நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Tuesday, December 27, 2011

வேதாளத்தின் கேள்வி!



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், வேதாளத்தை இறக்கி தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தார். வழக்கம்போல கலகலவென சிரித்த வேதாளம், ‘விக்கிரமாதித்தா... உனக்கும் எனக்கும் நடக்குற இந்த நீயா, நானா போட்டி ரொம்ப சுவாரஸ்யமா இருக்குல்ல...” என் பேச்சை ஆரம்பித்தது.
 

“விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்! ஊழலுக்கு பெயர் போன ஒரு தேசம். அந்நாட்டைச் சேர்ந்த ஒரு மாநிலத்தில் வயதான ஒரு குறுநில மன்னன் பல்லாண்டுகளாக ஆட்சி செய்து வந்தார். மத்திய கூட்டாட்சியிலும் பங்கு வகித்து வந்தார்! கருணைக்கும் நிதிக்கும் தாந்தான் அதிபதி என்று சொல்லிக் கொள்ளும் அவர், தனது வாரிசு அரசியலுக்கும் பெயர்போனவர்! மகன்கள், மகள், பேரன்... என் ஒருவர் விடாமல் பதவி வழங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்தார்! வாரிசு அரசியல் என்றாலே ‘அடுத்த வாரிசு யார்?’ என்ற கேள்வி எழுவது இயற்கைதானே? ‘அடுத்த வாரிசு யார்?’ என் அவர் பேரனது பத்திரிகை, கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டது!

இது போதாதா? வாரிசுகளுக்குள் கடும் போர் மூண்டது! ஒரு நகரமே தீப்பற்றி எரிந்தது! போரில் 3 அப்பாவிகள் பலியாகினர்! கோபமடைந்த தாத்தா எவ்வளவு சொல்லியும் கேட்காத அந்த பேரனின் மத்திய மந்திரி பதவியைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், தனது குடும்பத்தை விட்டே ஓரம் கட்டினார்! பதிலுக்கு தனது மகளின் நம்பிக்கையைப் பெற்ற ராசா என்பவரை மத்திய மந்திரியாக்கினார்! அதிர்ச்சி அடைந்த பேரனோ தனது குடும்ப ஊடகங்கள் மூலம் ராசாவின் ஊழல்களை உலகிற்கே வெளிச்சம் போட்டுக்காட்டினார். முடிவில் ராசாவும், தாத்தா மன்னரின் மகளுமே சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிய நிலை வந்தது!

ஆனால் அந்த ஊழல் சம்பந்தப்பட்ட புலனாய்வில்தான் தெரியவந்தது பேரனும் ஊழலில் சளைத்தவர் அல்ல என்று! பேரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை எனது குடும்ப வியாபாரத்திற்கு திருப்பி விட்டிருக்கிறார் என்று!

குறுநில மன்னரின் மகள் மட்டும் ஜாமீனில் வந்திருக்கிறார்! ராசா எப்போது வெளியில் வருவார் என்று யாருக்கும் தெரியாது! ஆனால் மகளின் மீதும் ராசா மீதும் கோபம் கொண்ட, நடவடிக்கை எடுக்க கோரிய மத்திய ஆட்சியாகட்டும், அந்நாட்டின் புலனாய்வுத் துறையாகட்டும், எதிர்க்கட்சிகளாகட்டும், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளாகட்டும் கைநிறைய ஆதாரங்கள் இருந்தும் - பேரன்கள் செய்த மோசடிகளை மட்டும் மறந்தும், மறைப்பதும் ஏன்? நாடே கைகட்டி வாய்பொத்தி நிற்கும் மர்மம் என்ன? விக்ரமாதித்தா!இந்த வருடத்தின் மிகப்பெரிய இந்த கேள்விக்கு விடை தெரிந்தும் நீ வாய்திறக்காமல் இருந்தால் உனது தலை வெடித்து சிதறிவிடும்” - என்று எச்சரித்த வேதாளம், மெளனம் கலைந்து விர்ர்ர்... என் மீண்டும் மரத்தை நோக்கி பாய்ந்தது!


நன்றி : தினமணி

Monday, December 26, 2011

அமைச்சரவை விரைவில் மாற்றம்



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் அதிமுகவை விட்டும், போயஸ் தோட்டத்தை விட்டும் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் ஏன் மாற்றப்படவில்லை என்று பொது மக்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஆளும் கட்சி வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி மாற்றப் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர்கள்:

போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்,
தொழில்துறை அமைச்சர் வேலுமணி,

வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி

வனத்துறை அமைச்சர் பச்சமால்,

வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்

உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம் அல்லது அமைச்சர்கள் வகிக்கும் துறைகளாவது மாற்றப்படும் என்று கூறப்படுகின்றது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டெல்லி புறப்பட்டதும் இந்த மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

மனசாட்சி : 6 மாதத்தில் 7வது முறையாக மாற்றம் 

செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.



வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தி விட்டனர்.

பாதுகாப்பு கருதி வாகனப் போக்குவரத்தை போலீஸார் முற்றிலும் நிறுத்தியதால் கிண்டி ராஜ்பவன் முதல் கடற்கரை காமராசர் சாலை முழுவதும் ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா சாலை, அதன் பக்கவாட்டுச் சாலைகள், மீனம்பாக்கம், பல்லாவரம் வரை வாகனங்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி நின்றன.

