னை விடாபிடியாக டிஸ்கோவுக்கு அழைத்து சென்று வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க...முடியாமல் குடிச்சி...


 
ஞாயிறு இரவு

மனைவி : சரி இன்னைக்கு என்னாச்சி

கணவன் : என்னடா இது மனுசன்  ஒரு நாளாவது...... எங் இஸ்ட்படி குடிக்க கூடாதா.............ச்சே என்ன மாதிரி சமூகத்துல வாழுறோம் 


&&&


மனைவி : ஏங்க...ஏனுங்க தோட்டத்துல கூடமாட ஒத்தாச பண்ணுங்களேன் ?
 
கணவன் : என்ன நெனச்சுட்டு இருக்கே ஓங் மனசுல நாங் என்ன தோட்டகாரனா..?
 
மனைவி :என்னங்க இந்த கதவுல கைப்பிடி ஒடஞ்சுடுசி மாட்டி கொடுங்களேன்?
 
கணவன் : என்ன நீயீ, என்னைய தச்சுவேலை செய்யரவன் மாதிரியா தெரியுது ஒனக்கு
 
மாலையில் ஊர்சுற்றி விட்டு வீடு திரும்பிய கணவன்....  எல்லாமே சரி செய்யப்பட்டு இருப்பதை கண்டு 
 
கணவன் : ஏய்....என்னாதிது ஆரூ செய்தது இந்த வேலை எல்லாம்
 
மனைவி : பக்கத்து வீட்டுகாரார்....ஆனா பாருங்க ஒரு  கண்டிசன் போட்டாரு
 
முட்ட புரோட்டா அல்லது முத்தம் வேணும்னு கேட்டாரு 
 
கணவன் : ஹா ஹா எனக்கு நிச்சயமா தெரியும் முட்ட புரோட்டா கொடுத்து இருப்பேன்னு
 
மனைவி : என்ன நெனசிகிட்டு இருக்கீக என்னைய பத்தி...நா என்ன புரோட்டா கடையா வச்சிருக்கேன்..
 
கணவன் : ங்..ஞே 
 
 
  

Tuesday, June 24, 2014

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும்...

பத்து கேள்விகள்  எ'மது'  பதில்கள்
 
 
இந்த களத்தில் எம்மை எறக்கிவிட்ட ச்சே கோத்துவிட்ட தோழர் இல்யாஸ்.....வாழ்க வளமுடன்.
 
 
1. உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக்கொண்டாட விரும்புகிறீர்கள்? 
 
எ'மது'  ஆரோக்கியத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு நன்றிகள் - ஒங்களுடன் சேர்ந்து கொண்டாடவே விருப்பம்.
 
 
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
 
தெனம் தெனம் புதுசு புதுசா கத்துக்கிட்டுதான்  இருக்கேன் - (இந்தா, 10 கேள்வி 10 பதில்கள் புதுசு தானே)
 
 
3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
 
 
மணி நேரத்துக்கு  முன்னாடி - கடந்த 21.9.2013  நீச்சல் குளத்தில் போட்டா எடுத்தது அதை இன்று காண நேர்ந்து அதை பேஸ்புக்குல பதிவு பண்ணுனேன்.
 
 
4.  24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
 
 ஹிக்கும் அப்படி ஒரு நெலமை வராதுங்க 
 
 
5.  உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?
 
(எனது மகளுக்கும் - மருமகளுக்கும்) பொறந்த வீட்டு குல  பெருமையை பீத்திக்காம மனதில் நிறுத்தி, புகுந்த வீட்டு குல பெருமையை நிலைநாட்டு - வாழ்க வளமுடன்.
 

 
6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும்
என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 
எல்லாப்பிரச்சனையும்.....

 
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
 
சூழ்நிலை, காரண காரியங்களை பொருத்து மாறுபடும்
 

 
8. உங்களைப் பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 
பரப்புவோரின்  இயலாமை எண்ணி வருந்தும் அதே வேளையில்......,
எம்மை பிரபலபடுத்தும் அந்த நல்லவர்களை மனதார வாழ்த்துவேனுங்க
 
 
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

 
எமது நண்பர்......ம்.,    நண்பருக்கு நண்பர் எமது சொல் மாறுபடும்
 

 
10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
 
சமையல் செய்வேன்

ப்பா.....! எ'மது' பலமும் பலவீனமும் ஆளுமையும் யாமே

Monday, March 17, 2014

கதையல்ல.....நாவல்

நக்ஸ் : என்னப்பா இது?

