நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Thursday, December 29, 2011

ஓவியரின் அதிநுட்பமான கலைப்படைப்பு!



 உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஓவியரின் (John Lennon) கைவண்ணத்தில் உருவான இந்த ஓவியம் முற்றிலும் வித்தியாசமானது, ஒரு ஓவியத்திற்குள் பல ஓவியங்கள் மறைக்கப்பட்டுள்ளன அதாவது பல சிறிய உருவங்களை வரைவதன் மூலம் பெரிய உருவமொன்று தோற்றம்பெற்றுள்ளது.

சாதரணமாக பார்க்கும்போது பெரிய உருவம் தெரிந்தாலும் சற்று உற்று நோக்கினால் அதன் உண்மைத்தன்மை நன்கு புலப்படும், நீங்கள் இருக்கும் இருக்கையை விட்டு சற்று பின்னோக்கி சென்று இந்த படங்களை பாருங்கள் பெரிய உருவம் தெளிவாகத் தெரியும்





Tuesday, December 27, 2011

அழகிய பெண் கண்ணை மூடினால்?




முதலில் எனக்கும் விளங்கவில்லை அப்படி என்னதான் அதிசயம் இருக்கிறது என்று. பார்த்த பிறகுதான் உன்மையிலேயே இது ஒரு அதிசயம் என்று உணரமுடிந்தது. கண்ணை மூடினா கனவில நீதானே என்ற பொன்மொழியை உண்மையாக்கும் விதத்தில் இருக்கிறது இந்தப் புகைப்படத்தின் சிறப்பு.



முதலில் இந்தப்படத்தில் இருக்கும் பெண்ணின் மூக்கில் இருக்கும் சிவப்புப் புள்ளியை ஒரு 30 செக்கன்களுக்கு உற்று நோக்கிய வண்ணம் இருக்க வேண்டும்,

பின்னர் உங்கள் கண்களை வேறு எங்காவது உள்ள ஒரு முகப்பரப்பை நோக்கித் திருப்புங்கள், அடுத்து கண்களை மூடுங்கள், மூடியவண்ணம் சிறிந்துநேரம் காத்திருங்கள்.

இப்போது உங்கள் நினைவுகளில் தெரிபவள் யார் எனச் சொல்லுங்கள்உங்கள் விழித்திரையில் அழகிய பெண் உருவம் அசைந்தபடி வருவதை அவதானிக்கலாம்அப்படி இல்லையாயின் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்.. உங்கள் கனவு தேவதை காட்சி தருவாள்..

வேதாளத்தின் கேள்வி!



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.
 

“விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார்! கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர்! மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்! வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்?’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே? ‘அடுத்த வாரிசு யார்?’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது!

இது போதாதா? வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது! ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது! போரில் 3 அப்பாவிகள் பலியாகினர்! கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார்! பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார்! அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது!

ஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று! பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று!

குறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார்! ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன்? நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன? விக்ரமாதித்தா!இந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது!


நன்றி : தினமணி

அன்னை சொன்னால் ஒழிய விலகமாட்டேன்!






மனசாட்சி : அன்னை குரங்கும் பதவியினைப் பிடித்து தொங்குதே???

Monday, December 26, 2011

ஜாம்பவான்களே...உங்களால் முடியும்!?

ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா
அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்டா
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துற சுத்துல 
அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வப்பேன் - தேவர் மகனில் கமலஹாசன்.

மனசாட்சி: இப்படி தமிழனை உசுபேத்தியே..., எந்த ஏரியாவை காட்டி கல்லா கட்டினிகளோ அந்த ஏரியாவில்தான் தண்ணி பிரச்னை - ஒரு குரல் கொடுங்களேன். (முடியுதான்னு பார்ப்போம், விஷயங்கள் பல அறிஞ்சவர் - வெவரங்கள் பல புரிஞ்சவர்) 
   

பத்துமாடி வீடு கொண்ட சொத்து சொகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதவியும் வேண்டாம்
மாலைகள் இடவேண்டாம் தங்க மகுடமும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே
என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா.
என் உடல்பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா - படையப்பாவில் ரஜினிகாந்த்.

