நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label திரையுலகம். Show all posts
Showing posts with label திரையுலகம். Show all posts

Thursday, March 1, 2012

பவர் ஸ்டார் ஆனந்த தொல்லையாக..வந்துட்டார்



மக்களே ரெடியா...வருகிறார் பவர் ஸ்டார்

ஆனந்த தொல்லை....



இதோ உங்களுக்கான,

உங்களுக்காக சிறப்பு காட்சி

http://www.youtube.com/watch?v=z16jBbX3iME&feature=player_embedded#!



எப்புடீ....


Monday, February 13, 2012

பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை

விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

தமிழ்த் திரையுலகில் டாக்டர் சீனிவாசனின் 'ஆனந்தத் தொல்லை'க்கு அளவே இல்லாமல் போய் வருகிறது.

தயாரித்து, நடித்து, வசனம் பேசி அவர் செய்யும் 'சில்மிஷங்களைப்' பார்த்து தமிழ் திரையுலகமே புளகாங்கிதமடைந்து போய் நிற்கிறது!!.


லத்திகா என்ற படத்தைத் தயாரித்தார். அதில் ஹீரோவாகவும் நடித்தார். இப்போது வில்லனாகவும் ஆனந்தத் தொல்லை படத்தில் அதகளம் செய்ய வருகிறார், தான் எதைப் பேசினாலும் அதை சீரியஸாக கருதிப் பேசும் டாக்டர் சீனிவாசன். இவர் தனக்குத் தானே வைத்துக் கொண்ட பெயர் 'பவர் ஸ்டார்'. (என்ன பவருக்கு ஸ்டார்ன்னு  சொன்னா...?? சொல்லவே இல்லையே... ஹிஹி ஹி ஹி)

பிரபல நடிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள்தான் போட்டா போட்டி போடுவார்கள்.ஆனால் சீனிவாசனோ அதற்கு ஒரு படி மேலே போய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதோடு, விளம்பரமாகவும் பத்திரிகைகளில் பிரசுரித்து  (லேட்டஸ்ட் ட்ரென்ட்..மத்த ஸ்டார்களால் முடியுமா?) கலக்கிக் கொண்டிருக்கிறார்.    


இவர் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி  கொடுத்துள்ளார். அதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் நம்ப முடியாதது போலத்தான் தோன்றும். ஆனால் அதை நம்புபம்படி (நம்புறோம் வேற வலி) வேண்டி விரும்பிக் கேட்டுக் கொல்கிறோம்.

 படியுங்கள் சீனி..சாரி பவர் ஸ்டார் சொன்னதை...! (ஸ்டார்ட் மியூசிக்....ஹல்....லோ இது வேற)

என்னை பொறுத்தவரை ஏனோ தானோ என்று படம் பண்ண விருப்பம் இல்லை. நல்ல கதை தான் ரொம்ப முக்கியம்.(அப்படி போடு அருவாளை மொத அடியே...ம்)
ஜோடி செம பொருத்தம்

ஆனந்தத் தொல்லைப் படத்தைத் தொடர்ந்து அடுத்து தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தில் நடிக்கிறேன். இதில் சங்கவி தான் என் ஜோடி. (ச.ங்.க.வி.யா?) படத்தை நானே இயக்கி நடிக்கிறேன்.


இவுக கூடவும் நடிபிங்களா??......நடிக்கணும்.

இதற்கு அடுத்து படைத்தலைவன். இந்தபடம் ஒரு போலீஸ் ஸ்டோரி. மாரி மைந்தன் இப்படத்தை இயக்குகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. அதை விட ரொம்ப முக்கியம் சங்கவி மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தால் மன்மத ராசா பாட்டு மாதிரி, என்னாலையும் ஆட முடியும்.(பார்ரா)

சினிமா மட்டும் இல்ல, சொந்தமா பிசினஸ் இருக்கு, கிளினிக் இருக்கு, அதை தவிர எனக்கு கல்லூரி மாணவர்கள் ரசிகர்கள்  அதிகம்.(நோட் திஸ் பாயிண்ட்)


