நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 16, 2011

பெண்ணின் ‘அந்த’ இரண்டு!

சந்தோஷ் சிவன் உருமி என்ற மலையாள படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

ப்ரித்விராஜ்ஜெனிலியா, பிரபுதேவா, வித்யாபாலன், தபு, ஆர்யா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக்தேவ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.
 
இந்த படத்தின் இசை விழாவில் பேசிய வைரமுத்து, இந்த படத்தில் பாடல் எழுதியதற்காக நான் பெருமை படுகிறேன். தீபக் தேவ் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சங்க இலக்கிய மொழியை கையாண்டுள்ளேன். இந்த படத்தின் 15ஆம் நூற்றாண்டு என்ற களம் தான் நான் பாடல் எழுத என்னை ஊக்குவித்தது.

இதில் ஒரு பாட்டு உண்டு...

உரை விட்டு வந்த வாளோ...
ஒளிவிட்டு வந்த வேலோ...
திருமகன் அவர் யாரோ...
திருவுளம் புரிவாரோ... என்ற பாட்டு.

இதில் சங்க இலக்கிய மொழியை கையாண்டிருக்கிறேன்.

கமல்ஹாசன் கூட பேசியிருக்கிறார் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்று, அவர் எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால்

சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு.

அந்த பாடலில் இப்படி ஒரு இடம் வருகிறது...

ஒரு பெண் போர்வீரனை நேருக்கு நேர் நோக்கி,
அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்...
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்... என்று பாடுகிறாள்.

உன் ஒரு கையால் ஒரு யானையை அடக்கிவிட்டாய், என் இரண்டு யானையை அடக்க இப்போது நீ முயற்சி செய்கின்றாய்என்பது அந்த வரிகளின் பொருள்.

அந்த இரு களிருஎன்ன என்பது அறிந்தோர் அறிவாராக, தெரிந்தோர் தெரிவாராக என்று கவிஞர் சொல்லிக்கொண்டிருக்க... அரங்கத்தில் ஒருவர் மட்டும் கைதட்டினார், உடனே கவிஞர் அந்த ரசிகன் கை தட்டினான் அல்லவா, அவனுக்குத் தான் இந்த வரி. இந்த வரியின் அர்த்தம் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்ல அரங்கமே கைத்தட்டியது.

இது நான் எழுதிய வரிகள் அல்ல... இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பு புறநானூற்றில் வருகிர வரி. இந்த இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம் நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் சிவனுக்கு நன்றி சொல்கிறேன் என்றார். 

படத்தைப் பற்றி பேசிய வைரமுத்து, இதில் ப்ரித்விராஜ் ஒரு வீரமுள்ள ஆண்மகனாக, சிங்கம் போல வருகிறார். ஜெனிலியாவை படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் இதில் அந்த பெண் வாள் ஏந்தி சண்டையிடும்போது ஆச்சரியமாக உள்ளது. அந்த பெண்ணிடம் வாள் கொடுக்க வேண்டும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த பெண்ணே வாளின் உயரம் தான் என்று கவிஞர் கிண்டலடிக்க அரங்கம் அதிர கைத்தட்டு விழுந்தது.

லைலா அவ்வளவு ஒன்றும் அழகில்லையாம். அவள் கருப்பாம். அவளின் மூக்கு சப்பையாக இருக்குமாம். ஆனால் மஜ்னு சொல்கிறான்... அவளை என் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும். உங்கள் கண்களால் பார்த்தால் அவள் அழகி இல்லை. என் கண்களால் பார்த்தால் அவள் பேரழகி என்றான். அது போல நாம் சந்தோஷ் சிவனின் கண்களால் பார்க்க பழகிக்கொண்டால் உலகம் அழகாக தெரியும் என்று பேசினார் வைரமுத்து.

திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது!

நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நடிக‌ர் ‌ரி‌‌த்‌தீ‌‌ஷை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

‌த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் குறு‌கிய கால‌த்‌தி‌ல் கொடி க‌ட்டி பற‌ந்தவ‌ர் நடிக‌ர் ‌ரி‌த்‌தீ‌ஷ். இவ‌ர் நடி‌த்த நாயக‌ன் எ‌ன்ற பட‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய வெ‌ற்‌றி பெ‌ற்றது.