மனசாட்சி: சார், அவ்வளவு எல்லாம் வேணாம். முல்லை பெரியாருக்காக
 ஒரு குரல் கொடுங்களேன். (எல்லாம் வீண் ஜம்பம்.  தமிழனின் காசு வேணும். தமிழனை வைத்து பிழைக்கணும்).
எல்லாம் காலம் கடந்து புரியுது - புரிய வைத்தமைக்கு நன்றி   

டிஸ்கி - எதுக்காக தமிழ் நடிகர் திலகம் போட்டோ கேட்பவர்களுக்காக - இந்த இரு படங்களிலும்  ஒரு ஒற்றுமை  என்னனா தமிழ் நடிகர் திலகம் இவங்களோட நடித்து இருப்பார்.. நடிகர் திலகம் போட்டாவை பார்த்தாவது தமிழ் நடிகர் நடிகைளுக்கு தமிழ் உணர்வு வருதான்னு பாப்போம்

தமிழச்சி பால் குடிச்சவண்டா.....தமிழன் பாரதிராஜா





முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், கேரள அரசின் அநியாயப் போக்கைக் கண்டித்தும் மே பதினேழு இயக்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மெரினா கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது.


இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "நான் வரலாறு, இலக்கியம் படித்ததில்லை. ஆனால் மக்களை உணர்வுப்பூர்வமாக படித்தவன். தமிழர்கள் பெருந்தன்மையானவர்கள். அந்தப் பெருந்தன்மை காரணமாகவே இன்று தன் உரிமைகளையும் இழந்து வருகின்றனர். இனியும் இந்த நிலை தொடர வேண்டுமா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை என்பது 5 மாவட்ட மக்களின் பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினை. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தந்திரப்போக்கை கையாள்கிறது.


ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக நடிகர்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை. உங்கள் உதிரத்தை, பணத்தைச் சாப்பிடுபவர்கள், ஏன் குரல் கொடுக்கவில்லை என்று நீங்கள்தான் கேட்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகம் இனி ஏமாந்தால் பாலைவனமாகிவிடும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடிகர்கள் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை? எதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பெயர்? இனி இந்தப் பெயரே இருக்கக்கூடாது. தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயரை மாற்றுங்கள்.
 


முல்லைப் பெரியாறு அணையைக் காக்கக் கோரி தேனி மாவட்ட மக்கள் நடத்தும் போராட்டங்கள், வன்முறைச் செயல்களாக கேரளத்தில் சித்திரிக்கப்படுகின்றன. தமிழர்கள் கேரள மாநிலத்தில் தாக்கப்படுவதும், விரட்டப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. இனியும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.



கொசுறு:  

தனது கொடிவீரனும், அன்னக்கொடியும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் பாரதிராஜா. மேலும், தனது இரு மலையாள நாயகிகளையும் அனுப்பி வைத்து விட்டாராம்.

முல்லைப் பெரியாறு விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், தானே மலையாள நடிகைகளை வைத்து படத்தை தொடர்ந்து இயக்கினால் சரியாக இருக்காது - பாரதிராஜா.


மனசாட்சி:

தமிழன்டா.. இவர் கேட்பதை தான் தமிழ் நாட்டு மக்களும் கேட்கின்றனர் - அடியே, ஆப்பு இருக்குடி. 

தமிழன் முன்னுக்கு வர சினிமா மாயை விட்டாலே போதும்.

நன்றி - படங்கள் கூகிள்

அமைச்சரவை விரைவில் மாற்றம்



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,
தொழில்துறை அமைச்சர் வேலுமணி,

வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி

வனத்துறை அமைச்சர் பச்சமால்,

வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

மனசாட்சி : 6 மாதத்தில் 7வது முறையாக மாற்றம் 

செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.



வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.

எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.

பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.

மனசாட்சி: செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.

இவரு தான் செயல் படலைனா போற இடம் எல்லாமுமா # டவுட்டு

பாப்பாவுக்கு இப்படி படுத்தால்....வருதாம்.






பாப்பாவுக்கு இப்படி படுத்தால் தான் தூக்கம் வருதாம்






சின்ன வயதில் விளையாடிய கன் அதாங்க துப்பாக்கி.

தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் கைது



பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.


மனசாட்சி: அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்

Saturday, December 24, 2011

மனசாட்சியின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 2011



கிறிஸ்துமஸ்  நல்வாழ்த்துக்கள் 2011







அணையுடைப்பும் கடையடைப்பும்

 



இது... நியாயத்தை உணர்ந்ததாலா?
வாழ்க்கையை நடத்த வேண்டியிருப்பதாலா?
எப்படியோ... எதிர்ப்பைப் பதிவு செய்தாயிற்று!