தமிழ் சினிமாவில் நல்ல கதை உள்ள படங்கள் பண்ணி மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்க விரும்புகிறேன். நீங்க தான் அடுத்த எம்.ஜி.ஆரா என்று கேட்காதீங்க. நான் அப்படி சொல்ல வரவில்லை. அவருக்கு அடுத்து நான் தான் வருவேன். (சர்தான்...ம்...ம்மாவுக்கு தெரியுங்களா? # டவுட்டு.) இன்னும் ரசிகைகள் மனதில் (அதானே முக்கியம்) இடம் பிடிப்பேன்.

எனக்கு கூட ஒரு சமயம் பாரதிராஜா சார் படத்தில் நடிக்க வேண்டும் என்று தோணுச்சு, அப்புறம்தான் அவர்கிட்ட போய் வாய்ப்பு கேட்டு நிக்குறது பதிலா நாமலே படம் டைரக்ட் செய்யலாம் (மானஸ்தன்யா...டீ...ல்... பிடிச்சிருக்கு) என்று முடிவு பண்ணி, படம் இயக்க தொடங்கினேன்.

இப்பகூட தினமும் பத்து கதைகள் (10 கதையா...ஆ.....) கேட்கிறேன், ஆனால் எனக்கு செட் ஆனா மட்டும் தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்...


ஸ்...யப்பா... இப்பவே கண்ணைக் கட்டிக்கிட்டு வருதே...???!!!

Wednesday, January 25, 2012

நடிகை திரிஷாவுக்கு பணம் வேண்டாமாம் சும்மாவே வருவாங்கலாம்.


அமெ‌ரிக்க தமிழ் சங்கத்தின் 25வது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. இதில் த்‌ரிஷா கலந்து கொள்கிறார்.


சொந்த மகளின் காது குத்துக்குக்கூட காசு கொடுத்தால்தான் வருவேன் என்பவர்கள்தான் நமது சினிமாக்காரர்கள். விதிவிலக்கு ஒன்றிரண்டு இருக்கலாம். எந்த விழாவுக்கு என்றாலும் பயணப்படியுடன் லம்பாக ஒரு அமௌண்ட் வெட்டுவது இவர்களின் வாடிக்கை.



அமெ‌ரிக்க தமிழ் சங்கம் த்‌ரிஷாவை சீஃப் கெஸ்டாக அழைத்தபோது, பெ‌ரிய தொகை ஒன்றை அவர் கேட்பார் என்றுதான் நினைத்தார்களாம்.
ஆனால் த்‌ரிஷாவோ, இந்த விழாவில் கலந்து கொள்வது எனக்குப் பெருமை, அதனால் எனக்கு பணம் எதுவும் வேண்டாம் என்றிருக்கிறார்.

 தமிளு தமிளு என்று பேசும் நடிகர்களைவிட இவர் எவ்வளவோ மேல்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


ஹல்லோ...எஸ் குஷ் மீ இவங்களும் த்ரிஷா தான் ப்ரீயா ரிலாக்ஸ்சா பீச்ல் இருக்கும் பொது எடுக்கப்பட்ட படம் ( யாரு எடுத்தா? எந்த பீச்? அப்படி எல்லாம் கேட்கபடாது ஒக்கே.)

Tuesday, January 17, 2012

நடிகைகளின் உண்மையான (இன்னொரு பக்கம்) திறமையை தெலுங்கில் மட்டுமே காணலாம்


பொதுவாக தமிழில் நல்ல குடும்ப பாங்காக நடிக்கும் நடிகைகள் தெலுங்கில் பிட்டு பட நடிகைகள் போன்று தமது அதி உச்ச திறமையை வெளிக்காட்டுகின்றனர்,

அனுஷ்கா, சமீரா ரெட்டி போன்றவர்கள் தெலுங்கில் ரசிகர்களை குஷிப்படுத்தும் சமூக பணியில் சிறப்பாக ஈடுபடுகின்றனர்.