இதை‌த் தொட‌ர்‌ந்து ராமநாதபுர‌ம் நாடாளும‌ன்ற தொகு‌தி‌யி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றியு‌‌ம் பெ‌ற்று ‌வி‌ட்டா‌‌ர். எ‌ம்.‌பி. ‌சீ‌ட்டை பல கோடி ரூபா‌ய் கொடு‌த்து வா‌ங்‌கியதாக அ‌ப்போது இவ‌ர் ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஸ்ரீபெ‌ரு‌ம்புதூ‌ர் அருகே 90 ‌செ‌ன்‌ட் ‌நில‌த்தை அபக‌ரி‌த்ததாக நடிக‌ர் ‌‌‌‌ரி‌‌த்‌‌தீ‌ஷ் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்த கா‌ஞ்‌சிபுர‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட நடிக‌‌ர் ‌‌‌ரி‌த்‌தீ‌ஷ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு புழ‌ல் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இதுவரை ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்களை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வ‌ந்த முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா த‌ற்போது முத‌ன் முறையாக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

தூக்கு தண்டனை காட்டுமிராண்டித்தனமானது

டெல்லியில் நடந்த இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிப்பு என்ற பெயரிலான 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிபதி ஏ.கே.கங்குலி பேசுகையில், நமது சட்டத்தில் தூக்குத் தண்டனை இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

வெற்று அனுமாங்களால் ஒருவருக்கு நமது அரசியல் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.

மிக மிக அரிதான சம்பவங்களில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொல் மிகவும் பலவீனமாக உள்ளது. எது அரிய செயல் என்பதை தீர்மானிப்பது சுலபமல்ல. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையைப் பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனச் சட்டம் நிர்ணயித்துள்ள, வழங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அப்போது நீதிபதிகள் கருத்தில் கொண்டாக வேண்டும்.

ஒருவரை மரணக் குழியில் தள்ளுவது எனபது நமது சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனைதான் என்றாலும், அது காட்டுமிராண்டித்தனமானது. ஒருவரின் வாழும் உரிமையை நிராகரிப்பதாக அது அமையும்.

எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இதுவரை உருவாகவில்லை.

எனவே ஒரு நீதிபதி யாருக்காவது மரண தண்டனை கொடுக்க தீர்மானித்தால், முதலில் அதற்கான சூழல்களை மிக மிக கவனமாக ஆராய்வது அவசியம். அந்த குற்றவாளி மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோர்ட்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை குறித்த பரிசீலனைகளைச் செய்யலாம் என்றார் கங்குலி.

இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

Tuesday, November 15, 2011

பெட்ரோல் விலை குறைகிறது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத் துக்கு ஏற்ப இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒரு தடவை பெட்ரோல் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அதன்படி கடந்த 3-ந் தேதி பெட்ரோல் விலை ரூ.1.80 உயர்த்தப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை சுமார் ரூ.10 உயர்ந்து விட்டது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63-க்கு விற்றது. தற்போது அது ரூ.73 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலையைத் தொடர்ந்து டீசல், சமையல் கியாஸ், விலையும் உயரலாம் என்று கூறப்பட்டதால் மக்களிடம் அதிருப்தி அதிகரித்தது. இந்த நிலையில் கச்சா எண்ணை விலை குறைந்தது. கடந்த மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணை 125 டாலராக இருந்தது.

தற்போது அது 115 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோல் விலையை குறைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுத்திரிகரிப்பு வரி உள்பட எல்லா செலவினங்களும் குறைந்துள்ளதால், எண்ணை நிறுவனங்கள், பெட்ரோல் விலையை குறைக்க சம்மதித்துள்ளன.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1 வரை குறைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் லிட்ட ருக்கு ரூ.2 வரை குறைக்க எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. எண்ணை நிறுவனங் களின் ஆலோசனை கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விலை குறைப்பு முடிவு எடுக்கப்படும்.