டேம் 999 படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது - கடவுளை வேண்டுகிறேன் ஏ.ஆர்.ரஹ்மான்



தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

ரஹ்மானின் இந்த வேண்டுதல், முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி வரும் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது. ஒரு தமிழராக இருந்து கொண்டு ரஹ்மான் இப்படிச் சொல்லலாமா என்று அனைவரும் குமுறுகின்றனர்..

இந்தப் படத்தின் இரு பாடல்கள் தற்போது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாம். அதில் அப்பாடல்கள் வெற்றி பெறத்தான் ரஹ்மான் வாழத்து தெரிவித்துள்ளார்.

மனசாட்சி: தமிழகத்தில் பெரும் புயலையும், சர்ச்சையையும் கிளப்பிய இப்படத்துக்கு ஆதரவாக இசைப் புயல் கருத்து தெரிவித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாமே...!

விண்ணைத் தொடும் விலைவாசி - தத்தளிக்கிறது கேரளா!



முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதன் விளைவு கேரளாவில் வரலாறு காணாத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.

காய்கறி விலை விண்ணைத் தொட்டுள்ளதாம். கிலோ தக்காளி ரூ. 300 வரை விற்பதாக கூறப்படுகிறது. மற்ற காய்கறிகளின் நிலையும் கூட அதுதான் என்கிறார்கள். அதேபோல பூக்கள், பழங்கள், பால் உள்ளிட்டவற்றின் விலையும் படு உயரத்திற்குப் போயுள்ளதாம். பாலை பெருமளவில் தமிழகத்திலிருந்துதான் கேரளா வாங்குகிறது. பெருமளவிலான பால் கர்நாடகத்திலிருந்தும் போகிறது. தற்சமயம், தமிழகத்திலிருந்து வரும் பாலுக்குத் தடை இல்லை என்று கூறப்படுகிறது.

இப்படி தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட மறைமுகமாக கிளம்பியுள்ள பொருளாதாரத் தடையால் கேரளாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்து மக்களை பாதிப்புக்குள்ளாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழகத்திலிருந்து கேரளாவுக்குப் போகும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமும் வெகுவாக குறைந்து விட்டதாம். குறிப்பாக தேக்கடிக்கு வரும் தமிழக பயணிகளின் எண்ணிக்கை அடியோடு நின்று விட்டது. இதனால் படகு குழாமில் மயான அமைதி நிலவுகிறது.

கேரளாவில்தான் இந்த நிலை என்றில்லை தமிழகத்திலும் கூட மலையாளிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். தமிழகம் முழுவதும் விரவிப் பரந்துள்ள கேரளக்காரர்களின் கடைகள் தினசரி தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன.

டீக்கடை, பேக்கரிக் கடை, நகைக் கடை, நிதி நிறுவனக் கடைகள் என பல வகையான தொழிலில் மலையாள மக்கள் தமிழகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கடைகள் தினசரி ஆங்காங்கு தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. தாக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு கேரள அரசையும், கேரள அரசியல்வாதிகளையுமே அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் பெருமளவில் மலையாளிகள் வசிக்கிறார்களே என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் கேரள அரசியல்வாதிகள் பொறுப்பின்றி நடந்து கொள்வதாக அவர்கள் புலம்புகின்றனர். பல காலமாக நாங்கள் தமிழகத்தில் வசித்து வருகிறோம். தமிழகத்தில் எங்களுக்கு மிக மிக அதிக சுதந்திரம் உள்ளது. கேரளாவில் கூட நாங்கள் இப்படி இருக்க முடியாது. தமிழர்களைப் போலவே நாங்களும் மாறி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் எங்கள் மீது தாக்குதல் நடைபெறும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை, என்ன செய்வது என்று புரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி பல பக்கங்களிலும் தமிழகத்தின் போராட்டத்தால் கேரள அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பாதிப்புகள் வெளியே தெரியாத அளவுக்கு 'மேக்கப்' செய்து வருகிறது கேரள அரசு என்கிறார்கள்.