ஆக்ஸ் : ஒ... இதா நா எழுதிய 500 பக்க நாவல்

நக்ஸ் : என்னாது நாவலா அதுவும் 500 பக்கமா? அப்படி என்னய்யா எழுதி இருக்கீக?

ஆக்ஸ் : மொத பக்கத்தில்.....ஒரு ராஜா குதிரையில் ஏறி அமர்ந்து அடர்ந்த வனபகுதியை நோக்கி பயணமாகிறார்

கடைசி பக்கத்தில்.... அடர்ந்த வனபகுதியை சென்று அடைகிறார்.

நக்ஸ் : அட பார்ரா செரியி அந்த 498 பக்கத்துல என்ன எழுதி இருக்கீக?

ஆக்ஸ் : டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக் டக் டக் டாக் டக்...

நக்ஸ் : ஆமா இந்த கதைய....

ஆக்ஸ் : யோவ் கதை அல்ல நாவல்

நக்ஸ் : செரி செரியி நாவல்.....ஆரு வாங்கி படிப்பா

ஆக்ஸ் : பேஸ்புக்ல...ப்ளாக்ல லிங்க் கொடுத்தேன் வையுங்க.....என்னைய மாதிரி உள்ளவங்க கண்டிப்பா படிப்பாங்க

Friday, March 7, 2014

வெவரமான புள்ள


வணக்கம்  

பையன் : உன் பெயர் என்ன?



பொண்ணு : ஏன் சொல்லணும், நீ யாருன்னே தெரியாது..
பையன் :சொல்ல மாட்டாய சரி விடு, என்னுடைய 
மெர்சிடிஸ் காருல பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு 
கூட்டிட்டு போகலாமேன்னு ..


பொண்ணு: பேரு க்ஸ் ஒய், எம்காம், டவுன் காலேஜ்
காலை 8 முதல் 1 வரை, வெள்ளிகிழமை காலை 8 முதல் 12 வரை  ஞாயறு விடுமுறை
காலேஜ் வரும் போது அப்பா அழைத்து வருவார் - திரும்ப போகும் போது தனியாகத்தான்...

ஏ புள்ள இந்தா நில்லு நில்லுன்றேன்ல
ஏங்...மச்சாங்
அட இம்புட்டு வெரசா எங்க புள்ள கெளம்பிட்ட
ஹிக்கும் தெரியாதாக்கும்  
செரி ஆருபுல்ல இது 
மறந்திடீங்களா மச்சாங்  என்ர க்காபொண்ணு 
ஆரு.... பொம்மியா....
ஏங்கன்னு,....ஒன்ர வயசென்ன 
ஆங்..அஸ்க்கு புஸ்க்கு
இந்தா சித்தப்பு கெக்குருராருல்ல ஒழுக்க மருவாதையா சொல்லோனோம்
அட சொல்லு கண்ணு 
14
பதினாலா....ம்  பெரிய புள்.....
ஆங்.. என்ர வுட்டுலதேன்
ஸ்..ஸ்கூல்ல பன்னெண்டு
பஸ்சுல பத்து
ரயில் பொட்டில ஏலாக்கும் 
அட வெவரம்தென் போ 
ஆங்... பேஸ்பொக்குல பதிநெட்டாக்கும்...

Thursday, February 6, 2014

காமத்தோட தொல்லை


 வணக்கம் 



அன்று

என்ன மாப்ளே சௌக்கியமா?

நல்ல இருக்கேன் மாம்ஸ்

ரொம்ப நாளா ஆளே காணோம்? அம்பூட் பிஸி...

ம்ம்......

ம்ஹிம்.....மாப்ளே உம்மகிட்டு கேட்டனுமே..... காமத்தை பத்தி......


(மைண்ட் வாய்ஸ்...என்னாதிது மாம்ஸ் நம்மகிட்ட காமத்த பத்தி கேக்காரே) என்ன மாம்ஸ் கேட்டீங்க

மாப்ளே இந்த காமத்தை பத்தி சொல்லும்வோய்....