 நாளை இரவு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 17-ந் தேதி முதல் பெட்ரோல் விலை குறைப்பு அமலுக்கு வரும். 2010-ம் ஆண்டு ஜுன் மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலை குறைய இருப்பது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற கூட்டம் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வு பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கு முன்னதாக பெட்ரோல் விலையை குறைத்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பெட்ரோல் விலை குறைப்பு மூலம் கூட்டணி கட்சியான திரிணாமூல் காங்கிரசின் மிரட்டலை புறக்கணிக்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது

2G ஊழல் வழக்கில் திடீர் திருப்பம்

நாட்டையே உலுக்கிய 2G அலைவரிசை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம்கோடி நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் அறிக்கையில் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கியதாக மத்திய தணிக்கைத் துறையின் தொலைத் தொடர்பு பிரிவுக்கான முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சிங் கூறியுள்ளார். சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டிருந்ததைப் போல 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ரூ.2645 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார்

மத்திய கணக்குத் தணிக்கைக்கான இயக்குநராக இருந்த ஆர்.பி.சிங் பதவியில் இருந்தபோதுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட இழப்பு குறித்த அறிக்கை வெளியாகி நாட்டையே உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் திமுக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டதோடு மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி எம்.பி ஆகியோர் திகார் சிறைசெல்வதற்கும் காரணமாக அமைந்தது.

2G அலைவரிசை ஒதுக்கீட்டில் தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை கூறியதாக அறிக்கையை வெளியிட்டவர் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியான வினோத் ராய்.ஆனால்,ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த அறிக்கையைத் தயாரித்த ஆர்.பி.சிங் நஷ்டம் ரூ. 2,645 கோடி தான் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கூட்டு நாடாளுமன்றக் குழு அவரை நேரில் வந்து வாக்குமூலம் அளிக்க அழைப்பு விடுத்ததையடுத்து இன்று நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் சிங். அவரிடம் கூட்டு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின்போது அவர் கூறியதாவது:

தொடக்கத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் வருவாய் குறித்த கணக்கெடுப்புக்கெல்லாம் திட்டமிடப்படவில்லை. பின்னர்தான் அதை சேர்த்தனர். ஏலம் தொடர்பாக டிராய் எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கவில்லை. மத்திய அமைச்சரவையும் அதே முடிவில்தான் இருந்தது.எனவே ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.அப்படி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாக கணக்கிடவும் முடியாது.

என்னைப் பொறுத்தவரை ரூ.2645 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்று உறுதியாகக் கருதுகிறேன். இந்த நிலையிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லை. மேலும் சிஏஜியின் முந்தைய அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும் சிங் கூறியதால் இவ்விவாகாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

'புளூ பிலிம்ஸ்' என் அரிய பொக்கிஷம்

புளூ பிலிம்ஸ் தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம்: 'சர்ச்சை மன்னன்' ராம் கோபால் வர்மா

சர்ச்சையின் மறுபெயர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மாவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

நாங்கள் ஒன்றும் சும்மா அப்படி சொல்லவில்லை. காரணம் இருக்கு. பாட்ஷா படத்தில் ரஜினி நின்றால், நடந்தால், சிரித்தால், பேசினால் அழகு என்று பாடுவார் நக்மா. அதற்கு மாறாக இயக்குனர் ராம் கோபால் வர்மா நின்றால், பேசினால், படம் எடுத்தால் சர்ச்சை தான்.

அண்மையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது நீங்கள் எதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷம் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சற்றும் யோசிக்காமல் உடனே என்னுடைய புளூ பிலிம்ஸ் கலெக்ஷன் தான் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

என்ன தான் சினிமாத் துறையே அவரை சகட்டுமேனிக்கு விமர்சித்தாலும் மனுஷன் மசிவதாக இல்லை. நீங்கள் பேசுவதைப் பேசுங்கள், நான் இப்படித் தான் இருப்பேன் என்கிறார்.

நான் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. எனக்கு படம் எடுக்க ரொம்பப் பிடிக்கும். அதை மக்கள் சில நேரம் ஜிரணித்தாகத் தான் வேண்டும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் இசையைக் கேட்டுக் கொண்டும், படம் இயக்கிக் கொண்டும், அழகான பெண்ணைப் பார்த்துக் கொண்டும் கழிக்க விரும்புகிறேன் என்றார்.