Wednesday, December 21, 2011

ஜெயலலிதாவை சந்தித்த நடிகர் மம்மூட்டி- கேரள அரசு தூது




முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இனவெறிப் பிரச்சினையாக்கி விட்டனர் கேரளத்தில் உள்ள சிலர். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் போனாலும், யார் போனாலும் தாக்குகிறார்கள், கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார்கள், சபரிமலை பக்தர்களை மிகக் கேவலமாக அர்ச்சிக்கிறார்கள். இதனால் கொந்தளித்துப் போன தமிழகத்தில் உள்ள சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத கேரள அரசு தமிழகத்தில் உள்ள மலையாளிகளை யாரும் தாக்கக் கூடாது என்று கோரி வருகிறது. ஆனால் கேரளாவில் தாக்குதலை தடுக்கவோ, நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபடுவோரைக் கைது செய்யவோ அங்குள்ள போலீஸார் சுத்தமாக முயல்வதில்லை. மாறாக அவர்களே தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் கூறுகிறார்கள்.



இந்த நிலையில் மலையாள நடிகர் மம்முட்டி சென்னை வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கால் மணி நேரம் பேசினார். பின்னர் வெளியே வந்த மம்முட்டியிடம் முதல்வரிடம் என்ன பேசினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு முகத்தைத் திருப்பிக் கொண்டு பதிலளிக்கக் கூட நேரமில்லாமல் விருட்டென போய் விட்டார் மம்முட்டி.



முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் உள்ள அத்தனை சினிமாக்காரர்களும் உள்ளனர். கேரள அரசுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் தமிழகத்தில் ஒரு சினிமா சங்கமும் இதுவரை கேரள அரசுக்கு எதிராக களம் இறங்கவில்லை. முதல்வர் சொல்லட்டும் பார்க்கலாம் என்று கூறுகிறார்கள். கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமும் நடத்தியுள்ளனர்.




இந்த நிலையில் மம்முட்டி வந்து போயிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக திரைத்துறையினரை போராட விடாமல் தடுக்க தூதராக அவர் வந்து போனாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தமிழகத் திரைத்துறையினர் இப்போதைக்கு தமிழக அரசுக்கு ஆதரவாக போராடுவதாகத் தெரியவில்லை.

மனசாட்சி:  தமிழ் நாட்டில் தமிழ் நடிகர் என்று எவரும் கிடையாது இருந்தா தானே போராட, தமிழனை  ஏமாற்றி சம்பாதிக்கணும் அவ்வளவு தான் இங்குள்ள தமிழ் நடிகர்களின் நோக்கம் - இனி இவனுங்க பருப்பும் வேகாது.

'ஆன்லைனில்' குப்பையைக் கொட்டுங்க!





குப்பைகளை கொட்டுவது எங்கே என்று தவித்து வந்த தமிழக மக்களுக்கு நற்செய்தியாக, குப்பைகளை வீட்டிலேயே வந்து வாங்கி செல்ல வசதியாக ஒரு வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வீ்ட்டில் வந்து வசூலிக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை என்பதுதான் இதில் விசேஷம்.

காய்கறி கழிவுகள், பழைய பேப்பர்கள், தேவையற்ற பொருட்கள் என்று வீடுகள், அலுவலகங்கள், கடைகளில் உருவாகும் கழிவுகள் ஏராளம். கழிவுகளை சேகரித்து அவற்றை அப்புறப்படுத்த அரசு பல திட்டங்களை திட்டி அதற்காக பணியாளர்களையும் நியமித்து உள்ளது.

ஆனாலும் குப்பைகள் முழுமையாக நீக்கப்பட்டது என்று கூற முடியவில்லை. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த பல பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை என்று குற்றசாட்டு மக்களிடையே வலுத்து வருகின்றது.

இந்த நிலையில் குப்பைகளை சேகரிப்பதற்காக தனி வெப்சைட் ஒன்று துவக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஜெகன், அவரது மனைவி சுஜாதா உள்ளிட்டோர் இந்த வெப்சைட்டை துவக்கி உள்ளனர்.

எம்.சி.ஏ பட்டதாரிகளான ஜெகனும், சுஜாதா துவக்கி உள்ள இந்த வெப்சைட், http://www.kuppathotti.com/. வீ்டுகளில் சேகரமாகும் பழைய பொருட்கள், பால் பாக்கெட் கவர்கள், பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் கவர்கள், இரும்பு, அலுமனியம் கழிவுகளை உள்ளிட்டவற்றை பெற்று நெல்லையில் உள்ள பல குடோன்களில் சேகரிக்கப்படுகிறது.

