நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 5, 2012

கண்ண கட்டுதுங்க

தனிமரம் தனிமரம்னு சொல்லுவாய்ங்க அப்பெல்லாம் புரியல
இப்பதான் புரியுது அட இதுதானா அது
(சமீபத்தில் யாம் கண்ட நண்பரின் வாழ்க்கை)


கண்ணுக்கு மை அழகு அதுவும் ஒரு தனி அழகு


கண்ண கட்டுதுங்க
  

'ரம்'மியமாக :  

ஒரு பெரிய பாடம்  என் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்டேன் 

உணர்வுகளுக்கான எந்த சந்தையும் இல்லை

எனவே  உணர்வுகளை விளம்பரம் செய்ய வேண்டியதும் இல்லை


அணுகுமுறை  மாற்றம் செய்தலே போதுமானது.




இளைஞர்கள் பொறுப்பில்லாமல் சுத்துறாங்க, தல கால் புரியாம திரியுறாங்க அப்படியா........

இளைஞர்கள், தரையில் தங்கள் கால்களை வைக்கணும்னா அவர்கள் தோள்களில் பொறுப்பை சுமத்தினாலே போதும்..



மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

எனக்கு புடிச்ச சவாரியாக்கும் சும்மா சளைக்காமா சவாரி போவேன்

அது ஒரு தனி சுகமுங்க.....

வாய்ப்பு கிடச்சா ஒருக்கா போய்  பாருங்க  



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு



யம்மாடி நல்லா பயிற்சி எடுத்துக்கோ...

அடுத்த மேட்சுல

ஆடுறோம்...  ஜெயிக்றோம்....கப்ப வாங்றோம்
 

நன்றி படங்கள் கூகிள்

Thursday, October 18, 2012

ஒரு வயசு புள்ள

ஒரு வருஷம் ஒரு வருஷம் காத்திருந்தா கையில் ஒரு பாப்பா

முத்து முத்து பாப்பா
முத்தம் ஒண்ணு  கேப்பா
முத்து முத்து பாப்பா
முத்தம் ஒண்ணு  கேப்பா.........

(என்னவே இம்புட்டு சந்தோசமா இருக்கீரு)

வாங்க வாங்க
வணக்கம்

365 நாட்கள்  ஒரு வருஷம் - ஒரு வருசத்தில் 300 வோய்...

நீண்ட பதிவு (சுய சொரிதல் ச்சே சரிதம்)


கி பி 2000 ஆண்டு முதல்  எம்எஸ்என்/யாஹூ க்ரூப்புகளில் மட்டுமே வலய வந்தேன் ஆங்கிலத்தில், அதன்  தொடர்ச்சியாக  அப்படியே 2007 ல் தமிழ்  பதிவு பற்றி தெரிந்து   வாசிக்க தொடங்கினேன், 


(கி.பி.2007 முதல்)

(கி.பி.2008 முதல்)

(கி. பி. 2009 முதல்)

வாசிப்பதுடன் சரி வலைப்பூவில் எப்படி  பின்னுட்டம்  போடணும்  என்ற  ஞானம்  இல்லை போக  போக  தெரிந்து  கொண்டேன்.

கி பி 2010 தொடக்கத்தில் தான்  தமிழ் பதிவுலகில்  யாம் பின்னூட்டங்களின்  மூலமாக  பரிச்சியமானேன்.... (இங்கு வந்த பின் சிறுக சிறுக குரூப் பக்கம் போக முடியாமல் போனது இப்ப...தங்கில்ஸ்ல எய்தி எய்தி   இங்கிலீசு  பீஸ்  போச்சுங்க)

(கி. பி. 2010 முதல்)

'சித்தப்பு' (நான் செல்லமாக அழைப்பது) இவரின் பதிவின் மூலமாக கிடைத்தவர்கள் ஏராளம் அந்த வரிசையில் ஆரம்பத்தில் (ஏன்  இப்ப  வரையில்)  விரும்பி படிக்கும் பதிவுகளின்   பதிவர்கள்:

திரு. பன்னிக்குட்டி ராம்சாமி (இப்பல்லாம்  எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு.நாஞ்சில் மனோ ( இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு. விக்கி, விக்கியின் அகட விகடங்கள்! (இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

திரு. செல்வா (இவரும் எப்போதாவது பதிவிடுகிறார்)

முக்கியமாக டெரர் கும்மி (இவர்களும்  எப்போதாவது பதிவிடுகிறார்கள்)

(அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது...........ஹி ஹி ஹி கொளுத்தி விட்டுடீயே...இனி பதிவா போட்டு தாக்கு வாய்ங்களோ......பாப்போம்)

திரு. நீருபன்  (இப்பவெல்லாம் இவரின் பதிவு  வாசிக்கவே  நேரமில்ல
ஆனா அவரின் புரட்சி எப் எம் என்னை முழுமையாக திருடி கொண்டது)

இப்படி தான் போய்கொண்டு இருந்தது,  2011 ல்  தனிமையின் கொடுமையில்   துவண்ட எனக்கு ஒரு ஆறுதலாக,  திடீரெண்டு ஞானம் வந்தது  சரி நாமும் பதிவுலகில் பூ மிதிப்போமுன்னு,....