பிறர் என்னை விமர்சிப்பதை நான் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறது தான் அவர்களுக்கு கடுப்பாக உள்ளது என்று மேலும் தெரிவித்தார்

Monday, November 14, 2011

டெல்லிக்கு ஓடிய அழகிரி!!

திமுக வட்டாரத்திலிருந்து நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையாகியுள்ள முதல் பிரமுகர் என்ற பெருமையை பொட்டு சுரேஷ் பெற்றுள்ளார். இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அவரது ஆதரவாளர்கள் தடபுடலாக மதுரைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை சந்திக்க விரும்பாத மு.க.அழகிரி சென்னை வழியாக டெல்லிக்குப் போய் விட்டார்.

பாளையங்கோட்டை சிறைக்கு வந்த பொட்டுவின் ஆதரவாளர்கள், சுரேஷை ஆரவாரத்தோடு மதுரைக்கு அழைத்து வந்தனர்.

மதுரைக்கு வந்ததும் முதலில் அழகிரியைத்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தார் சுரேஷ். ஆனால் இப்போது அவரை சந்திக்க விரும்பவில்லையாம் அழகிரி. இதனால் அவர் நேற்று இரவோடு இரவாக மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்தார். இன்று காலை டெல்லிக்குப் போயே போய் விட்டார்.

லாட்ஜியில் லார்ஜ் போட்டு யோசித்ததோ?!

லவ்ன்னா லவ்வு

சித்திரம் பேசுதய்யா



மாமியார் ஆகும் ஊர்வசி

அப்பா, பிள்ளை, தாய், மகன், அண்ணன், தங்கை, அக்கா, தம்பி என்று ஏராளமான உறவுகளை படமாக்கிய தமிழ் சினிமாவில் மாமியார்- மருமகன் பாசத்தை மையமாக வைத்து ஏதாவது படம் வந்திருக்கிறதா? அப்படி வரவில்லை என்றாலும் கவலை வேண்டாம். இதோ ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் ’பேச்சியக்கா மருமகன்’.

ஒரு மாமியார் தன் மருமகனை மகனாகவும், ஒரு மருமகன் தன் மாமியாரை தாயாகவும் பார்க்க வேண்டும் என்பதை உலகுக்கு சொல்ல வரும் படம்தானாம் இது.

’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் தாய் தந்தை இல்லாத பிள்ளையாக நடித்து அனைவரையும் கண்கலங்க வைத்த தருண் கோபிதான் இப்படத்தின் ஹீரோ. இந்த படத்தின் கதை வசனத்தையும் இவரேதான் எழுதியிருக்கிறார். இயக்குனர் மட்டும் வி.பி.பாலகுமார் என்ற புதியவர்.

’மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் இசையமைப்பாளர் சபேஷ் முரளிதான் இப்படத்திற்கும் இசை. சரி போகட்டும்... மருமகனாக தருண் கோபி நடித்திருக்கிறார். மாமியாராக? இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்து தென்னிந்திய மொழிகளில் எல்லாரையும் கவர்ந்திருக்கிற ஊர்வசிதான் அந்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். நகைச்சுவை கேரக்டர்கள் கொடுத்தால் பிரித்து மேய்ந்துவிடும் ஊர்வசி, இந்த படத்தில் நெஞ்சை தொடும் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறாராம்.

திமிரு, காளை’ போன்ற படங்களை இயக்கியவர் தருண் கோபி. ’மங்காத்தா, ஆறுமுகம், பேராண்மை’ உள்ளிட்ட ஏராளமான படங்களின் விநியோகஸ்தரான மன்னன் பிலிம்ஸ்தான் இந்த படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவுதான் தமிழ்நாட்டிலிருக்கும் உறவுகளை பற்றி பேசினாலும், அதில் நடிக்க மும்பை நடிகைகளைதான் நாட வேண்டி இருக்கிறது. இந்த படத்திலும் பிரியங்கா என்ற நடிகையை அழைத்து வந்திருக்கிறார்கள்.’ பேச்சியம்மா ’ படத்தில் அறிமுகமாகும் இவர் பேசப்படுவாரா என்பதுதான் சஸ்பென்ஸ்

Sunday, November 13, 2011

தமிழனின் அடிமைத்தனம்

நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு  ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது.