இந்த புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுஜாதா செயல்படுகிறார். கடந்த மாதம் 11ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள், ஒவ்வொரு வீடுகளாக சென்று குப்பை கழிவுகளை சேகரித்து வருகின்றனர். குப்பைகளை தரும் வீட்டினருக்கு ஊக்கத் தொகையையும் அளிக்கின்றனர்.

இது குறி்த்து ஜெகன் கூறியதாவது,

நாங்கள் எந்த காரியத்தையும் புதுமையாகவும், சிறப்பாகவும் செய்ய விரும்புகிறோம். அதற்காக இந்த வெப்சைட் சேவையை துவக்கி உள்ளோம். இந்தியாவில் குவியும் குப்பைகளை அகற்ற தகுந்த நிறுவனம் எதுவும் செயல்படுவதாக தெரியவில்லை. இலவசமாக செய்யும் இந்த சேவைக்கு நாங்கள் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை.

எங்களின் கிளைகள் சென்னை அசோக் நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் செயல்படுகிறது. எங்கள் நிறுவனத்தின் கிளைகளை மேலும் விரிவுப்படுத்த திட்டமிட்டு உள்ளோம். http://www.kuppathotti.com/ இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்வது இலவசம். இதுவரை எங்களிடம் 150 பேர் பெயர்களை பதிவு செய்து உள்ளனர், என்றார்.

தமிழ்நாடு சியெம் அதிரடிக்கு காரணம் குஜராத் சியெம்

 
 
சியெம்மின் அதிரடிக்கு காரணம், குஜராத் சியெம் மோடி என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக ஒலிக்க துவங்கியுள்ளது. நம்ம சியெம்முக்கு மருத்துவ உதவிக்காக மோடி அனுப்பிய நர்ஸ், கார்டன்ல நடக்கிற விஷயத்தை மோடி தரப்புக்கு கொண்டு போயிட்டாராம்... இதனால, சியெம்முக்கு மோடி அட்வைஸ் பண்ணினாராம்...


அதுல சுதாரிச்சுக்கிட்டவங்க, எல்லாருக்கும் கல்தா கொடுக்க, வாய்ப்பை எதிர்பார்த்திட்டு இருந்தாராம்... வாய்ப்பு கிடைச்சதுமே கழற்றி விட்டுட்டார்னு கார்டனுக்கு நெருக்கமானவங்க, பேச ஆரம்பிச்சிருக்காங்களாம்... சியெம்மோட அண்ணன் மகள்தான், இப்போ அவருக்கு உதவியா கார்டன்ல தங்கியிருக்காராம்.

இந்த நடவடிக்கையால, அரசு லாயர்ஸ் ஒரு பகுதியினர் ஆடிப்போயி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் சசிகலா ரெகமண்ட்ல வந்தவங்களாம். உயிர் தோழி நீக்கப்பட்ட விஷயம் தெரிஞ்சதும் சில வக்கீல்கள் ராஜினாமா செய்யற முடிவுக்குக் கூட வந்துட்டாங்களாம்... கலங்கிப் போனவங்க லிஸ்ட்ல சில அமைச்சர்களும், பல அரசு வக்கீல்களும்தான் முன்னணி இடத்துல இருப்பதாக கூறப்படுகிறது.


முதல்வர் ஜெயலலிதாவை சுத்தி இருந்த மன்னார்குடி கூட்டம் துரத்தப்பட்டதால் இனி அடிக்கடி எந்த மாற்றமும் நடக்காது என்று கட்சிக்காரங்க நம்புறாங்களாம்...’ ‘கட்சி வேலைகளை ஒழுங்கா செய்யலாம்... காங்கிரீட்டான நம்பிக்கையில பொறுப்பை வகிக்கலாம்னு முக்கிய நிர்வாகிகள் பேசிக்கிறாங்களாம்... இந்த அதிரடி நீக்கத்தால ரொம்ப சந்தோசமானது சியெம் குடும்பம்தானாம்...