ஹி ஹி ஹி ஹி மாம்ஸ் அத எல்லாம் தன்னால வரணும் சொல்லி வருவதில்லை அது எப்படின்னா?.....


யோவ் மாப்ளே நிறுத்தும் நா என்ன கேட்டேன் நீர் என்னவோய் சொல்றீரு

மாம்ஸ் நீங்க என்ன கேட்டீங்க

காமத்தை பத்தி...

அதேன் நா சொல்றேன்

யோவ் நா கேட்டது உம்ம பிரண்டு காமத்தை  பத்தி

யு மீன் மிஸ்டர் காமத் (kamath) ......

ம்ம்...

ஙே




இன்று

என்ன மாம்ஸ் எப்படி இருக்கீக ?

நல்ல இருக்கேன் மாப்ளே

ரொம்ப நாளு ஆச்சி இந்த பக்கம் வரவே இல்ல 

கொஞ்சம் வேல 

ஏது பேஸ்புக்லேயா  

ஹி ஹி ஹி ஹி

மாம்ஸ் உங்க கிட்ட கொஞ்சம் விவரம்  வேணுமே  காமத்தை பத்தி......


(மைண்ட் வாய்ஸ்...என்னாதிது மாப்ளே நம்பளே கலாய்கிறாரோ....உசாரா டீல் பண்ணனும்) என்ன மாப்ளே கேட்டீங்க

மாம்ஸ் இந்த காமத்தை பத்தி சொல்லுங்களேன்....

ம்ஹிம்.... மாப்ளே, காமத்தை பத்தி சொல்ல என்ன இருக்கு ரோம்ப  நல்லவரு நேர்மையானவர் சுருக்கமா என்னைய மாதி.....

யோவ் மாம்ஸ் ஒரு நிமிஷம் உம்ம பிரண்டை பத்தி கேட்கல 

மாப்ளே பின்ன என்னா நீங்க கேட்டீங்க...

காமத்தை பத்தி...

அதேன் நா சொல்றேன்

யோவ் நா கேட்டது காமத்தை  

யு மீன் காமம்......

ம்..

ஙே


நாளை
யாரு எல்லாம் - எப்படி எல்லாம் கேக்க போறாங்களோ......அலர்ட்டா இருக்கோணும் 
 திருவாளர் காமத் (Mr. Kamadh)  அப்படிங்குற பேருல எனக்கு ஒரு பிரண்டு - இப்படி பொரட்டி பொரட்டி வாங்குரேனே - ஏங் எனக்கு மட்டும் இப்படி - இந்த காமத்தோட தொல்லையப்பா.
(காமம் ச்சேசே காமத் பிளிஸ்  மன்னிச்சு)

Monday, April 29, 2013

தம்பதிகளே, சந்தோசமா இல்லையா?

வணக்கம்




குடும்ப வாழ்க்கை சின்ன சின்ன கருத்து மோதல்களும், செல்ல சண்டைகளும் இருந்தால்தான் சுவாரஸ்யம் இருக்கும். ஆனால் சண்டை பெரிதானால் குடும்பத்தில் விரிசல்கள் ஏற்படும். எனவே குடும்பத்தில் சண்டை ஏற்பட்டால் ஈகோ பார்க்காமல் சமாதானம் ஆகுங்கள் என்று அறிவுரை கூறுகின்றனர் பெரியவர்கள்



அமைதியாக இருக்காதீர்கள்

குடும்பத்தில் சண்டை வந்து ஒருவரை ஒருவர் குறை கூறி தீர்த்த பின்னர் முகத்தை திருப்பிக் கொள்ளாதீர்கள். யாராவது ஒருவர் சமாதானம் ஆகுங்கள். அதுதான் குடும்பத்திற்கு நல்லது. பேசாமல் இருந்து விட்டால் அதுவே பிரச்சினைக்கு காரணமாகிவிடும். மெளனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் அமைதியாக இருப்பது பெரும் ஆபத்தாகிவிடும்.