தமிழர்களின் தேசபக்தி: "தமிழர்களை தேசபத்தியில் மிஞ்சுபவர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது" என்று நாம் பெருமையாக சொல்லிகொள்ளலாம். ஏன் என்றால்? தம் உறவுகள் ஈழத்திலே கொத்து கொத்தாக கொல்லப்படும் போது அதற்க்கு ஒரு பாரிய எதிர்ப்பை காட்டாமல் மவுனம் சாதித்த இனம்தானே நாம், வரலாறுகள் உங்களை அடிமைகளாக எழுதட்டும்.

தமிழனின்  அடிமைத்தனம்:  உயிர், இன, மொழி, கலாசாரம், எல்லாவற்றிலும் தமிழன் அடிமைபட்டு கிடக்கிறான். வடநாட்டுகாரன் தமிழனை ஆண்டாண்டாய் ஆளுகிறான். தமிழன் உயிர்பயத்தில் உணர்வுகள் செத்து அடிமையாக வட இந்தியனுக்கு சேவகம் செய்கிறான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 1: மெரிக்காவில் கலிபோர்னிய என்று ஒரு மாநிலம் உண்டு, மேச்சிகொவுக்கு சொந்தமான அந்த மாநிலம் 1846 நடந்த சண்டையில்  அமெரிக்காவின் 31  மாநிலமாக சேர்க்கப்பட்டது,

இருந்தாலும் அங்கு குடியிருக்கும் ஸ்பானிஷ் பேசும் மக்களுக்காக அந்த மாநிலத்தின் வங்கிகளில், அரசு தம்மந்தப்பட்ட எல்லா துறைகளிலும் ஸ்பானிஷ் பேச தெரிந்தவர்கள் வேலையில் இருப்பார்கள் அந்த மொழியிலும் படிவங்கள் இருக்கும். இது போதாது என்று அங்கு வாழும் மேக்ஸ்சிகன் மக்கள் தங்கள் மேக்சிகொவின் சுதந்திர தினத்தை அமெரிக்காவில் கொடி கெட்டி கொண்டாடுவார்கள். 

அதுமட்டுமா, டிரைவிங் டெஸ்ட் நீங்கள் ஹிந்தி, உருது, பஞ்சாபி, இப்படி எந்த மொழிகளில் வேண்டுமானாலும் எழுதலாம். அவசர போலீஸ், தீயணைப்பு, மருத்துவம் என்ற பிரிவுகளுக்கு நீங்கள் போன் செய்தால் உங்களுக்கு ஆங்கிலம் தெரிய தேவையில்லை உங்களுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் டிரான்ஸ் லேட் பண்ணும் நபர்கள் உடனே லைன் இல் வருவார்கள். இப்போ புரியும் நாம எப்படி இந்தியாவில் அடிமையா இருக்கிறோம் என்று.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 2:
தமிழக மீனவர்கள் சிங்கள பயங்கரவாத ராணுவத்தால் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர் அதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் சூடு, சுரணை, மானம் வெட்கம் இல்லாம் உணர்வற்ற பிண்டங்களாய், அடிமைகளாய் வாழ்கிறோம். வாழ்வது ஒரு முறை வீழ்வதும் ஒரு முறை என்கிற பழமொழி எல்லாம் தமிழில்தான் இருக்கு அதுவெல்லாம் தமிழனுக்கு ஏனோ புரியவில்லை.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 3: கூடங்குளம் அணுமின் நிலையம் இந்த அணுமின் நிலையத்தை கேரளாவில் நிறுவவேண்டியது தானே, கர்நாடகாவில், ஆந்திராவில் முடியாது அதுவும் இளிச்சவாயன் தமிழன்தான்.

தமிழனின் அடிமைத்தனத்துக்கு  உதாரணம் 4 :
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இது ஏற்ப்படுத்தும் கெடுதி இருகிறதே! இதை இந்தியாவின் எந்த மாநிலமும் அனுமதிக்கவில்லை. வந்தவர்களை வாழவைக்கும் தமிழர்களே இதிலும் இளிச்சவாயர்கள்.