அப்படி என்றால் தோழி ஆட்சி போயி இன்னும் ஜெ.யின் குடும்ப ஆட்சி ஆரம்பமாக போகுதோ...! இன்னும் தமிழக மக்கள் இதுவரை தெரியாத முதல்வர் ஜெயலலிதாவின் பல உறவுகளை, சொந்தங்களை தெரிந்து கொள்ளலாம்...!! என்ன தவம் செய்தாயோ தமிழா...!!! நீ விலக நினைத்தாலும் உறவுகள்...சொந்தங்கள்...(குடும்ப ஆட்சி) உன்னை விலக மறுக்கிறதே...!!!!

Tuesday, December 20, 2011

20 வருடமாக அதிமுகவை ஆட்டிப் படைத்த 14 பேர்!!



திமுகவில் அவமானப்பட்டு, தனது உழைப்பெல்லாம் சுரண்டப்பட்ட பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், பின்னர் ஆரம்பித்து தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக மாறிய அதிமுகவை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் பிடியிலிருந்து கட்சி முதல் முறையாக விடுபட்டுள்ளது. சசி குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்தான் இந்தக் கட்சியை இத்தனை காலமாக ஆட்டிப்படைத்து வந்தவர்கள்.

அந்த 14 பேர் குறித்த ஒரு அலசல்...



எம்என் எனப்படும் நடராஜன்

இந்த குருப்பின் தலைவராக முதலில் இருந்தவர் எம்.நடராஜன். இவருக்கு அதிமுக வட்டாரத்தில் முன்பு எம்என் என்றுதான் செல்லப் பெயர். பலர் எமன் என்றும் கூட மகா செல்லமாக அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு அதிமுகவை ஆட்டிப் படைத்தவர் நடராஜன் - ஒரு காலத்தில்.

இவர் ஆரம்பத்தில் மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலராக இருந்தார். அப்போதுதான் கலெக்டராக இருந்த சந்திரலேகாவுடன் நட்பு ஏற்பட்டு அவர் மூலம் தனது மனைவி சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் நடராஜன்.

பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு விரட்டப்பட்டார். அதன் பிறகு புதிய பார்வை என்ற மாதம் இருமுறை இதழின் ஆசிரியரானார். தொடர்ந்து இதை நடத்தி வருகிறார்.



சசிகலா

8வது வகுப்பு வரை படித்த சசிகலா, கணவருக்கு அடங்கிய மனைவியாக மட்டுமே இருந்து வந்தவர். இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் அசைக்க முடியாத 'சகோதரியாக' மாறுவோம் என்பதை இவர் நிச்சயம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் கணவர் நடராஜனின் புண்ணியத்தால் ஜெயலலிதாவின் நிழலாக மாறி கடந்த 29 ஆண்டுகளாக அவரை ஆட்டிப் படைத்த பெருமைக்குரியவர்.

எம்.ராமச்சந்திரன்

இவர் நடராஜனின் தம்பி. தன்னால் முடிந்த வரை அதிமுக மூலம் ஆதாயம் பெற்றவர், தனது செல்வாக்கால் பல காரியங்களை இவரும் நிகழ்த்தியுள்ளதாக கூறுகிறார்கள்.



டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன். ஜெயலலிதாவிடம் கடைசியாக வந்த சசிகலா குடும்பத்தவர்களில் இவரும் ஒருவர். வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்றார் தனது அத்தை சசிகலாவின் உதவியால்.

ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அதிகார மையமாக மாறினார் வெங்கடேஷ். கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்பட பல விஷயங்களிலும் வெங்கடேஷின்ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

வெங்கடேஷால் அவமானப்படுத்த மூத்த தலைவர்கள் பலர் ஒதுங்கிப் போயினர். பலர் கட்சியை விட்டும் வெளியேறினர். ஜெயலலிதா தொடங்கிய இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையின் நிர்வாகியாக இவர் இருந்து வந்தார்.

டிவி மகாதேவன்-தங்கமணி

இந்த இருவரும் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் பிள்ளைகள் ஆவர். இவர்கள் ஆடிய ஆட்டமும் கொஞ்சநஞ்சமில்லை. அதிலும் மகாதேவின் ஆட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் அதிகமாகவே இருந்து வந்தது. இவர்களும் இப்போது ஆப்பு தரப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.




'மகா பெரியவர்' தினகரன்!

சசிகலா குருப்பிலேயே தனி செல்வாக்குடன் இருந்தவர் டிடிவி தினகரன். இவரை பெரியகுளம் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அந்த அளவுக்கு செல்லப் பிள்ளையாக வைத்திருந்தார். ஒரு காலத்தில் சசிகலாவுக்கு அடுத்து தினகரனுக்குத்தான் அதிமுகவில் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.