எந்த வாகனமும் போக முடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் கூட போக முடியாமல் திணறி விட்டன. அலுவலகளுக்குச் செல்ல கிளம்பியோர் வாகனங்கள் தேங்கிப் போனதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி விட்டனர்.

பிரதமர் வருகைக்காக இப்படியா போக்குவரத்தை முற்றிலும் நிறுத்துவது என்று மக்கள் குமுறித் தள்ளி விட்டனர்.

மனசாட்சி: செயலற்ற பிரதமரால் சென்னை செயலிழந்தது.

இவரு தான் செயல் படலைனா போற இடம் எல்லாமுமா # டவுட்டு

தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் கைது



பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை விஜயகாந்த் அறிவித்திருந்தார்.அதன்படி கருப்புக் கொடி காட்டுவதற்காக இன்று காலை கிளம்பிய விஜயகாந்த்தை புறப்பட்ட இடத்திலேயே கைது செய்து கொண்டு சென்று விட்டது போலீஸ்.

இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவை, கரூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, திருச்சி, திண்டுக்கல், அவினாசி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட பல ஊர்களிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னையிலும் தேமுதிகவினர் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கைதானார்கள்.


மனசாட்சி: அரசியலுக்குப் புகுந்த பின்னர், அரசியல்வாதியாக மாறிய பின்னர், எம்.எல்.ஏவான பின்னர், எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் முதல் முறையாக கைதாகியுள்ளார் விஜயகாந்த்

Tuesday, December 20, 2011

20 வருடமாக அதிமுகவை ஆட்டிப் படைத்த 14 பேர்!!



திமுகவில் அவமானப்பட்டு, தனது உழைப்பெல்லாம் சுரண்டப்பட்ட பின்னர் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர், பின்னர் ஆரம்பித்து தமிழகத்தின் புதிய அரசியல் சக்தியாக மாறிய அதிமுகவை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் பிடியிலிருந்து கட்சி முதல் முறையாக விடுபட்டுள்ளது. சசி குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர்தான் இந்தக் கட்சியை இத்தனை காலமாக ஆட்டிப்படைத்து வந்தவர்கள்.

அந்த 14 பேர் குறித்த ஒரு அலசல்...



எம்என் எனப்படும் நடராஜன்

இந்த குருப்பின் தலைவராக முதலில் இருந்தவர் எம்.நடராஜன். இவருக்கு அதிமுக வட்டாரத்தில் முன்பு எம்என் என்றுதான் செல்லப் பெயர். பலர் எமன் என்றும் கூட மகா செல்லமாக அழைப்பதுண்டு. அந்த அளவுக்கு அதிமுகவை ஆட்டிப் படைத்தவர் நடராஜன் - ஒரு காலத்தில்.

இவர் ஆரம்பத்தில் மாவட்ட செய்தித் தொடர்பு அலுவலராக இருந்தார். அப்போதுதான் கலெக்டராக இருந்த சந்திரலேகாவுடன் நட்பு ஏற்பட்டு அவர் மூலம் தனது மனைவி சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் நடராஜன்.

பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு விரட்டப்பட்டார். அதன் பிறகு புதிய பார்வை என்ற மாதம் இருமுறை இதழின் ஆசிரியரானார். தொடர்ந்து இதை நடத்தி வருகிறார்.



சசிகலா

8வது வகுப்பு வரை படித்த சசிகலா, கணவருக்கு அடங்கிய மனைவியாக மட்டுமே இருந்து வந்தவர். இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் அசைக்க முடியாத 'சகோதரியாக' மாறுவோம் என்பதை இவர் நிச்சயம் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் கணவர் நடராஜனின் புண்ணியத்தால் ஜெயலலிதாவின் நிழலாக மாறி கடந்த 29 ஆண்டுகளாக அவரை ஆட்டிப் படைத்த பெருமைக்குரியவர்.

எம்.ராமச்சந்திரன்

இவர் நடராஜனின் தம்பி. தன்னால் முடிந்த வரை அதிமுக மூலம் ஆதாயம் பெற்றவர், தனது செல்வாக்கால் பல காரியங்களை இவரும் நிகழ்த்தியுள்ளதாக கூறுகிறார்கள்.



டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன். ஜெயலலிதாவிடம் கடைசியாக வந்த சசிகலா குடும்பத்தவர்களில் இவரும் ஒருவர். வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரும் செல்வாக்கைப் பெற்றார் தனது அத்தை சசிகலாவின் உதவியால்.

ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்துக்குள் வந்து சேர்ந்த குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அதிகார மையமாக மாறினார் வெங்கடேஷ். கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்பட பல விஷயங்களிலும் வெங்கடேஷின்ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

வெங்கடேஷால் அவமானப்படுத்த மூத்த தலைவர்கள் பலர் ஒதுங்கிப் போயினர். பலர் கட்சியை விட்டும் வெளியேறினர். ஜெயலலிதா தொடங்கிய இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையின் நிர்வாகியாக இவர் இருந்து வந்தார்.