உலகிலே ஒருவன் அடிமைத்தனத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அவன் தமிழர்களிடம் இருந்து கற்று கொண்டால் போதுமானது. தமிழா உன் அடிமை விலங்கை தகர்த்தெறி! சுதந்திர தமிழகமே எமது இலட்சியம் என்று முழங்கு! மானம் உள்ள தமிழனாக வாழவேண்டுமா! நீ சுதந்திர தமிழ் நாட்டின் குடிமகனாக வேண்டும்

Wednesday, November 2, 2011

விடுதலையாகும் கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது ஆன கனிமொழி எம்.பி., 160 நாட்களாக டெல்லி திகார் சிறையில் உள்ளார். 

இந்த வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ராசா உள்பட 17 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் கனிமொழி உள்பட 7 பேர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் புரூட்ஸ் அண்டு வெஜிடபிள்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரின் ஜாமீன் மனுக்களை சிபிஐ எதிர்க்கவில்லை.

சுவான், டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, ஆ. ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரை ஜாமீனில் விடுவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. 

ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்த 7 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது, 3-ந்தேதி தீர்ப்பு கூறப்படும் என்று கோர்ட்டு அறிவித்து உள்ளது. அதன்படி நாளை தீர்ப்பு கூறப்படுகிறது. கனிமொழி உள்பட 5 பேர் மனுக்களை எதிர்ப்பது இல்லை என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்று சிபிஐயிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

அப்போது சிபிஐ தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் கனிமொழி உள்பட 5 பேருக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்ற காரணத்தை தெரிவித்தனர். இதை சுப்ரீம் கோர்ட்டு பதிவு செய்து கொண்டது. சிபிஐ விளக்கத்தில் 5 பேருக்கு எதிரான அம்சங்களோ, ஜாமீன் வழங்குவதை பாதிக்கும் எதிரான கருத்தோ இல்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே கனிமொழி நாளை விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோல் சிபிஐ எதிர்க்காத மற்ற 4 பேரும் விடுதலை ஆவார்கள்.   கனிமொழியை சந்திப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 3 முறை டெல்லி சென்றுள்ளார். கடந்த முறை அவர் சென்றபோது கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே கனிமொழி விடுதலை ஆனதும் அவருடன் கருணாநிதி, சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தீர்ப்பு நவம்பர் 3-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், அன்று ஜாமீனில் அவர் வெளிவர முடியவில்லை. தற்போது சிபிஐ வக்கீல்கள் தங்கள் விளக்கத்தை தெளிவுப்படுத்தி விட்டதால் கனிமொழி நாளை நிச்சயம் ஜாமீனில் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய மந்திரி மு.க. அழகிரி இன்று காலை டெல்லி சென்றார். கே.பி. ராமலிங்கம் எம்.பி. உள்பட கட்சி நிர்வாகிகள் சிலரும் டெல்லி சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லி செல்கிறார். டி.ஆர். பாலு எம்.பி., வசந்தி ஸ்டான்லி உள்பட அனைத்து தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர் பூங்கோதை உள்பட பலர் டெல்லி செல்கிறார்கள்.

நாளை விடுதலையாகும் கனிமொழி எம்.பி-ஐ வரவேற்கவே இவர்கள் டெல்லி செல்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, November 1, 2011