ராஜ்யசபா எம்.பியாகவும் இவரை ஆக்கியவர் ஜெயலலிதா. இவர் சசிகலாவின் அக்காள் வனிதாவின் மூத்த மகன் ஆவார்.




தத்துப் பிள்ளை சுதாகரன்

வனிதாவின் 2வது மகன் பாஸ்கரன் மற்றும் கடைசி மகன் சுதாகரன் ஆகியோரும் அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இவர்களில் சுதாகரனுக்கு, ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாகும் அதிர்ஷடமும் அடித்தது.

நடராஜன் தம்பி மகன்கள் குலோத்துங்கன், ராஜராஜன்

இதேபோல நடராஜனின் தம்பி மகன்களான குலோத்துங்கன், ராஜராஜன் ஆகியோரும் கூட அதிமுகவில் ஓரளவு செல்வாக்கோடு வலம் வந்தவர்கள்தான். இப்போது கூட்டத்தோடு கூட்டமாக இவர்களையும் விரட்டி விட்டார் ஜெயலலிதா.

தம்பி திவாகரன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள இன்னொருவர் திவாகரன். இவர் சசிகலாவின் தம்பி. இவர்தான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை. மன்னார்குடியில் இருக்கிறார். இவரும் அதிமுகவில் ஆடியவர்தான்.

ராவணன்

அதிமுகவின் ராவணன் என்று அதிமுகவினராலேயே கரித்துக் கொட்டப்பட்டவர் இந்த ராவணன். மிடாஸ் மது பான ஆலையில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார்கள். இவர் சசிகலாவின் சித்தப்பாவுடைய மருமகன் ஆவார். அதிமுக தலைமைக் கழகத்தில் இவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை இருந்ததாம்.

எம்.ஜி.,ஆர். உருவாக்கி வளர்த்த கட்சியை இந்த 14 பேரும்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளாளுக்குப் பங்கு போட்டு உண்மையான அதிமுகவினரை கேவலப்படுத்தி, ஓரம் கட்டி, முடக்கிப் போட்டவர்கள் என்பதால் இவர்களது நீக்கத்தால் உண்மையான அதிமுகவினர் மனம் குளிர்ந்துள்ளனர்.

Monday, December 19, 2011

ஆட்சியிலும் கட்சியிலும் 'நந்தி'யாக சசி - ஜெ.!



முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.

நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

டிஸ்கி 1: இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

டிஸ்கி 2: சசிகலா நீக்கம்- அதிமுகவினர் பெரும் உற்சாகம்-மொட்டை அடித்துக் கொண்டாட்டம்!

பேஸ்புக் பயன்படுத்த ஒபாமா தடா!





அமெரிக்க அதிபர் ஒபாமா தனது 2 மகள்களும் 18 வயதை அடையும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தத் தடை விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மால்யாவுக்கு வயது 13, இளைய மகள் ஷாஷாவுக்கு வயது 10. அவர்கள் இருவரும் 18 வயதை எட்டும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்று ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் குடும்ப விஷயங்கள் அடுத்தவர்களுக்கு தேவையில்லாமல் தெரிவிக்கப்படுவதை தடுக்க முடியும் என்று அவர் கருதுகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நமக்கு யார் என்றே தெரியாதவர்களிடம் நாம் ஏன் நம் குடும்ப விஷயங்களைத் தெரிவிக்க வேண்டும். அதனால் தான் எனது மகள்களை 18 வயதாகும் வரை பேஸ்புக்கை பயன்படுத்தக் கூடாது என்றேன். இன்னும் 4 ஆண்டுகளில் இது பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றார்.

ஒபாமாவின் பேஸ்புக் பக்கத்தில் 24 மில்லியன் பேர் லைக் பட்டனை அழுத்தியுள்ளனர். இந்த வார துவக்கத்தில் அண்மையில் எடுத்த தனது குடும்ப போட்டோவை பேஸ்புக்கில் போட்டு புதிய ஒபாமா குடும்ப போட்டோ என்று பெயரிட்டிருந்தார். அந்த போட்டோவுக்கு 71,000 பேர் லைக் கொடுத்திருந்தனர், 11,000 பேர் கமென்ட் எழுதியிருந்தனர்.