சாத்தான் கூடாரம்

அமைதியாக இருந்தால் கண்டதையும் நினைத்து மனது குழம்பும். மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கண்டதையும் ஓதும்.
மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.



ஈகோ வேண்டாம்

தம்பதியருக்கிடையே யார் பேசுவது என்பதில் ஈகோ வேண்டாம். ஏனெனில் ஈகோதான் அனைத்து பிரச்சினைக்கு காரணமாகிறது. இருவரும் பேசாமல் விட்டால் முதலில் யார் பேச்சை தொடங்குவது என்பதில் சங்கடங்கள் எழலாம்.

முதலில் யார் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ ஏற்பட்டால் இது வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும்
, இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.

உடனேபேசுங்கள்

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள்
, சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள். அதுதான் பிரச்சினைக்கு தீர்வு.



படித்ததை பகிர்கிறேன்..




நேற்று இன்று நாளை


வணக்கம்











ஆகையால், யாருக்கெல்லாம் மகன்கள் உள்ளார்களோ அவர்களுக்கு அனுதாபங்களையும் - யாருக்கெல்லாம் மகள்கள் உள்ளார்களோ அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Sunday, April 28, 2013

அப்பவே சொல்லீட்டாரா....

வணக்கம்

நாம இப்போ எங்க எதை நோக்கிய பயணம்......!?

முகம் தெரியாதவர்களுடன் நாம் கொண்ட நேசம்  அருகில் இருப்பவர்களிடம் காட்டுவது இல்லை என்பது நிதர்சமான உண்மை.

விளையாட்டு மைதானத்தில்.....வேடிக்கை பாக்குராங்கலாம் 

நண்பர்களுடன் உணவகத்தில்....  கலகலப்பா பேசிட்டு இருக்காக 



பீச்சில் நண்பர்களுடன் காத்து வாங்குராங்கலாம்  



நெருக்கமானவருடன்  வெளியில்.... அன்னியோனியமாக




நண்பர்களுடன் தேனீர் பருகுகிறார்கள்.......





மீயுசியத்தை சுத்தி  பாக்க... சென்ற இடத்தில்.. ரசனையுடன்



சுற்று சுழல் காட்சிகளை பார்வை....பார்த்து... அனுபவித்து....



அருகில் நண்பருடன்...உரையாடல்...?? 


மேல உள்ள    படங்கள்   இருக்கட்டும் ஆனா வெகு காலத்துக்கு  முன்னரே,...  பெரியவர்  என்ன சொல்லி இருக்காருன்னா  


















Tuesday, April 9, 2013

பதினெட்டு வயது இளம் பெண்

வணக்கம்



டேய், ஏங் கேர்ள் பிரெண்டுக்கு பிறந்தநாள் வருது,  ஒரு பரிசு கொடுக்கணும் என்ன மாதிரி பரிசுன்னு தெரியல அவளுக்கு பிடிச்ச மாதிரியாவும் இருக்கணும் ஒரு ஐடியா சொல்லேன்


அவளுக்கு உன்னை பிடிக்குமா?

ஆமாம்...

அப்படின்னா நீ எதைவேனுமினாலும் வாங்கி கொடு.




பதினெட்டு வயது இளம் பெண்

அவளது தாய் சொல்கிறாள் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பிராத்தனை செய்தால் உன் கனவில் தேவதை வரும் உனக்கு மூன்று வரம் தரும் என்று, இதை புரிந்து உள்வாங்கி கொண்ட பெண் அதை நடைமுறை படுத்த தயாராகிறாள்

தினமும் தொடந்த பிராத்தனை நான்கு ஆண்டுகள் இடைவெளி இல்லாமல் பூர்த்தி செய்கிறாள்


அதற்கான தருணம்  வந்தது, மனதெல்லாம் பூரிப்புடன் சீக்கிரமாகவே படுக்கைக்கு சென்றால் அந்த பதினெட்டு வயது இளம் பெண் உண்மையிலேயே கனவில் தேவதை வந்தது

இப்ப இருவருக்கும் நடந்த உரையாடல்:

 
தேவதை:  பெண்ணே, கடந்த நான்கு ஆண்டுகளாக தொடந்து விடாமல் என்னை பிராத்தனை செய்தாய் மிக்க மகிழ்ச்சி


நான் உனக்கு மூன்று வரம் தருகிறேன்... கேள் உன் விருப்பபடி என்ன வேனுமினாலும்  ஆனா ஒரு நிபந்தனை

பெண் : நிபந்தனையா?!.... என்ன அது.