கூடங்குளம்: மத்திய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

 
கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாகப் பேசி பிரச்னையைத் தீர்க்க வேண்டுமே தவிர. வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கூடங்குளம்  அணுமின் நிலையம் செயல்படுவதை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18.09.2011 அன்று நான் அங்கு நேரில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்தேன். அப்பொழுது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்திய அரசு உடனடியாக அந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
22.09.2011 அன்று தமிழக அமைச்சரவை கூடி மக்களின் அச்சத்தை போக்கும் வரை கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரை அனைத்துக் கட்சியினரும், போராட்டக் குழுவினரும் இது சம்பந்தமாக சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமரையும் இக்குழு சந்தித்தது. அதற்கு பிறகு கூடங்குளம் அணுமின் நிலையம் சம்பந்தமான பிரச்சினைகளை மக்களிடம் விவாதிக்க இந்திய அரசு ஒரு நிபுணர் குழுவையும் நியமித்துள்ளது. போராட்டக் குழுவினர் இக்குழுவினை ஏற்கவில்லை.
இதற்கிடையில் இந்திய அரசு அணுமின் நிலையப் பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக செல்வதை போராட்டக் குழுவினர் தடுப்பதாகவும், அமைதியாக போராட்டம் நடத்துவதாக தெரிவித்துவிட்டு, வன்முறையை உருவாக்கும் சூழ்நிலையை போராட்டக் குழுவினர் உருவாக்குகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து இந்திய அரசு இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்குப் பதிலாக இதை ஒரு சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மாற்றி போராட்டத்தை ஒடுக்குவதற்கு அடக்குமுறையைக் கையாளப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தாய்மார்கள், பள்ளிப் பிள்ளைகள் உட்பட பல்லாயிரக் கணக்கான மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வருவதை அனைவரும் அறிவர். இதை உணர்ந்து மத்திய அரசு போராடும் மக்கள் பிரதிநிதிகளுடன் உடனடியாக பேசி பிரச்னையை தீர்க்க வேண்டுமே தவிர, வேண்டுமென்றே காலம் தாழ்த்தி சிக்கலை மேலும் மேலும் வலுவடையச் செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத் தக்கதாகும். உடனடியாக இந்தப் பிரச்னையை தீர்க்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்றும், தமிழக அரசு தான் நிறைவேற்றிய தீர்மானத்தை வற்புறுத்தும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருப்புப் பணம்: சோனியா, ராகுலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ளதாகக் கூறி வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

சுவிஸ் நாட்டில் ஒரு வங்கி கணக்கில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கு சோனியா மற்றும் ராகுல்காந்திக்கு சொந்தமானது என்ற சந்தேகம் உள்ளது. இந்த கணக்கு மீது இவர்கள் இருவரும் இதுவரை உரிமை கோரவில்லை என்ற போதிலும், இந்த சொத்துக்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்.

கடந்த தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், இந்த விபரத்தை இருவரும் மறைத்துவிட்டனர். எனவே, சுவிஸ் வங்கியில் உள்ள சம்பந்தப்பட்ட கணக்கு விபரங்களை பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

அதேபோல சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் தங்களது நிலையை விளக்கவும், அந்த கணக்கில் உள்ள பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு  ரூ 1.82 உயர்த்த முடிவு  செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன    

கச்சா எண்ணெயின்  விலை ஏற்றம் ரூபாய் மதிப்பின் இறக்கம்   போன்ற காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விலையேற்றம் அடுத்த இரண்டு வராங்களுக்குள் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

முன்னதாக ,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்  கடந்த இரண்டு மாதங்களுக்குள் லிட்டருக்கு ரூ 5  உயர்த்தியது குறிபிடத்தக்கது

மூடு ஏற்றும் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறார்.

கோலிவுட்டிலும் சரி, டோலிவுட்டிலும் சரி நடிகை அனுஷ்காவுடன் நடிக்க முன்னணி ஹீரோக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கைநிறைய படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி உழைக்கிறார். அவர் என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளனர்.

அனுஷ்கா காட்சிக்கேற்றவாறு மூடை மாற்ற ஒரு வழிமுறையை கடைபிடிக்கிறாராம். ஹீரோவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்கும்போது, ஆளைத் தூக்கும் அளவுக்கு வாசனை உள்ள சென்ட் அடித்துக் கொள்வாராம். அந்த வாசனையில் ஹீரோவுக்கும் ரொமான்டிக் மூடு வந்து, தனக்கும் நல்ல மூட் வந்து காட்சி சூப்பராக வரும் என்பது அவரது ஐடியா.