பாருங்கள் தமிழ் பட  ரசிகர்களே :

http://www.youtube.com/watch?v=UKLQ7H1KO44&feature=player_embedded#!


http://www.youtube.com/watch?v=4CXsySGOtho&feature=player_embedded

Saturday, January 7, 2012

தமிழனுக்கு எதிரான விஜயின் புத்திசாலித்தனம்???

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் துப்பாக்கி. படத்தில் விஜய்யின் உழைப்பை பற்றி தன் நட்பு வட்டாரத்தில் புகழ்ந்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்நிலையில் படத்தில் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தை பற்றி வெளியே சொல்லாமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம். விஜய்யுடன் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே அந்த ரகசியமாம்.

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமாவதை அடுத்து படத்தில் ஜெயராம் நடிக்கும் விஷயத்தை இப்போதைக்கு வெளியே சொன்னால்பிரச்சினை கிளம்பிவிடுமோ என்று பதறிப்போய் உள்ளார்களாம் படத்தின் இயக்குனரும் நடிகரும்.


முல்லைப் பெரியாறு பிரச்சினையின் சூடு தனிந்ததும் விஷயத்தை வெளியே சொல்லலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.

அப்படிப் பார்த்தால் இப்போது வெளிவர இருக்கும் பல தமிழ் படங்களில் மலையாள சேச்சிகளே ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதைப் பற்றி சினிமா ரசிகர்கள் உட்பட யாருமே கவலைப்படவில்லை. நடிகருக்கு ஒரு நியாயம் நடிகைகளுக்கு ஒரு நியாயமாஎன்ற கேள்வியே எழுகிறது.
அதே சமயத்தில் தன் படத்தில் நடிக்கும் இரண்டு மலையாள நடிகைகளையும் போயிட்டு வாங்கபிரச்சனை முடிந்ததும் பார்த்துக்கொள்ளளாம் என்று வீட்டுக்கு அனுப்பிவைத்த இயக்குனர் பாரதிராஜா போன்ற உணர்வுப்பூர்வமான இயக்குனர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்.

இதே விஜய் தேர்தல் நெருங்கிய வேளையில் பரப்பரப்புக்காகவும், தனது ரசிகர்களின் பலத்தை காட்டுவதற்காகவும் இலங்கை அரசை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினார். அதன் விளைவு விஜயின் 'காவலன்' படத்தை இலங்கையில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது 'எங்கள் தேழி அசின் நடித்திருப்பதால் காவலனை இலங்கையில் திரையிட அனுமதிக்கிறோம்' ( எப்படி தேழி, எந்த முறையில் தோழி, எந்த நட்பு கோப்பெருஞ்சோழன் - பிசுரத்திரயார் நட்போ ! கேவலம்டா சாமி....) என்று ராஜபக்சே அறிவித்து படத்துக்கு அனுமதி அளித்தார்.
அத்தோடு விஜயின் இலங்கை எதிர்ப்பு காணாமல் போனது...


இலங்கை அரசுக்கு எதிராக கையெழுத்து கேட்க போனவர்களையே துரத்தி அடித்து தனது சிங்கள விசுவாசத்தை காட்டி தனது வேலாயுதம் படத்தை எந்த வித சிக்கலும் இல்லாமல் இலங்கையில் திரையிட வைத்தார். 


இப்போது முல்லை பெரியாறு அணை பிரச்சனை பத்திக்கொண்டு எரியும் இந்த வேளையில் தனது படங்களை கேரளாவில் திரையிடுவதில் எந்தவிதமான சிக்கலும் வந்துவிட கூடாது என்பதற்காகவே வாய் மூடி மௌனம் காத்தவர் சிக்கலே இல்லாமல் இருக்க இப்போது மலையாள நடிகரையே தனது படத்தில் நடிக்கவைகிறார் என்றால்  விஜய் செய்திருக்கும் இந்த முள்ளமாரித்தனமான காரியம் அவரது சுயரூபத்தை ,மக்கள் நலனில் அவருக்குள்ள அக்கறையை மிக தெளிவாக எடுத்துக்காடுகிறது.  