தேவதை:  உனக்கு பாய்பிரண்டு இருக்கா?

பெண் : ஆமா


தேவதை: பெண்ணே நீ பிராத்தனை செய்யும் பொது அவன் உனக்காக காத்திருந்தான் நேரத்தை தியாகம் செய்துள்ளான்..... 
ஆகையால்..... அதே நேரத்தில் அவனுக்கு இந்த மாதிரி வரம் பத்தி எதுவும் தெரியாது இருந்தாலும் நீ என்னவெல்லாம்  வரமாக  கேட்பாயோ உன்னில்  இருந்து பத்து மடங்கு அவனுக்கும்  போய்  சேரும் இதை நீ ஏற்றுகொண்டால் உன்னுடைய முதல் வரத்தை நீ கேட்கலாம்



பெண் : ( சிறிது நேர சிந்தனைக்கு பின்) சரி தேவதை ஒப்பு கொள்கிறேன்


பெண் : முதல் வரமாக என்னை இவ் உலகத்திலே உள்ள பணக்காரர்களை விட பத்து மடங்கு  பணக்காரியாக ஆக்கவும் 

தேவதை: ஆனா, உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு பணக்காரனாக ....

பெண் :பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே

பெண் : இரண்டாவது இவ் உலகிலேயே உள்ள அழகியை விட நூறு மடங்கு அழகியாகனும்   


தேவதை: ஆனா , உன் காதலன் உன்னை விட பத்து மடங்கு அழகான பையனாகி விடுவானே

பெண் : பரவாயில்ல


தேவதை: சரி உன் விருப்பபடியே



தேவதை: இப்ப கடைசியான வரம்.... கேள்

பெண் : தேவதையே எனக்கு மிதமான  இதய வலியை கொடு 

தேவதை: என்ன  உண்மையாகவேவா 

பெண் : ஆமாம் உண்மையாகவே

 தேவதை: சரி உன் விருப்பபடியே...

சிந்திக்கவும்

பாத்திங்களா....அந்த பையனின் நிலைமையோ பாவம் இதயவலி வந்து பரிதாபமாக.......................

ஆனா 

பதினெட்டு வயது இளம் பெண்ணோ 
மிதமான  இதயவலியுடன் பிழைத்துக்கொண்டாள் ஆக அவள் தான் உலகிலேயே அழகியும் பணக்காரியுமாக...


இக் கதையில் இருந்து தெரிந்து கொள்வது என்னான்னா

பெண்கள் புத்திசாலிகள் ஆண்களை விட மிகவும் தெளிவான புத்திசாலிகள் பசங்களே உஷார்


இதுக்கு மேல பெண்கள் படிக்க வேண்டாம்


ஆண்கள் மட்டும் தொடரவும்










நண்பர்களே கவலைபடாதீர்கள் நீங்க நினைத்தமாதிரி எதுவும் நடக்கல 

உண்மையிலே என்ன நடந்ததுன்னா


அந்த பெண்ணின் காதலனுக்கு மிதமான இதயவலி பத்து முறை  வந்தது ஆகையால் அந்த பெண்ணை விட பத்து மடங்கு காலம் உலகிலேயே ஆண் அழகனாகவும்  பணக்காரனாகவும் வாழ்ந்தான்.



இக் கதை மூலம், ஆக கவலைபடவேண்டாம் உங்களை விட உங்க கேர்ள் பிரெண்ட் புத்திசாலி.................
ஹலோ அதான் நான் அங்கேயே சொன்னேன்ல பெண்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று (அவ்வ்வ்வ்வ்)





மனைவியை சமாளிப்பது எப்புடி?

அப்படின்னு கூகுளே தேடினாலும், தேடிய விடை அப்புடிதேன் வருது

நல்வரவு, நாங்களும் அதை தான் தேடுகிறோம்

எப்புடி ஹி ஹி ஹி ஹி ......வர்ர்ர்ட்டா