முக்கியமா நான்  வாசிக்கும் பதிவர்களை   தெரிஞ்சவங்க லிஸ்ட் என தொகுத்து எனது வலை  பூவில்  வெளிட்டேன்  கூகுளின்  தயவால்.... 

(அதுக்கு காரணமே அந்த  கால  கட்டத்தில்  வீசிய  மணம்)  

சில  நாட்களுக்கு  பின்.... (ஏழரை ஆரம்பம்.. ....)

எனது  வலைப்பூவில்  கடந்த ஆண்டு 2011    அக்டோபர் 18 ம்     நாளில் தமிழ் பதிவுலகில் யாம்  சுட்ட முதல் பஜ்ஜி.   

மாதங்கள் கடந்து என்றாலும் அதுக்கு வந்த ஒரே பின்னூட்டம் மாப்ள ஜீவா கோவை நேரம்.
 
திரும்பி பார்க்கிறேன்... ஓர் ஆண்டில் அடேங்கப்பா.... இதோ இன்று 2012 அக்டோபர்  18 ம் நாள்

பதிவுகள் - 300

பஜ்ஜியை விரும்புவோர்கள் - 112

பின்னூட்டங்கள் - 2957 

ப்ரோபைல் வீவ்ஸ் - 7132

பேஜ் வீவ்ஸ் - 29298......

ஒரு வயசு (பக்கி பய)புள்ள

ஏராளமான நட்பு.. எதை  சொல்ல  எதை விட.... ஏதாவது  விடுபட்டு விட்டால் இருக்கவே இருக்கு மன்னிப்பு கேற்ற வேண்டியது தான்.

மனசாட்சியின் பஜ்ஜிக்கடை என்று இருந்ததை   இந்த பதிவு முதல்  மனசாட்சி என்று  மாற்றிக்கொண்டேன்.

அதன் பின் எல்லாமே, எனக்குன்னு ஒரு பாதை அந்த வழியில் பயணம்.....

எனது  பதிவுகளை திரட்டிகளில் குறிப்பாக இன்ட்லி  யுடான்ஸ்  தமிழ்வெளி   ஹோட்லின்க்ஸ்   மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளேன் அதன் பின் வெட்டி பிளாக்கர்ஸ்  என்று முகநூலில்  மாப்ள வீடு சுரேஷ் தொடங்கிய  குரூப்பிலும் இணைக்க தொடங்கினேன். (இப்ப நிறைய குரூப்'ஸ் முகநூலில்).

ஆங்..வலைசரத்தில் என்னை முதலில் அறிமுகம் செய்தவர் வீடு சுரேஷ்.

கடந்த ஏப்ரல் 2012 வலைசர ஆசிரியர் பொறுப்பேற்க நண்பர்  தமிழ்வாசி பிரகாஷ் அதை தொடர்ந்து   ஜூன் 2012 ஐய்யா சீனா அவர்களும்  அழைத்தார்கள்  நேரமின்மையை ஆசிரியர் பொறுப்பை ஏற்க இயலவில்லை.

தொடும் வரைதான் இமயம் தொட்டு விட்டால் இதயம் (எப்பவோ கிறுக்கியது 9ம் வகுப்பு என நினைவு) இந்த  இடத்துக்கு  பொருந்தும்.... வலை ஆசிரியர் பொறுப்பு வகிப்பதுக்காக சொல்றேன். ம். பாப்போம்

கடந்த ஜூன் 2012  கோவை பதிவர்கள் சந்திப்பு இன்னும் ஏராளமான நட்பு,
நட்பு வட்டம் பெரிதாகியது. மகிழ்ச்சியா இருக்கு. எனது வலைப்பூவில் தெரிஞ்சவங்க  வரிசை நாளுக்கு நாள்  நீளுகிறது மனசுக்கு இதமாக இருக்கு. 

தனிமையில் துவண்ட என்னை, தனிமையையும் இனிமையாக்கியது  பதிவுலக தமிழ் சொந்தங்களே.   