டிவி மகாதேவன்-தங்கமணி

இந்த இருவரும் சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகனின் பிள்ளைகள் ஆவர். இவர்கள் ஆடிய ஆட்டமும் கொஞ்சநஞ்சமில்லை. அதிலும் மகாதேவின் ஆட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் அதிகமாகவே இருந்து வந்தது. இவர்களும் இப்போது ஆப்பு தரப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.




'மகா பெரியவர்' தினகரன்!

சசிகலா குருப்பிலேயே தனி செல்வாக்குடன் இருந்தவர் டிடிவி தினகரன். இவரை பெரியகுளம் எம்.பியாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அந்த அளவுக்கு செல்லப் பிள்ளையாக வைத்திருந்தார். ஒரு காலத்தில் சசிகலாவுக்கு அடுத்து தினகரனுக்குத்தான் அதிமுகவில் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது.

ராஜ்யசபா எம்.பியாகவும் இவரை ஆக்கியவர் ஜெயலலிதா. இவர் சசிகலாவின் அக்காள் வனிதாவின் மூத்த மகன் ஆவார்.




தத்துப் பிள்ளை சுதாகரன்

வனிதாவின் 2வது மகன் பாஸ்கரன் மற்றும் கடைசி மகன் சுதாகரன் ஆகியோரும் அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கோடு திகழ்ந்தவர்கள். இவர்களில் சுதாகரனுக்கு, ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாகும் அதிர்ஷடமும் அடித்தது.

நடராஜன் தம்பி மகன்கள் குலோத்துங்கன், ராஜராஜன்

இதேபோல நடராஜனின் தம்பி மகன்களான குலோத்துங்கன், ராஜராஜன் ஆகியோரும் கூட அதிமுகவில் ஓரளவு செல்வாக்கோடு வலம் வந்தவர்கள்தான். இப்போது கூட்டத்தோடு கூட்டமாக இவர்களையும் விரட்டி விட்டார் ஜெயலலிதா.

தம்பி திவாகரன்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள இன்னொருவர் திவாகரன். இவர் சசிகலாவின் தம்பி. இவர்தான் வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை. மன்னார்குடியில் இருக்கிறார். இவரும் அதிமுகவில் ஆடியவர்தான்.

ராவணன்

அதிமுகவின் ராவணன் என்று அதிமுகவினராலேயே கரித்துக் கொட்டப்பட்டவர் இந்த ராவணன். மிடாஸ் மது பான ஆலையில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்கிறார்கள். இவர் சசிகலாவின் சித்தப்பாவுடைய மருமகன் ஆவார். அதிமுக தலைமைக் கழகத்தில் இவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை இருந்ததாம்.

எம்.ஜி.,ஆர். உருவாக்கி வளர்த்த கட்சியை இந்த 14 பேரும்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளாளுக்குப் பங்கு போட்டு உண்மையான அதிமுகவினரை கேவலப்படுத்தி, ஓரம் கட்டி, முடக்கிப் போட்டவர்கள் என்பதால் இவர்களது நீக்கத்தால் உண்மையான அதிமுகவினர் மனம் குளிர்ந்துள்ளனர்.

Monday, December 19, 2011

ஆட்சியிலும் கட்சியிலும் 'நந்தி'யாக சசி - ஜெ.!



முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.

நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

டிஸ்கி 1: இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

டிஸ்கி 2: சசிகலா நீக்கம்- அதிமுகவினர் பெரும் உற்சாகம்-மொட்டை அடித்துக் கொண்டாட்டம்!

Sunday, December 11, 2011

தமிழர்களை சுட கேரள போலீசாருக்கு உத்தரவு



கேரளாவில் உள்ள குமுளிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக போராட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் எல்லையில் குவிந்த தமிழக மக்கள் யாரும் குமுளிக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எல்லையில் குவிந்த கிராம மக்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்ப சிறப்பு பேருந்துக்கு தமிழக போலீசார் ஏற்பாடு செய்தனர்.

Monday, December 5, 2011

ஐய்யோ சாமி - பதிவர்களே உங்களுக்காவது புரியுதா??

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது :

முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம்; முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக 1998ம் ஆண்டு நாள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன்; அந்த வழக்கில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அணையின் நீர் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; இதனை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை; அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தற்போது அணை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது;

இதே போன்று கூடங்குளம் அணுமின் நிலையம் வர கூடாது என சிலர் பிரச்னை செய்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்;

தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது;

சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது; அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்;

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவிற்கு குற்றம் செய்துள்ளாரோ அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார்.

 இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

Sunday, December 4, 2011

ஸ்டாலின் மீதான வழக்கு-ஆந்திர தொழில் அதிபரை விசாரிக்கும் போலீஸ்

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான சொத்து அபகரிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆந்திர தொழிலதிபர் வேணுகோபால ரெட்டியை விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் படை ஒன்று ஹைதராபாத் விரைந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரிகுமார், தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால ரெட்டி, ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட வீடு வேணுகோபால ரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்பதிவாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரெட்டியை விசாரிக்க ஹைதராபாத்துக்கு போலீஸ் படை ஒன்று விரைந்துள்ளது.