அதேபோன்று சோகக் காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு செட்டில் யாருடனும் பேசாமல் ஒரு ஓரமாக அமைதியாக உட்கார்ந்திருப்பாராம். அவ்வாறு செய்வதால் சோகமான மூடு பார்ம் ஆகி காட்சி கலக்கலாக வந்து விடுமாம். அது மட்டுமல்ல தனக்கு யோகா தெரியும் என்பதால் பிறரையும் யோகா செய்யுமாறு கூறி சில ஆசனங்களையும் கற்றுத் தருகிறாராம்.

பரவாயில்லையே, 'கஷ்டப்படாமல்' நடிப்பைக் கற்று வைத்திருக்கிறாரே அனுஷ்கா...!

வயசு 80 தமிழ் சினிமாவுக்கு

தமிழின் முதல் பேசும் சினிமா 'காளிதாஸ்' 1931ம் ஆண்டு தயாராகி வெளியானது. வட சென்னையில் முருகன் தியேட்டர் என்று அறியப்பட்ட கினிமா சென்ட்ரலில் இந்தப் படம் வெளியானது.

டிபி ராஜலட்சுமி, பிஜி வெங்கடேசன், ராஜாம்பாள், சுசிலா தேவி, எல் வி பிரசாத், எம்எஸ் சந்தானலட்சுமி உள்ளிட்டோர் நடிக்க, மதுரகவி பாஸ்கர தாஸ் கதை, பாடல்கள், இசை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தார். ஹெச் எம் ரெட்டி இயக்கினார். அர்தேஷ்ரி எம் இராணி தயாரித்த இந்தப் படம்அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

மும்பையில் தயாரான இந்தப் படத்தின் ரீல் பெட்டிகளை ரயிலில் சென்னை கொண்டுவந்த போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மலர் தூவி, மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, குதிரை வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டு போய் கொண்டாடினார்களாம்.

இந்த 80 வருட சினிமா சரித்திரத்தில் முதல் வெற்றிப் படம் என்ற பெருமையும் காளிதாசுக்கே உண்டு. சினிமா என்ற ஆச்சர்யம் தாங்காமல் ரசிகர்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்தனர் இந்தப் படத்தை.

இந்தப் படத்தில் பணியாற்றிய பலரும் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்தனர் பின்னாளில். எல் வி பிரசாத் பெரிய சினிமா சாம்ராஜ்யத்தையே நிறுவினார்.

தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்திருக்கும் படமாக மாறிவிட்டது காளிதாஸ்.

கனடா பிரதமர் புறக்கணிப்பு

பெர்த் நகரில் காமன்வெல்த் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் இறுதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டு பேசினார்.

இலங்கையில் 2013ம் ஆண்டு அடுத்த காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு 53 நாடுகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினார்.


ராஜபக்சேவை மாநாட்டில் பேச அழைக்கப்பட்டதும் கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாபர், மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் ராஜபக்சேவுக்கு தனது எதிர்ப்பை காட்டினார்.


கடந்த வாரம் ராஜபக்சேவுடன், ஸ்ரீபன் ஹாபர் நேரடியாக பேசியிருந்தார். இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அவரிடம் விவாதித்தார். காமன்வெல்த் கூட்டத்திற்கு முன்பாக இதற்கு இலங்கை உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உறுதிப்பட கூறியிருந்தார். அவ்வாறு செய்யாவிட்டால் ராஜபக்சேவின் உரையை புறக்கணிப்போம் என்று கூறியிருந்தார். அதன்படி ஹாபர் வெளிநடப்பு செய்தார்.

கனிமொழியின் ஜாமீன் : சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவான பின்பு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. 

இதைத் தொடர்ந்து குற்றச்சாட்டு பதிவானதும் சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், பட அதிபர் கரீம் மொரானி ஆகிய 5 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 

இந்த மனு விசாரணையின் போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே சமயம் ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் பல்வா, ராசாவின் தனிச்செயலாளர் சந்தோலியா ஆகியோருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வருகிற 4-ந்தேதிக்கு தீர்ப்பை தள்ளி வைத்து நீதிபதி சைனி உத்தரவிட்டார். 

இந்நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் 4 நபர்களின் ஜாமீன் மனுவை எந்த அடிப்படையில்  எதிர்க்கவில்லை என்பதை சி.பி.ஐ. விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது