நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, December 5, 2011

இந்தியர்களிடம் 1 கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்

"இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது' என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும்.

 இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம். கடந்த 2009 -10ம் ஆண்டில், இந்தியர்களின் சேமிப்பில், 7 முதல் 8 சதவீதம் தங்கமாக இருந்தது.

தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அதை ஒரு சொத்தாக சேமித்து வைப்பதில், இந்தியர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஐய்யோ சாமி - பதிவர்களே உங்களுக்காவது புரியுதா??

முல்லை பெரியாறு விவகாரத்திற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர் கூறியதாவது :

முல்லை பெரியாறு அணை விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதியே காரணம்; முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக 1998ம் ஆண்டு நாள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தேன்; அந்த வழக்கில் 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அணையின் நீர் தேக்கும் உயரத்தை 124 அடியாக உயர்த்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது; இதனை எதிர்த்து இதுவரை யாரும் தடை வாங்கவில்லை; அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; தற்போது அணை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது வேடிக்கையாக உள்ளது;

இதே போன்று கூடங்குளம் அணுமின் நிலையம் வர கூடாது என சிலர் பிரச்னை செய்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்;

தமிழக, கேரள மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்;

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது;

சிறையிலிருந்து திரும்பிய கனிமொழிக்கு திமுக அளித்த வரவேற்பு தேவையற்றது; அவரது ஜாமீன் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம்;

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா எந்த அளவிற்கு குற்றம் செய்துள்ளாரோ அதே அளவிற்கு உள்துறை அமைச்சர் சிதம்பரமும் குற்றம் செய்துள்ளார்.

 இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

மிக மிக அவசரம்

சார்வாள்... சார்வாள்... ரொம்ப அவரசம்... நம்ம கப்பலுக்குள்ள ஊழல் ஒண்ணா கலந்துட்டா மாதிரி கடல் தண்ணி புகுந்திடுச்சாம்... எப்பன்னாலும் கப்பலை மூழ்கடிச்சிடும்னு நம்ம ஆளுங்க ரொம்ப பயப்படறாங்க... எதுனாச்சும் வழி இருந்தா சொல்லுங்க...


அட அதுனால என்ன... இந்த சில்லறை பிரச்னையைப் போயி இப்படி கிளப்பிக்கிட்டு.........?! அடடே... நல்ல யோசனையா இருக்கே! இந்த சில்லறைப் பிரச்னையை வெச்சே சமாளிச்சிடலாமே... இருங்க அதுக்கு ஒரு வழி செய்யறேன்!

கணவர் உதவி வேண்டுமா? வலது காதில் கேளுங்கள்


நீங்கள் ஒரு வேலையை செய்யக் கோரி உங்கள் கணவரிடம் கேட்ட உடனேயே அவர், ஓகே சொல்ல வேண்டுமா? அப்படியானால், அவரது வலக்காதில் உங்கள் கோரிக்கையை வையுங்கள்.

அப்போது அவரும் மறுக்காமல் சரி என்று சொல்லிவிடுவார். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? இதுதான் உண்மை என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. இதுகுறித்து இத்தாலி நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த குழுவின் தலைவரான டாக்டர் லூக்கா டொமாசி கூறுகையில், 176 ஆண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், வலதுகாதில் கேட்ட 39 சதவீத ஆண்கள், மனைவியின் பேச்சுக்கு மதிப்பளித்து, உடனே ஓகே சொன்னது தெரிந்தது.

அதேநேரத்தில் இடதுகாதில் கேட்ட 19 சதவீதத்தினர் மட்டுமே ஓகே சொல்லியுள்ளனர். வலது காதில் கேட்கப்படும் ஒலி அனைத்திற்கும், இடப் பக்க மூளை செயல் வடிவம் கொடுக்கிறது. இதன் பணியே, நேர்மறையான செயல்பாடுகளை வடிவமைப்பது தான்.

எனவே, காரியம் நடக்க வேண்டும் எனில், வலது காதில் சொல்லுங்கள். இடது காதில் கேட்கப்படும் ஒலிகள், வலது பக்க மூளையில் செயல்வடிவம் பெறுகின்றன. இது, எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. எனவே, நோ சொல்லுங்க இடது காதுக்கு.

புகையை பற்றிய சில உண்மைகள்!!

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.

6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.

8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே Passive Smoking என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும்.

11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet) புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.

12. 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.

அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தைக் கைப்பற்றியது ஈரான் ராணுவம்

அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் விமானத்தை கைப்பற்றியிருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க விமானம் கைப்பற்றப்பட்டதாகவும், தற்போது அது தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதுகுறித்து அரபி மொழி டிவி சேனலான அல் ஆலம் கூறுகையில், ஈரானின் கிழக்கு எல்லைப் பகுதியில் இந்த விமானம் பிடிபட்டது. விமானத்தை ராணுவத்தினர் கைப்பற்றியபோது அதில் லேசான சேதம் ஏற்பட்டது. விமானம் தற்போது ஈரான் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அது தெரிவித்துள்ளது.

ஈரான் எல்லைக்குள், சட்டவிரோதமாக ஊடுறுவியதால் இந்த ட்ரோன் கைப்பற்றப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க ட்ரோன் விமானம் தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் வரவில்லை என்றும், அதில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேற்கு ஆப்கானிஸ்தான் நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்த விமானம் மாய்மானது. அதைத்தான் ஈரான் ராணுவம் பிடித்திருக்கலாம் என்று அமெரிக்க் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

அந்த விமானம் கட்டுப்பாட்டுத் தளத்திலிருந்து இயக்கி வந்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விட்டது. அதைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் அது ஈரான் பிடியில் சிக்கியிருப்பதாகவும் அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது.

முதலில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் கூறின. இருப்பினும் ஈரான் ராணுவத்திற்கு நெருக்கமான பார்ஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், விமானத்தை ஈரான் ராணுவத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டனர். விமானத்தில் லேசான சேதமே ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

ட்ரோன் என்பது ஆளில்லாத, ரிமோட் கன்ட்ரோலில் இயங்கக் கூடிய சிறிய வகை தாக்குதல் விமானமாகும். இத்தகைய விமானங்களைக் கொண்டுதான் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தலிபான் மற்றும் அல் கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் வேட்டையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

“டைட்டானிக்” கப்பலை காப்பாற்றி இருக்க முடியும்

டைட்டானிக் கப்பலை மூழ்காமல் காப்பாற்றி இருக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.  கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி டைட்டானிக்என்ற பயணிகள் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்ற அந்த கப்பலில் 2,223 பேர் பயணம் செய்தனர்.

அக்கப்பல் புறப்பட்ட 4 நாட்களில் ராட்சத பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதை தொடர்ந்து கப்பலில் துளை ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த சுமார் 1496 பேர் உயிரிழந்தனர். இந்த மிகப்பெரிய விபத்தை அப்போது தவிர்த்து இருக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கப்பல் செல்லும் வழியில் ராட்சத பனிப்பாறை இருப்பதை கப்பலின் தலைமை அதிகாரி வில்லியம் முர்டோக் பார்த்து எச்சரிக்கை தகவல் கொடுத்தார். ஆனால் கப்பலை கட்டுப் படுத்தி ஓட்டிச் செல்வதற்காக மேற்புறத் தளத்தில் பணியில் இருந்த மற்றொரு பொறுப்பு அதிகாரியிடம் இருந்து மாலுமிகளுக்கு தகவல் வர 1/2 நிமிடம் தாமதமாகி விட்டது.

அந்த 1/2  நிமிட நேரமே கப்பல் ராட்சத ஐஸ் பாறையின் மீது மோதி விபத்து ஏற்பட காரணமாகி விட்டது. அந்த அதிகாரி ராட்சத ஐஸ் பாறை இருக்கும் தகவலை உடனடியாக தெரிவித்து இருந்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

இதை பேன்ற மிகப்பெரிய விபத்துக்களும், இயற்க்கை சீற்றங்களின் போது ஏற்படும் பேரிழப்புகளும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் காலத்தாமதத்தாலும், கவனக்குறைவாலுமே நடக்கிறது என்பது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அட்ரா சக்கை.. அட்ரா சக்கை








Sunday, December 4, 2011

தனுஷின் கொலவெறி மாணவர்களைக் கெடுத்து விடும்

தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.

இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.

கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.

இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.

புருஷன் எப்படியிருக்கணும்?


வயசை பற்றி பேசினால் எந்த நடிகைகளுக்கும் பிடிக்காது. ஆனால் எல்லாருக்கும் பிடித்த த்ரிஷாவுக்கு வயசு எத்தனை இருக்கும்? கணக்கு போடுவதற்காக கைவிரல்களை மடக்கினால் அதுபோகும் இருபத்தைந்தை தாண்டி.

இந்த கல்யாண வயசையும் தாண்டிப் போய்விடுவாரோ என்ற அக்கறையால்(?) அடிக்கடி ஒரே கேள்வியை கேட்டு இம்சிக்கிறார்கள் நிருபர்கள்.
எப்பங்க கல்யாணம்?

இனிமேலும் இந்த விஷயத்தில் மவுனம் காக்க முடியாது என்று முடிவெடுத்த த்ரிஷா, பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் தனது நிபந்தனையை.

பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் வேவ் லெங்க்த் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை என்கிறார்.

த்ரிஷா சொன்னால் நாயையே கூட கட்டிக் கொள்ள ரெடி என்பார்கள் அவரது தீவிர ரசிகர்கள். இதற்கெல்லாமா அஞ்சுவது த்ரிஷா?

டிஸ்கி - ங்கொய்யால எந்த நாய்க்கு அந்த யோகமோ!?

இந்தியர்களின் கறுப்புப்பணம்


வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பண விபரங்களை அடுத்த வருடம் வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல்கள் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ மாநாடு மூலம் லண்டனில் இருந்து கலந்து கொண்ட அசாஞ்ச் கூறியதாவது, மத்திய புலனாய்வுத் துறை மின்னஞ்சல்களில் இருந்து சீன உளவுத் துறை தகவல்களைத் திருடியதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

இந்தியாவின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஒட்டுக் கேட்டு வருகின்றன. அதனால் இந்தியா பாதுகாப்பான தகவல் தொடர்பைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அசாஞ்ச் தெரிவித்தார்.

டிஸ்கி: அட சீக்கிரம் சொல்லுங்கப்பா

2ஜி வழக்கில் ப.சிதம்பரம்? - 8ம் தேதி தெரியும்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அப்போதைய நிதியமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்று கூறி சுப்பிரமணியம் சாமி தொடர்ந்துள்ள வழக்கில் 8ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் இதுதொடர்பாக சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரமும் கூட்டுச் சதி செய்துள்ளார். அவரும் முன்னாள் அமைச்சர் ராசாவும் சேர்ந்துதான் விலை நிர்ணயம் செய்துள்ளனர். எனவே ப.சிதம்பரத்தையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது சாமியின் கோரிக்கையாகும்.

இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும், ராசாவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் தொடர்பான கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை சாமி கோரியிருந்தார். அதை டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டின் உத்தரவுப்படி சிபிஐ, சாமியிடம் அளித்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 100 பக்க ஆதார ஆவணத்தை சாமி நீதிபதியிடம் சமர்ப்பித்தார். பின்னர் அவர் வாதிட்டார். அதைத் தொடர்ந்து 8ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிரமணியம் சாமி இதுகுறித்துக் கூறுகையில், ப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைப்பதா இல்லையா மற்றும் ப.சிதம்பரத்திற்கு எதிரான சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பதா இல்லையா என்பது குறித்து 8ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்றார்.

ஸ்டாலின் மீதான வழக்கு-ஆந்திர தொழில் அதிபரை விசாரிக்கும் போலீஸ்

முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான சொத்து அபகரிப்பு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆந்திர தொழிலதிபர் வேணுகோபால ரெட்டியை விசாரிப்பதற்காக சென்னை மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் படை ஒன்று ஹைதராபாத் விரைந்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரிகுமார், தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால ரெட்டி, ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தற்போது போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட வீடு வேணுகோபால ரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்பதிவாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரெட்டியை விசாரிக்க ஹைதராபாத்துக்கு போலீஸ் படை ஒன்று விரைந்துள்ளது.

பெரும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரெட்டி வீடு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரிய வரும் என்பதால் ரெட்டியிடம் நடக்கும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Saturday, December 3, 2011

பெங்களூர் சிறந்த நகரம்

இந்தியாவில் மக்கள் வசிக்க சிறந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. அதேசமயம், பாதுகாப்பில் சென்னைக்குதான் முதலிடம் கிடைத்துள்ளது.

உலகில் வாழ தகுதியான நாடு மற்றும் நகரங்களின் வரிசை குறித்து மெர்சர் என்னும் நிறுவனம் நடுத்திய கருத்துகணிப்பில் இது வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள், பாதுகாப்பு சூழல், சுற்றுச்சூழல் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் உலக அளவில் மக்கள் வசிக்க சிறந்த நகரமாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகரான வியன்னா நகரம் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூரிச், ஆக்லாந்து போன்ற நகரங்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

பெங்களூர் சிறந்த நகரம்

இந்தியாவில் மக்கள் வசிக்க ஏற்ற மிகச்சிறந்த நகரமாக பெங்களூர் முதன்மை இடத்தை பெற்றுள்ளது. இது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதன்மை இடத்தை பெற்றுள்ளது. உலக அளவில் பெங்களூர் 141 இடத்தை பெற்றுள்ளது. டெல்லி 143 வது இடத்தையும், மும்பை 144 வது இடத்தையும், சென்னை 150 வது இடத்தையும், கொல்கத்தா 151 வது இடத்தையும் பெற்றுள்ளது.

பாதுகாப்பான நகரம்
உலகிலேயே பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் ஐரோப்பாவில் உள்ள லுக்கம்பர்க் நகரம் முதன்மையிடத்தை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பெர்ன்,ஹெல்சின்கி ஜூரிச்,வியன்னா,ஜெனிவா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன.
  
சென்னை 108 வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர் 117 இடத்தையும், டெல்லியும், கொல்கத்தாவும், 127 வது இடத்தை பிடித்துள்ளன. மும்பை 142 வது இடத்தை பிடித்துள்ளது.

‌‌பெங்களூரூவில் அமைந்துள்ள ஐ,டிதுறையி்ன் வளர்ச்சிமற்றும் பாதுகாப்பான வாழக்‌கை தரம் போன்வற்றால் இந்திய நகரங்களின் வரிசையிலும் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் டெல்‌லியை ப‌ொறுத்தவரையில் அரசியல் பரபரப்பும் மும்பை வர்த்தகத்துறையில் முதலிடம் பிடித்திருப்பதாலும், சென்னை, ‌கொல்கத்தா ஆகிய நகரங்கள் வளர்ந்து வரும் தொழில் துறையாலும் முக்‌கிய இடத்தை பிடித்துள்ளன.

ஃபிரண்ட்ஷிப் Vs கேப்டன்ஷிப்


வாங்க வாங்க... மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான் அப்படின்னு தத்துவமெல்லாம் கண்டுபிடித்து உலகத்துக்கு கொடுத்த ஊர்க்காரராச்சே!  உங்க ஃபிரண்ட்ஷிப்பாலதான் இப்போ நம்ம கப்பலே ஓடிட்டிருக்குங்கிறாங்க!!


பலமான வரவேற்பு காத்திருக்கிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி 195 நாட்கள் டெல்லி திகார் சிறையிலிருந்து ஜாமீனில் நவம்பர் 29-ம் தேதி விடுதலையாகியிருக்கும் கனிமொழி இன்று டிசம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார்.

அவரை வரவேற்க தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தி.மு.க.வினரை வரும்படி ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் கனிமொழியை தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயம் வரை ஊர்வலமாக அழைத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியாக விமான நிலையத்திலிருந்து அறிவாலயம் வரை தொடர்ச்சியாக சரம் சரமாக பட்டாசு வெடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அறிவாலயம் வந்த பிறகு 1 மணி நேரம் கட்சியினருடன் அமர்ந்து பேசி அவருக்கு என்ன பதவி தரவேண்டும் என்ற முடிவும் எடுக்கப்படவிருக்கிறது.

சனிக்கிழமை கனிமொழிக்கு மகுடாபிஷேகம் நடந்தாலும் ஆச்சரியம் பட முடியாது?

பின்பு அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக சி.ஐ.டி. காலனிக்கு அழைத்துச் செல்லப்படுவார். அங்கே குடும்பத்தினரின் முக்கியமான நண்பர்களைச் சந்தித்து பேச இருக்கிறார்.

பின்னர், பிற்பகலில் தி.மு.க.வின் ’நிரந்தர’ உணவுத்துறை அமைச்சரான ஏ.வ. வேலு ஏற்பாடு செய்திருக்கும் சரவண பவன் ஹோட்டலின் விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.


பேரிக்காயின் மருத்துவம்


பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது உண்மையிலேயே பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.

வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.

பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.

சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து கணிசமான அளவு உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு: வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.
பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.

இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.

தாய்ப்பால் சுரக்க: பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.
ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

வயிற்றுப் போக்கு: உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது

சின்னத்திரையில் விஜய்


இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய், சின்னத்திரை நிகழ்ச்சியொன்றை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு விஜய் எப்படி ஒப்புக் கொண்டார் என்பது இருக்கட்டும்.... நிகழ்ச்சி என்ன? அதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொண்டால், விஜய் ரசிகர்களே இதனை வரவேற்பார்கள்.

வடநாட்டையே தன் கைக்குள் வைத்திருந்த பிரமாண்டமான நிகழ்ச்சிதான் குரோர்பதி. நிஜமாகவே இந்நிகழ்ச்சியில் வெற்றிபெற்று பணம் சம்பாதித்த புத்திசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் அங்கே. இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் அமிதாப்பச்சன் என்பதை தென்நாடும் அறியும்.

இதே போன்றதொரு நிகழ்ச்சியை கோடீஸ்வரன் என்ற தலைப்பில் தமிழில் நடத்தினார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி தோல்வியில்தான் முடிந்தது.

அதன்பின் இதே மாதிரியான நிகழ்ச்சிகளை வெவ்வேறு சேனல்கள் நடத்திக் கொண்டிருந்தாலும், முக்கியமான சேனல் ஒன்று மீண்டும் கோடீஸ்வரன் டைப் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டதாம்.
அதன்படி, நிகழ்ச்சியை பிரபலமான ஒருவரை வைத்துதான் நடத்த வேண்டும் என்பது நிகழ்ச்சியாளர்களின் ஒரே எண்ணம். நிகழ்ச்சியை நடத்த பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டாலும், அவர்களின் ‌ஒ‌ரே சாய்ஸ் விஜய் மட்டுமே.

எவ்வளவு கேட்டாலும் தர்றோம் என்று பிளாங்க் செக்கையே நீட்டினார்களாம். மாட்டேன் என்று விஜய்யும், மனசு வைங்க என்று சேனலும் மாறி மாறி பேசியதில் கடைசியில் மனம் இறங்கி வந்தாராம் விஜய்.

இப்போது மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம்.

நான் செத்தால் காங்கிரசே பொறுப்பு

நான் செத்தால், அதற்கு காங்கிரஸ் கட்சிதான் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் கிராம மக்களிடையே பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.

 
அவர் மேலும்,   ‘’நான் டெல்லி ராம்லீலா மைதானத்தில், வருகிற 27-ந் தேதியில் இருந்து 8 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.

அந்த போராட்டத்தின்போது, நான் செத்தால் அதற்கு காங்கிரசே பொறுப்பு. ஜன லோக்பால் மசோதாவை ஆதரிக்கும் கோடிக்கணக்கான சாதாரண மக்கள் என் பின்னால் நிற்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியோ, அதன் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி போடும் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடுகிறது. அவர் லோக்பால் மசோதாவை ஆராயும் பாராளுமன்ற நிலைக்குழுவை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்’’என்று கூறினார்.

அரசியலில் இது எல்லாம் சகசமப்பா

`தந்தையும் தம்பியும்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.


சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

புத்தகத்தை பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன்,

தி.மு.க.வில் இருந்து விலகி நிற்கும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் தாமிரா தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் நாளந்தா பதிப்பக ஆசிரியர் பொ.தங்கபாண்டியன் நன்றியுரை வழங்கினார்.


முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, வேல்முருகன் ஆகியோர் கைக்குலுக்கி வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றனர்.