பெரும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரெட்டி வீடு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரிய வரும் என்பதால் ரெட்டியிடம் நடக்கும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Saturday, December 3, 2011

பலமான வரவேற்பு காத்திருக்கிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி 195 நாட்கள் டெல்லி திகார் சிறையிலிருந்து ஜாமீனில் நவம்பர் 29-ம் தேதி விடுதலையாகியிருக்கும் கனிமொழி இன்று டிசம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார்.

அவரை வரவேற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தி.மு.க.வினரை வரும்படி ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் கனிமொழியை தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் வரை ஊர்வலமாக அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியாக விமான நிலையத்திலிருந்து அறிவாலயம் வரை தொடர்ச்சியாக சரம் சரமாக பட்டாசு வெடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அறிவாலயம் வந்த பிறகு 1 மணி நேரம் கட்சியினருடன் அமர்ந்து பேசி அவருக்கு என்ன பதவி தரவேண்டும் என்ற முடிவும் எடுக்கப்படவிருக்கிறது.

சனிக்கிழமை கனிமொழிக்கு மகுடாபிஷேகம் நடந்தாலும் ஆச்சரியம் பட முடியாது?

பின்பு அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக சி.ஐ.டி. காலனிக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கே குடும்பத்தினரின் முக்கியமான நண்பர்களைச் சந்தித்து பேச இருக்கிறார்.

பின்னர், பிற்பகலில் தி.மு.க.வின் ’நிரந்தர’ உணவுத்துறை அமைச்சரான ஏ.வ. வேலு ஏற்பாடு செய்திருக்கும் சரவண பவன் ஹோட்டலின் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.


அரசியலில் இது எல்லாம் சகசமப்பா

`தந்தையும் தம்பியும்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.


சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

புத்தகத்தை பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன்,

தி.மு.க.வில் இருந்து விலகி நிற்கும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் தாமிரா தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் நாளந்தா பதிப்பக ஆசிரியர் பொ.தங்கபாண்டியன் நன்றியுரை வழங்கினார்.


முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, வேல்முருகன் ஆகியோர் கைக்குலுக்கி வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றனர்.

Wednesday, November 30, 2011

முல்லைப் பெரியாறு - தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்

தமிழகத்தின் நிலையோ, பார்லிமென்டில் நேற்று தலைகீழாக இருந்தது. கேரள எம்.பி.,க்களின் வேகத்தை பார்த்துவிட்டு, தமிழக எம்.பி.,க்களும் காந்தி சிலை அருகே தர்ணா செய்யப் போகின்றனர் என்ற செய்திபரவியது.அங்கு சென்று பார்த்தால், திருமாவளவன் தலைமையில் கோவை நடராஜன், தென்காசி லிங்கம், ஈரோடு கணேசமூர்த்தி என, நான்குபேர் தர்ணாவில் அமர்ந்திருந்தனர். "புரளியை கிளப்பாதே, பொய் செய்தியை பரப்பாதே' என, அந்த நான்கு பேர் மட்டுமே கோஷமிட்டபடி இருந்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கே.எஸ். அழகிரி அங்கு வந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

போட்டி தர்ணா:

இவர்களுக்கு போட்டியாக, சில அடி தூரத்தில் கேரளா எம்.பி.,க்கள் 20க்கு மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர். சில நிமிடங்களில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அகமது, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கேரளா எம்.பி.,க்களுக்கு தார்மீக ஆதரவு அளித்துவிட்டு, பின்னர், தமிழக எம்.பி.,க்களிடம் வந்து, "தண்ணீர் தருகிறோம், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என, சிரித்தபடியே திருமாவளவனிடம் கூறிச் சென்றனர்.அடுத்த அரைமணி நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர் பிரச்னை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக, தனித்தனி மனுக்களை டி.ஆர்.பாலு தலைமையில் அளித்துவிட்டு வந்தனர்.அங்கும் திருமாவளவன் வந்திருந்தார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் அழகிரி, சித்தன், விஸ்வநாதன், ராமசுப்பு, மாணிக் தாக்கூர், ஆருண் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களும்தங்கள் பங்கிற்கு மனு அளித்துவிட்டு சென்றனர்.முல்லைப் பெரியாறு அணை
பிரச்னையில், இப்படி தமிழக எம்.பி.,க்கள் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளுக்கொரு திசையில் நின்றபடி, தனி ஆவர்த்தனம் வாசித்தபடி உள்ளனர். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில், அரசியல் ஒற்றுமை காட்டி, தற்போதைக்கு கேரளா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அழைப்பை நிராகரித்த எம்.பி.,க்கள் :கேரள எம்.பி.,க்களுக்கு பதிலடி தர, காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் முடிவை எடுத்து, அது பற்றி தி.மு.க., எம்.பி.,க்களுக்கும், திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.அவர்களோ, "நாங்கள் பிரதமரை சந்தித்து மனு தரப்போகிறோம்' எனக் கூறிவிட்டு, தர்ணாவில் பங்கேற்காமல் நாசூக்காக கழன்றனர். அ.தி.மு.க., எம்.பி.,க்களை அழைத்த போது, "அம்மாவிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் வரமுடியாது' என்று சொல்லி விட்டனர்.இடதுசாரி எம்.பி.,க்களில் கூட லிங்கமும், நடராஜனும் மட்டுமே பங்கேற்றனர். இடதுசாரி மூத்த எம்.பி.,க்களான டி.ராஜா மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வரவில்லை.கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சென்று, பிரதமரை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினர். ஏ.கே.அந்தோணி கூட இவ்விஷயமாக பிரதமரிடம் பேசியுள்ளார்.