 திரைப்படங்களில் தொடையை தட்டி வீரவசனம் பேசுவது அல்ல வீரம் இதுபேன்ற நேரங்களில் துணிந்து குரல் கொடுப்பது தான் வீரம் .
இவர் போன்ற நடிகர்களுக்கு பிரச்னை என்றால் ரசிகன் என்ற பெயரில் உயிரையே கொடுக்க முன் வரும் தமிழனுக்கு, தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த ஹீரோக்கள் எல்லாம் பொட்டைத்தனமாக வாய் மூடி ஒளிந்துகொள்வது தான் வாடிக்கையாக உள்ளது....

அது சரி முருகதாஸ் ....முருகதாஸ் என்று ஒரு மானமுள்ள தமிழன் இருந்தாரே தனது இலட்சிய படத்தை (ஆம் அறிவு ) தமிழனுக்காக அர்பணிக்கிறேன் என்றாரே ...படத்தில மூச்சுக்கு மூச்சு தமிழன் தமிழன்னு சொன்னாரே அந்த அந்த மானமுள்ள முருகதாஸா தமிழனுக்கு தன்னித்தர மறுப்பவனோடு கைகோர்கிறார்...

அட போங்கடா... நீங்க எல்லோருமே தெளிவா தான் இருக்கீங்க உங்க உங்க விசயங்களில், இளிச்சவாயன் தமிழன் தான் இன்னும் தெளிவாகல...தெளிவாகவும் மாட்டான்......(தேங்க்ஸ்  டாஸ்மாக்)

நன்றி படங்கள் கூகிள்



Tuesday, January 3, 2012

நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம்

முல்லைப் பெரியாறு பிரச்சினை:  

சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த உண்ணாவிரதம் வருகிற 8-ந்தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.

இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள்,

பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் (நோட் தி பாயிண்ட்) நடக்கிறது. இதில் இயக்குனர்களுடன் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வதா? அல்லது தனியாக போராட்டம் நடத்துவதா? என்று விவாதித்து முடிவு செய்யப்படுகிறது.


மனசாட்சி: சோத்திலே மண்ணு விளுந்திடும்னு பயம் - அந்த பயம் இருக்கட்டும். பார்க்கலாம் - முடிவு என்னன்னு.

Wednesday, December 14, 2011

நடிகைகள் பீர் அபிஷேகம்!




நடிகர் நடிகைகளுக்கு பாலாபிஷேகம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் சில sonia agarwalவெறிபிடித்த ரசிகர்கள். எட்டாத தொலைவில் நின்று கிட்டாத தெய்வத்துக்கு ‘நமஸ்தே’ போடுவது போலதான் இந்த அபிஷேக அன்புறுத்தல் எல்லாம். ஆனால் மேற்படி நடிகைகளில் பலர் தங்களுக்கு தாங்களே பீராபிஷேகம் செய்து கொள்வதை அறிந்தால் என்ன செய்வார்களோ?

குடிமகன்களின் தாகத்திற்கு டாஸ்மாக், எலைட் என்று விதவிதமாக வசதிகளை செய்து கொடுக்கிறது அரசு. இந்த நேரத்தில் அழகுராணி ஒருவர், குடிப்பதற்கு வைத்திருந்த பீர் பாட்டிலை தலையில் கொட்டி தனி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கிடைத்த ரிசல்ட்? தாவர பெட்ரோலை கண்டுபிடித்த ராமர் பிள்ளைக்கு கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். (இப்படியெல்லாம் நமக்கு தோணலையே என்றுதான்)

கூந்தலை அள்ளி கொத்து கொத்தாக வகுந்து அதில் பீரை ஊற்றி கழுவினால் தலை முடி பஞ்சு மேகம் போல மிதக்குமாம். கூந்தலுக்கும் உறுதி என்று கண்டு பிடித்திருக்கிறார் இந்த அழகுராணி. இந்த கண்டுபிடிப்பு மெல்ல மெல்ல கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி, இன்று அநேக நடிகைகள் இந்த பீராபிஷேகத்தைதான் விரும்புகிறார்களாம்.

தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா என்று நீள்கிறது இந்த பட்டியல். சமீபத்தில் ஒரு நடிகையின் வாக்குமூலம் படப்பிடிப்பு செலவில் பாட்டில் பாட்டிலாக பீர் கணக்கு வர, என்ன ஏது என்று விசாரித்தார்களாம். அங்குதான் தெரியவந்தது இந்த பீராபிஷேக மேட்டர். சோனியா அகர்வாலின் பஞ்சு ஹேருக்கு இந்த பீர்தான் காரணமாம்.

Wednesday, December 7, 2011

யு ட்யூப்பின் கொலவெறி?

தனுஷ் எழுதிப் பாடி இன்று மிகப் பிரபலமான வீடியோ எனப் பேசப்படும் கொலவெறி என்ற தமிங்கிலீஷ் பாட்டுக்கு யு ட்யூப்பின் கோல்ட் விருது கிடைத்துள்ளது.

தமிழும் இல்லாமல், ஆங்கிலத்திலும் சேராமல் இரண்டும் கெட்டானாக தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடல் ஊடகங்களின் தயவால் மிகப் பிரபலமாகிவிட்டது.

இணைய செய்தித் தளங்கள் பற்றி மிகத் தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு, இணைய வலிமை குறித்து புரிய வைக்க ஒரு வாய்ப்பாகவே இந்தப் பாடல் பார்க்கப்படுகிறது.

ஒரு கோடி பேருக்கும் மேல் பார்க்கப்பட்ட இந்தப் பாடல் குறித்து டைம் பத்திரிகையே தனது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொல வெறி பாடலுக்கு யு ட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற வகையில் 'யு ட்யூப்கோல்ட்' விருது வழங்கப்பட்டுள்ளது.

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இந்தப் பாடல் இடம்பெற்றுள்ளது. விரைவில் படத்தின் முழு ஆடியோவும் வெளியாக உள்ளது.

இந்தப் பாடலுக்கு இசையமைத்த அனிருத், ரஜினி குடும்பத்துக்கு மிக நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது!

டிஸ்கி - அது என்ன படத்தின்  தலைப்பு '3' - தமிழில் '௩' இது தான் ஏன் ஆங்கில தலைப்பு? (why this kolaveri) - சரி பெரிய எடத்து பொல்லாப்பு நமக்கேன் கொலவெறி.

Sunday, December 4, 2011

தனுஷின் கொலவெறி மாணவர்களைக் கெடுத்து விடும்

தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.

இதுதான் தற்போது கொலவெறிப் பாடல் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவலைப்படக் காரணம்.

கொலவெறிப் பாடலில் உள்ள பல வரிகள் குழந்தைகளின் மனதைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் சங்க செயலாளர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், இந்தப் பாடல் மாணவர்களை கடுமையாக பாதிக்கும். பாடலின் முதல்வரியான கொலவெறி என்ற வார்த்தையே மிகவும் மோசமானது. இது மாணவர்கள், குழந்தைகளிடையே தவறான கருத்தை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.

மயிலாப்பூர் சர் சிவசாமி கலாலயா துணை முதல்வர் அருணா கண்ணன் இதுகுறித்துக் கூறுகையில், வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாதபோது மாணவர்கள் இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றனர். இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் மற்ற வகுப்புகளில் பாடம் கெடுகிறது என்றார்.

இந்தப் பாடல் குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில், இந்தப் பாடலால் பெரும் பாதிப்பு வராவிட்டாலும் கூட அதில் உள்ள கொச்சைத் தமிழ் மற்றும் கொச்சை ஆங்கில வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள், இளம் குழந்தைகள் மனதைக் கெடுக்கக் கூடியதாக உள்ளது. மேலும் மாணவிகளைப் பார்த்து மாணவர்கள் கிண்டலடித்துப் பாடும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன என்றனர்.

புருஷன் எப்படியிருக்கணும்?


வயசை பற்றி பேசினால் எந்த நடிகைகளுக்கும் பிடிக்காது. ஆனால் எல்லாருக்கும் பிடித்த த்ரிஷாவுக்கு வயசு எத்தனை இருக்கும்? கணக்கு போடுவதற்காக கைவிரல்களை மடக்கினால் அதுபோகும் இருபத்தைந்தை தாண்டி.

இந்த கல்யாண வயசையும் தாண்டிப் போய்விடுவாரோ என்ற அக்கறையால்(?) அடிக்கடி ஒரே கேள்வியை கேட்டு இம்சிக்கிறார்கள் நிருபர்கள்.
எப்பங்க கல்யாணம்?

இனிமேலும் இந்த விஷயத்தில் மவுனம் காக்க முடியாது என்று முடிவெடுத்த த்ரிஷா, பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் தனது நிபந்தனையை.

பொதுவாகவே நான் நாய் பிரியை. எனக்கு வரப்போகிற கணவர் என் வேவ் லெங்க்த் கொண்டவராக இருக்கணும். வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என்று அவர் கூறிவிட்டால் என் நிலைமை என்னாவது? அதனால் எவ்வித அவசரமும் கொள்ளாமல் நிதானமாக தேடுகிறேன் அந்த பொறுமைசாலி கணவரை என்கிறார்.

த்ரிஷா சொன்னால் நாயையே கூட கட்டிக் கொள்ள ரெடி என்பார்கள் அவரது தீவிர ரசிகர்கள். இதற்கெல்லாமா அஞ்சுவது த்ரிஷா?

டிஸ்கி - ங்கொய்யால எந்த நாய்க்கு அந்த யோகமோ!?

Saturday, December 3, 2011

சேரனுடன் பானு


தாமிரபரணி தண்ணீருக்கு அபார ருசி, அதே நேரத்தில் அந்த தண்ணீரை பருகியவர்களுக்கு மூக்கு முட்ட கோபமும் வருமாம்.

அப்படியொரு பெயர் ராசியுடன் தமிழ்சினிமாவில் அறிமுகமாகிய பானுவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் ஆறாகவும் ஓடவில்லை, அடி தொண்டையையும் நனைக்கவில்லை.

இத்தனைக்கும் விஷாலுடன் அவர் நடித்த இந்த தாமிரபரணி ஹிட்! அதன்பின் எடைக்கு எடை சம்பளம் கேட்டு இன்டஸ்ட்ரியையே அதிர வைத்த பானுவை சினிமாவும் மறந்தது.

ரசிகர்களும் மறந்தார்கள். அவர் மீண்டும் திரும்பி வந்தபோது யாரும்மா நீ என்று கேட்காத குறையாக வரவேற்றது தமிழ்சினிமா.

அடுத்தடுத்து அவர் நடித்த இரு படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிக் கொள்ள, பானுவின் எதிர்காலம் பரவசமாக இல்லை.

இந்த நேரத்தில்தான் வசந்த் நடிக்கும் மூன்று பேர், மூன்று காதல் படத்தில் நடிக்க அழைத்தார்களாம். முன்னொரு காலத்தில் சம்பளத்தை கறாராக பேசிய பானு, இந்த முறை கப்சிப்பென்று ஒப்புக் கொண்டார்.

இந்த புதிய படத்தில் வசந்தின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆனாலும் பானு அவருக்கு ஜோடியில்லை. படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சேரனுக்குதான் ஜோடி.

ஜாடியும் மூடியும் சரியாதான் இருக்கு!

ஒய் திஸ் கொல வெறி....??


“ஒய் திஸ் கொல வெறிடி..” பாடலுக்கு ரஜினியை நடனம் ஆட கேட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இயக்கும் “3” படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

இப்படத்துக்காக தனுஷ் எழுதி பாடிய “ஒய் திஸ் கொல வெறிடி” பாடல் சூப்பர் ஹிட்டாகி விட்டது. இப்பாடலை சிரித்தபடி கேட்டு ரசித்தார் ரஜினிகாந்த்.

பாடலுக்கான சூழல் மற்றும் அதற்கான அர்த்தம் என்ன என்று ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதை அவர் விளக்கினார்.  ஏற்கனவே “3” படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினியை நடிக்க கேட்க எண்ணி இருந்தார் ஐஸ்வர்யா.

இந்நிலையில் “ஒய் திஸ் கொல வெறிடி” பாடல் பிரபலமாகிவிட்டதால் அந்த பாடலுக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜினியை நடனம் ஆட வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ரஜினியும் ஓ.கே. சொல்லி இருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி நடிப்பது உறுதியானால் படத்தில் 2 முறை இப்பாடலை இடம்பெற செய்ய ஐஸ்வர்யா திட்டமிட்டிருக்கிறார்.
சோலோவாக தனுஷ் பாடுவதுபோல் ஒரு முறையும், ரஜினியுடன் சேர்ந்து மற்றொரு முறை பாடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.

ஒஸ்தி படத்துக்கு சிக்கல்


இந்தியில் சல்மான்கான் நடித்து ஹிட்டான “டபாங்” படம் தமிழில் சிம்பு நடிக்க “ஒஸ்தி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

தரணி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 8-ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.
இந்த படத்தின் “சாட்டி லைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்தும் முடிவு ஏற்படவில்லை.

இன்னும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் மாலை முடிவு தெரியும் என்றும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Wednesday, November 30, 2011

லட்சுமிராயை பிறந்த மேனியாக பார்க்கலாம்.(ங்கொய்யால......)


நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

அதிரடி கவர்ச்சியில் - சோனியா அகர்வால்!

செல்வராகவனுடன் விவாகரத்து பெற்றபிறகு புதுபொலிவுடன் காணப்படுகிறார் நடிகை சோனியா அகர்வால். மீண்டும் சினிமாவில் இரண்டாம் அத்யாயம் எடுத்திருக்கும் சோனியா, அதை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்விளைவாக அதிரடி கவர்ச்சியில் இறங்கபோகிறாராம். டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ‌சோனியா அகர்வால். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். செல்வா, கீதாஞ்சலி என்பவரை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது தனிமையில் இருக்கும் சோனியா மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றில் தலா படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கும் சோனியா, தன்னை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாராம். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா, படுகவர்ச்சியான உடையில் வந்து, விழாவிற்கு வந்த அனைவரையும் கிறங்கடிக்கச் செய்தார். மேலும் எப்படி கேரக்டரிலும் நடிக்கத் தயார் என்றும், பிகினி உட்பட சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கும் தான் நடிக்க தயார் என்றும் கூறிவருகிறாராம். சோனியாவின் இந்த அறிவிப்பால் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.  இதனால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் சோனியா. அப்ப இனி சோனியா காட்டில் மழை தான்!

Tuesday, November 29, 2011

கொலைவெறி - புல்லரித்துப் போன அமிதாப்!

தனுஷ் எழுதி, பாடிய கொலைவெறி பாடலைக் கேட்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் புல்லரித்துப் போனாராம். இதுபற்றி அவர் தனது பிளாக் பக்கத்தில், ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடனமிடுகின்றன, என்று எழுதியிருக்கிறார்.

யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்றும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.

நீச்சல் உடை அணியவே மாட்டேன்...

 
எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நீச்சல் உடையணிந்து நடிக்கவே மாட்டேன், என்று நடிகை தீக்ஷா சேத் கூறியுள்ளார். இத்தனைக்கும் அம்மணி ஒரு நீச்சல் சேம்பியனாம். மும்பையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்க தயாராகி வருபவர் நடிகை தீக்ஷா சேத். சமீபத்தில் தீக்ஷாசேத் கொடுத்திருக்கும் ஒரு பேட்டி, வாலிப வயோதிக அன்பர்களை வருத்தத்தில் தள்ளி வறுத்து எடுத்திருக்கும். வேறொன்றுமில்லை, அம்மணி நீச்சல் உடையை அணியவே மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

விக்ரமுடன் ராஜபாட்டை படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தீக்ஷா அப்படம் வெளிவந்தால், தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திழ்வார் என்பதில் சந்தேகமே இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடையில் நடிப்பேன் என்று அவசரப்பட்டு பேட்டி கொடுக்கிற நடிகைகளுக்கு மத்தியில் தனது கவர்ச்சி கொள்கை பற்றி தீவிர விளக்கம் கொடுத்திருக்கிறார் தீக்ஷா. மகாராஷ்டிரா மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசும் பெற்றவர்தான் இந்த தீக்ஷா என்பது கூடுதல் தகவல்.

மன்னனாகும் சூப்பர் ஸ்டார்!

ரஜினி நடிக்கும் புதுப்படத்துக்கு ‘'கோச்சடையான்என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘'கோச்சடையான்இந்தியாவில் தயாராகும், நடிப்பை பதிவிறக்கம் செய்யும் முதல் 3டி படமாகும். ஹாலிவுட்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாரான அவதார்’, ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் உருவான டின் டின்ஆகிய படங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் உருவானவை. சரித்திரப் பின்னணியில் உருவாகும் கோச்சடையான்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் மேற்பார்வை ஆகிய பொறுப்புகளை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றுள்ளார். ஈராஸ் நிறுவனத்துடன் இணைந்து மீடியா குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சவுந்தர்யா அஸ்வின் இயக்குகிறார். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஷூட்டிங், விரைவில் தொடங்குகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினி இந்த படத்தில் பாண்டிய நாட்டு மன்னனாக நடிக்கிறார். கிபி.670 முதல் கிபி -710 ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் பெயர் 'கோச்சடையான்'. கோ என்றால் அரசன், சடையான் என்றால் சிவன் பக்தர் என்று அர்த்தமாம் ஏற்கனவே தீவிர சிவன் பக்தனான சூப்பர் ஸ்டார், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என தனது முந்தைய படங்களில் சிவனை குறிப்படும் பெயர்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, November 23, 2011

குட்டை பாவாடை குஷ்பு கண்டனம்

நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது வழக்கம். கவர்ச்சி நடிகைகள் மட்டுமின்றி முன்னணி கதாநாயகிகளும் இதுபோல் கவர்ச்சி ஆடை அணிந்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புகளும் காட்டப்பட்டு வருகிறது.

நடிகை ஸ்ரேயா, சிவாஜி பட விழாவில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்றார். இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்தது. போலீசிலும் புகார் அளித்தது. இதையடுத்து ஸ்ரேயா மன்னிப்பு கேட்டார். இதுபோல் நமீதாவும் கவர்ச்சி ஆடை அணிந்து விழாக்களுக்கு வருகிறார். இருக்கையில் அமர்ந்து இருக்கும்போது போட்டோ கிராபர்கள் படம் எடுப்பதை தவிர்க்க கால்கள் மேல் துண்டை போட்டு மறைத்துக்கொள்கிறார்.



நடிகைகள் கவர்ச்சி ஆடை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை நடிகை குஷ்பு கண்டித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,
 


நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார்.



ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்




Monday, November 21, 2011

விஜய்யின் புது சென்ட்டிமென்ட்...
















வேலாயுதம் ஹிட் ஆனதிலிருந்தே முருகன் சென்ட்டிமென்ட் பிடித்தாட்டுகிறது விஜய்யை. படி தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது சமீபத்திய படங்களில் வேலாயுதத்திற்கு மட்டும் பாரசூட்டே கிடைத்தது. அதன்விளைவாகதான் இந்த வேலாயுதக்கடவுள் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய். படத்தின் துவக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.

எ.ஆர்.முருகதாஸ் (பார்றா... இங்கயும் ஒரு முருகன்) இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய் அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.

படத்தின் கதாநாயகியாக யார் யார் பெயரையோ சொல்லி உழப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரப்போவது நிச்சயம் வள்ளியாக இருக்கப் போவதில்லை. வாயில் நுழையாத பெயரோடு ஏதாவது ஒரு கள்ளிகாத்துக் கொண்டிருப்பார்.

கடைசி செய்தி- காஜல் அகர்வாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.