Tuesday, November 29, 2011

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி.

கனிமொழியின் விடுதலையே தமிழ் இனத்தின் விடுதலையாக கருதி மகிழ்ந்துக் கொண்டிருக்கும் மு.கருணாநிதியை,

 

கனிமொழி ஜாமீனில் விடுதலை ஆனதுமே, சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் குலோப் ஜாமுனும் ஜாங்கிரியும் கொடுத்து கட்சியினர் கொண்டாடுகிறார்களே. இதை யாராவது தடுத்திருக்க வேண்டாமா?

கனிமொழி தமிழ்நாட்டுக்கு எதிராக நடந்த கொடுமையை கண்டித்து சிறைக்குப் போனாரா? இல்லை மத்திய அரசின் அடக்கு முறையை எதிர்த்து சிறைக்கு போனாரா?

உலகத்தையே உலுக்கி ய ஊழல் குற்றச்சாட்டில், ஏ-2 அதாவது இரண்டாவது குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி கேட்டதும் கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் இனிப்பு கொடுத்து கொண்டாடுவது முறையா? என்பதை தி.மு.க. சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கனிமொழி இன்று சிறையிலிருந்து வெளியே வந்தாலும் கோர்ட்டு விசாரணைகளில் பங்கேற்றுவிட்டு வரும் டிசம்பர் 2ம் தேதியான வெள்ளிக்கிழமை மாலை அல்லது டிச.3ம் தேதியான சனிக்கிழமை காலையில் தான் சென்னை திரும்புகிறார்.


டெல்லியிலிருந்து அவரை அழைத்து வர துரைமுருகன் தலைமையிலான குழுவை நேற்று இரவே அனுப்பி வைத்துவிட்டார் தி.மு.க. தலைவர். வெள்ளிக்கிழமை மாலை வரும் கனிமொழிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ரகசிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அவர் வந்ததும் ஓரிரு மாதங்களில் கட்சியின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் அல்லது துணைப் பொதுச் செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதாவது ஒரு பதவியைத் தரப்போகிறார்கள். இதில் மாற்றமில்லை.

ஆனால் கலைஞர் என்ன சொல்கிறார், “ சிறையிலிருந்து வெளியே வரும் கனிமொழிக்கு பதவி கிடைக்குமா ?”என்று நிருபர்கள் கேள்வி கேட்டால், “ நான் சர்வாதிகாரி இல்லை. எல்லோரும் சேர்ந்ததுதான் கட்சி. எனவே, கனிமொழிக்கு பதவி அளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும்”. அந்தக் கட்சி எது என்பது தான் தி.மு.க. தொண்டர்களின் கேள்வி.

அடடா… அடடா… கட்சியை கேட்டா தயாநிதி மாறனை எம்.பி.யாக்கி, மத்திய அமைச்சராக்கினீர்கள்?

கட்சியை கேட்டா, கனிமொழியை எம்.பி.யாக்கினிரீகள்?

kani-888bகட்சியை கேட்டா, அழகிரியை எம்.பி. தேர்தலில் நிற்க வைத்து மத்திய அமைச்சராக்கினீர்கள்?

அட… கட்சியை கேட்டா மந்திரி சபையிலிருந்து தூக்கிய டாக்டர் பூங்கோதை ஆலடி அருணாவுக்கு மீண்டும் மந்திரி பதவி கொடுத்தீர்கள்?

அட… கட்சியை கேட்டா துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறையை பறித்துக் கொண்டு நீங்களே வைத்துக் கொண்டீர்கள்.

அட… கட்சியை கேட்டா பா.ம.க. கட்சியை மீண்டும் கூட்டணியில் சேர்த்தீர்கள். கல்யாண பத்திரிகை வைக்க வந்த ராமதாஸை கோழி அமுக்குவது போல அமுக்கிவிட்டு… இப்படி அரசியல் செய்வதற்கு பெயர் என்ன?

“நான் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல” – இன்னும் எத்தனை காலம் தான் இந்த வார்த்தை ஜாலங்களை சொல்லி கட்சியை நடத்தப் போகிறீர்களோ தெரியவில்லை.

சரி.. போகட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

சிறையில் இருக்கும் போதே கனிமொழிக்கு என்ன பதவி கொடுக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு, கனிமொழிக்கு பதவியளிப்பது தொடர்பாக கட்சியே முடிவு செய்யும் என்று கருணாநிதி கதைக்கிறார் என்றால் யாராவது நம்புகிறீர்களா?

கனிமொழிக்கு பதவி தரப்போகும் கட்சி எது தெரியுமா? அதில் உறுப்பினர்கள் யார் யார் தெரியுமா?

கட்சியின் பெயர்: க.க.ரா.மு.க.

கனிமொழிக்கு பதவி தரும் கட்சியில் மூன்றே மூன்று உறுப்பினர்கள் தான். ஒருவர் கருணாநிதி இரண்டாவது ராசாத்தி, மூன்றாவது கனிமொழி.

என்னது கட்சியின் பெயர் புரியவில்லையா?

கருணாநிதி கனிமொழி ராசா(த்தி) முன்னேற்றக் கழகம்.

இப்படியே இருங்க. கட்சி கட்சி சூப்பராக இருக்கும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் இந்த கொடுமை என்றால், டெல்லியில் இன்னும் கொடுமையான காட்சிகளை காணலாம்.

டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் இரண்டு நாள் கூட்டம். இதில், சிதம்பரம் “வயதானவர்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி விட்டு இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்” அதே கூட்டத்தில் ராகுல் பேசும்போது அரசியலில் தான் மிகப்பெரிய ஊழல் நிலவுகிறது. ஏராளமான இளைஞர்கள் அரசியலுக்கு ஈடுபடுவது மூலம் ஊழலை ஒழிக்க முடியும்” என்கிறார்.

இதையெல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராசா, கனிமொழி, ஷரத் குமார், கரீம் மொரானி, ஆஸிஃப் பல்வா, சாஹித் பல்வா ஆகியோர்களை பார்த்த பிறகு கூட ராகுல் இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் ஊழல் இருக்காது என்று நம்புகிறாரா?


கட்சியில பெரிய பதவி என்ன கொடும்மை இது

திமுக ராஜ்யசபா எம்பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி 2 ஜி ஸ்பெட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாத காலமாக சிறையில் இருக்கும் கனிமொழி ஜாமீன் கோரி பலமுறை நீதிமன்றக் கதவை தட்டியும் ஜாமீன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதி மன்றம் இன்று கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியை ராசாத்தி அம்மாளிடம் பகிர்ந்து கொண்டேன் என்றார்.

கட்சியில் பதவி?:

கனிமொழிக்கு கட்சியில் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அது பற்றி பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

ராசாவின் ஜாமீன் பற்றி எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு ஜாமீன் பற்றி ராசா எதுவும் பேசவில்லை என்று கருணாநிதி கூறினார்.

வரவேற்பு அளிக்க முடிவு:

ஆறுமாத காலம் திகார் சிறையில் இருந்து விட்டு வரும் கனிமொழிக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கனிமொழி சென்னை வரும் போது கண்டிப்பாக வரவேற்பு அளிக்கப்படும் என்றார் கருணாநிதி.

கனிமொழியுடன் தொலைபேசியில் கருணாநிதி பேச்சு:

இந் நிலையில் கனிமொழியுடன் கருணாநிதி தொலைபேசியிலும் பேசினார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் திமுகவினர் இனிப்பு வழங்கி கனிமொழியின் ஜாமீன் விடுதலையைக் கொண்டாடினர்.

பெரிய நிம்மதி-டி.ஆர்.பாலு:

இது குறித்து திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறுகையில், கனிமொழிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது திமுகவினர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. கருணாநிதிக்கு நெருக்கமானவர்களுக்கு நிம்மதியை அளிக்கக் கூடியது என்றார்.

திமுக-காங்கிரஸ் உறவு எப்படி உள்ளது என்று கேட்டதற்கு, அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் பாலு பதிலளித்தார்.

திமுக எம்பியான டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், இந்த வழக்கில் கனிமொழி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அவர் தவறு எதுவும் செய்யவில்லை என்றார்.


கொள்ளை அடிச்சுகிட்டு ஜெயிலுக்கு போய் திரும்புறவங்களுக்கு ஏதோ நாட்டுக்காக போராடி ஜெயிலுக்கு போய் திரும்புற மாதிரி வரவேற்பு , கட்சியில பெரிய பதவி என்ன கொடும்மை இது ! என்ன நடக்கு....!!

Sunday, November 20, 2011

ஓவராத் தான் சீண்டுகிறீர்கள் - விஜயகாந்த்


மதுரையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஆளுங்கட்சி எங்களை ஓவராகத் தான் சீண்டிப் பார்க்கிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள். பால், பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று காரணம் கூறினார். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதிக்கியுள்ளது என்பதை மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் பட்டியலிட்டுருப்பதை பத்திரிக்கையில் படித்து தெரிந்து கொண்டேன். ஜி.கே. வாசன் கூறியுள்ளதை நானும் கூறினால் விஜயகாந்த் காங்கிரஸ் பக்கம் போகிறான் என்று கதை கட்டிவிடுவார்கள். இதைச் சொல்வதால் நான் காங்கிரஸை ஆதரிப்பவன் என்று அர்த்தம் இல்லை.

ஜி.கே. வாசன் தெரிவித்திருப்பது போல் மத்திய அரசு மாநிலத்திற்காக சிறப்பு நிதி ஒதுக்கும். அதை திறமையாகப் பயன்படுத்த வேண்டியது மாநில அரசின் கையில் உள்ளது.

மாற்றம் வேண்டி அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்த மக்களுக்கு அது வெறும் ஏமாற்றத்தைத் தான் அளித்துள்ளது. இதை மக்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்கள் தற்போது கும்பலிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். விலையை ஏற்றுபவர்கள் அதை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு செய்திருக்க வேண்டியது தானே. திமுக அரசு செய்த தவறுகளையே அதிமுக அரசும் செய்கிறது. அண்மையில் நடந்து முடிந்த அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது ஊருக்கே தெரியும்.

நான் சட்டசபை பக்கம் வரவில்லை என்கிறார்கள். எனக்கு உடல்நலம் பாதி்ககப்பட்டுள்ளதால் தான் செல்லவில்லை. சரி, ஜெயலலிதாவும், கருணாநிதியும் எதிர்கட்சித் தலைவர்களாக இருக்கையில் எத்தனை நாட்கள் சட்டசபைக்கு வந்தார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தெரியும்.

பால், பஸ் கட்டண உயர்வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு அரசு அனுமதி மறுக்கலாம். இவ்வளவு ஏன் மதுரையில் ஒரு பேனர் வைக்க காவல்துறை அனுமதி மறுக்கிறது. பேனர் எல்லாம் வைக்கக் கூடாது என்கிறார் கமிஷனர்.

கடந்த ஆட்சியில் எப்படி காவல்துறை பாராபட்சமாக இருந்ததோ தற்போதும் அப்படியேத் தான் உள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவர்களோ கலெக்டர்கள் மாநாடு நடத்தி கலெக்டர்களுக்கு பரிசு கொடுத்து பாராபட்சத்தை தூண்டி விடுகிறார்கள். மதுரையில் அனைவருக்கும் வேண்டாதவர் என்று பெயரெடுத்த கலெக்டர் சகாயம் தற்போது ஆளுங்கட்சிக்கு சகாயம் செய்து சகாயமாகிவிட்டார்.

கமிஷனர் கண்ணப்பனும் மாறிவிட்டார். பேனர் வைப்பதை தடுப்பதால் எல்லாம் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி புகழை யாராலும் அழிக்க முடியவில்லை. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. எங்களைச் சீண்டிப் பார்க்காதீர்கள் என்றார்.

தமிழக காங்கிரஸுக்கு கேவலம்


மறைந்த பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத முக்கியத் தலைவர்களில் ஒருவரும், இரும்புப் பெண்மணி என்று உலகத் தலைவர்களால் புகழப்பட்டுவருமான இந்திரா காந்தியின் பிறந்த நாள் கூட சரியாக தெரியாமல் மக்கள் மத்தியில் கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ் கட்சி.

இந்திரா காந்தியின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியினரோ 105வது பிறந்தநாள் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிட்டு கேவலப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் இந்திரா காந்தி. அமெரிக்காவுக்கு பெரும் மிரட்டலாக விளங்கியவர். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். வங்கதேசம் என்ற ஒரு புது நாடு பிறக்க காரணமாக அமைந்தவர். சீனாவைக் கண்டு அஞ்சாமல் செயல்பட்டவர். தனது துணிச்சல் மற்றும் தைரியமான, அதிரடி போக்கால் உலகத் தலைவர்களால் பாராட்டப்பட்டவர். அனைவரின் மதிப்பையும் பெற்றவர்.

ஆனால் அப்படிப்பட்ட தலைவரின் பிறந்த நாளைக் கூட சரிவரத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் தங்கள் இஷ்டத்திற்கு 105வது பிறந்த நாள் என்று செய்திக்குறிப்பு வெளியிட்டு கேவலப்பட்டுள்ளது தமிழக காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரை இப்படியா அவமதிப்பது என்று மூத்த காங்கிரஸார் மனம் ஒடிந்து போய் நிற்கின்றனர்.

இந்த லட்சணத்தில் காமராஜ் ஆட்சியை அமைப்போம் என்று வாய் கூசாமல் பேசிக் கொள்கின்றனர் காங்கிரஸார். புதிய தலைவராக ஞானதேசிகன் பதவிக்கு வந்தவுடனேயே நடந்துள்ள இந்த குழப்பம் தமிழக காங்கிரஸாருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது.

விலை உயர்வின் "தைரிய கணக்கு...!'

கட்டண உயர்வுகளால், ஓட்டு வங்கி அரசியலுக்கு உடனடி பாதிப்புகள் இல்லை என்று கணக்கிட்டு தான், பஸ் கட்டணத்தையும், பால் விற்பனை விலையையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மின் கட்டண உயர்வை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் முடிந்துவிட்டதும், லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதும், அ.தி.மு.க., அரசுக்கு பாதுகாப்பான காலங்களாகவே உள்ளன.
மாநில அரசைப் பொறுத்தவரை, கட்டண உயர்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பப் போவதில்லை. விலை உயர்வுக்கு எதிர்க் கட்சிகளின் தாக்குதல் இப்படித் தான் இருக்கும் என எதிர்பார்த்து, பால், பஸ் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது என்று கூறுகின்றனர்.விலைகளை உயர்த்தி, மக்களுக்கு வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பிலும் இது தெளிவாகவே வெளிப்பட்டு உள்ளது. மேலும், விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் களம் இறங்குவதற்கு முன்பே, அதற்கான தவிர்க்க முடியாத காரணங்களை மக்கள் மத்தியில், நாமே எடுத்துச் செல்வோம் என முடிவு செய்து "டிவி'யில் மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார் என்றும் கூறுகின்றனர். இதனால், எதிர்க்கட்சிகளின் போராட்ட வேகத்தைக் குறைக்கவும் முதல்வர் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.மாநில அரசுக்கு, உடனடித் தேர்தல்கள் இல்லாத பாதுகாப்பான சூழ்நிலை, எதிர்க்கட்சிகளையும், மக்களையும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுவே, அதிரடி முடிவுகளின் ஒரு பகுதியாக பஸ், மின் கட்டணங்களையும், பால் விலையயும் முதல்வர் ஜெயலலிதா உயர்த்தி உள்ளதற்குக் காரணம் என்கின்றனர்.

Saturday, November 19, 2011

மிக்சி – மின்சாரம்! கிரைண்டர்- பால்! பேன் – பஸ்!

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் எல்லாமே அதிரடி தான். இலவசமாக கொடுத்தாலும் அதிரடியாகவே இருக்கும்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இலவச டிவியை அறிவித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அந்தத் தேர்தலில் இலவசத்தை கடுமையாக விமர்சித்து, ஜெயலலிதா பேசினார். அத்தேர்தலில், தி.மு.க. அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்ததது.

அடுத்த 2011ம் ஆண்டு தேர்தலில், இலவசத்தை எதிர்த்து பேசிய ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் ஆகிய மூன்றையும் இலவசமாக தருவதாக அறிவித்தார். ஆட்சிக்கும் வந்தார்.

அறிவித்த படி செப்டம்பர் மாதம் 15ம் தேதி பல ஊர்களில் இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் கிடைத்தது. இனி, மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் கிடைக்கப் போகிறது.

இப்படி இலவசமாக மக்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு, மின் கட்டணத்தை ஏற்றினால் எதிர்க்கவா போகிறார்கள்?

பஸ் கட்டணத்தை அதிகரித்தால், ஆர்ப்பாட்டமா செய்யப் போகிறார்கள்?

பால் விலையை உயர்த்தினால், மறியலா நடத்தப் போகிறார்கள்?

இந்த விலையை எப்படியும் மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். ஆமாம், இலவசம் கொடுக்கும் போது ஆர்ப்பரிக்கும் மக்கள், இந்த உயர்வை ஏற்றுக்கொண்டுத்தானே ஆக வேண்டும்.

Wednesday, November 16, 2011

திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது!

நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நடிக‌ர் ‌ரி‌‌த்‌தீ‌‌ஷை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

‌த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் குறு‌கிய கால‌த்‌தி‌ல் கொடி க‌ட்டி பற‌ந்தவ‌ர் நடிக‌ர் ‌ரி‌த்‌தீ‌ஷ். இவ‌ர் நடி‌த்த நாயக‌ன் எ‌ன்ற பட‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய வெ‌ற்‌றி பெ‌ற்றது.

இதை‌த் தொட‌ர்‌ந்து ராமநாதபுர‌ம் நாடாளும‌ன்ற தொகு‌தி‌யி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றியு‌‌ம் பெ‌ற்று ‌வி‌ட்டா‌‌ர். எ‌ம்.‌பி. ‌சீ‌ட்டை பல கோடி ரூபா‌ய் கொடு‌த்து வா‌ங்‌கியதாக அ‌ப்போது இவ‌ர் ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஸ்ரீபெ‌ரு‌ம்புதூ‌ர் அருகே 90 ‌செ‌ன்‌ட் ‌நில‌த்தை அபக‌ரி‌த்ததாக நடிக‌ர் ‌‌‌‌ரி‌‌த்‌‌தீ‌ஷ் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்த கா‌ஞ்‌சிபுர‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட நடிக‌‌ர் ‌‌‌ரி‌த்‌தீ‌ஷ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு புழ‌ல் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இதுவரை ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்களை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வ‌ந்த முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா த‌ற்போது முத‌ன் முறையாக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

Monday, November 14, 2011

டெல்லிக்கு ஓடிய அழகிரி!!

திமுக வட்டாரத்திலிருந்து நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள முதல் பிரமுகர் என்ற பெருமையை பொட்டு சுரேஷ் பெற்றுள்ளார். இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக மதுரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை சந்திக்க விரும்பாத மு.க.அழகிரி சென்னை வழியாக டெல்லிக்குப் போய் விட்டார்.

பாளையங்கோட்டை சிறைக்கு வந்த பொட்டுவின் ஆதரவாளர்கள், சுரேஷை ஆரவாரத்தோடு மதுரைக்கு அழைத்து வந்தனர்.

மதுரைக்கு வந்ததும் முதலில் அழகிரியைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சுரேஷ். ஆனால் இப்போது அவரை சந்திக்க விரும்பவில்லையாம் அழகிரி. இதனால் அவர் நேற்று இரவோடு இரவாக மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். இன்று காலை டெல்லிக்குப் போயே போய் விட்டார்.