பதிவுலகில் இதுவரையில்:

நேரில் அறிமுகம் ஆனவர்கள், தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள்,
மின்னஞ்சல் தொடர்பில் உள்ளவர்கள், சாட்டிங்  தொடர்பில் உள்ளவர்கள்,
(உங்களையெல்லாம்  தனித்தனியா உங்களின் வலைப்பூவுடன் சொல்லணும் ஆச, எண்ணம் ஆனா ராசா முடியலப்பா மன்னிச்.) மற்றும் பதிவின் மூலம் தொடர்பில் உள்ளவர்கள் ஆக எல்லோருக்கும்

கோடான கோடி நன்றிகள். 


டிஸ்கி: ஹா ஹா ஹா நோ விஸ்கி ,நோ பிராந்தி , நோ ரம்
               அடுத்த பதிவில் காக்டெயில் தான் கலக்கிடுவோம்ல.

   

Monday, October 15, 2012

மாற்றான் அல்ல மாற்றம்


வணக்கம்

டீ ஷர்ட்ஸ் வடிவமைப்புகள்


கேனத்தனமா இருக்கு..... ரசனைய சொன்னேன்



சிக்ஸ் பேக்காம்




ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவான்னு பாடுனானுங்க....ஜன்னலுக்கு கீரிலே போட்டுடாங்க.. 




எம்மாடீ.....ஆத்.....தீ



கொஞ்சூண்டு ரசிக்கிற மாதிரி ஆனாலும்
செல்லாது செல்லாது...  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

உங்கள் வாழ்க்கையில் என்றும் நல்ல  உறவுகளை  வைத்திருக்கவும். 

உன்னை நேசிக்க

உன்னை ஊக்குவிக்க

உன்னை தூண்டியெழுப்பக்கூடிய

உன்னை மேம்படுத்த மற்றும்

உன்னை சந்தோஷப்படுத்துவதற்காகவும் 

அதே நேரம்,,,,


மேலே சொல்லி  உள்ளவைகளை செய்ய இயலாத  உறவுகளை    தூக்கி  கடாசவும்/ஒதுக்கி வைக்கவும்.... அது  யாராக  இருப்பினும். (இது நம்ம  பாலிசிங்க)


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

டீ ஷர்ட்னா  இப்பூடீ இருக்கோணும்... 

இல்ல இப்படியும் இருக்கலாம்

ஜம்முன்னு...


எப்பூடீ



டிஸ்கி: அடுத்த பதிவு  சிறப்பு பதிவு...  அதற்கான வேலையில் மும்முரமாக......அப்ப இந்த பதிவு,  முந்தய பதிவுக்கும் வர இருக்கும் பதிவுக்கும் இடையில் இருக்கும்
இடத்தை நிரப்பத்தான்....ஹி ஹி ஹி


படங்கள் நன்றி  முகநூல் & கூகிள்      

Monday, October 8, 2012

உசுர சுண்டி இழுக்குறா..

வணக்கம்

இம்புட்டு நாளா அப்படி எனக்கு தோனலங்க ஏன்னா, பதிவுகள் மூலமே தொடர்புகள்  இருந்ததால்.

சமீபகாலத்தில் பதிவுலகில் நண்பர்கள் பலருடன் சாட்டிங்/ தொலைபேசி/ மின்னஞ்சல் தொடர்புக்கு பின் பதிவுலக  நண்பர்கள் எனது பெயர் என்ன? உங்களை எப்படி அழைப்பது என்று கேள்வி  கேட்டார்கள்.. அவர்களின் அன்பு அந்த நட்பு என் உசுரை  சுண்டி இழுத்தது. பின்ன இருக்காதா, எல்லோருக்கும் ஒரு பேரு இருக்க...  நானோ     வலைபூவின்  (ப்ளாக்) பேரில்.. அதானே நான் ஏன் என் பெயரை சொல்லாமல்  விட்டேன்... ஙே.

அந்த கேள்விக்கு விடையாக:

நண்பர்களே, சிறு வயது முதல் எனது பெற்றோர் அன்பாக செல்லமாக அழைத்த   முத்தரசு.....ஆம், இனி முதல் பதிவுலக நண்பர்களாலும் அவ்வாறே அழைக்க வேண்டுகிறேன்.  (அப்பாட ஒரு வழியா பேர  சொல்லிடான்டா...எலேய் நல்லா வருவல)

தெரியும் அடுத்து நீங்க என்ன எதிர்பாப்பிங்கன்னு...கேப்பிங்கன்னு......ம்  -எனது போட்டோ? வரும்... நேரம் வரும் போது அதுவும் வரும் -இப்பதானே  பாஸ்  பேர  சொல்லி  இருக்கோம்.

மனசாட்சி என்பது  ப்ளாகின் தலைப்பு -இன்னும்  சில  நாட்களுக்கு  எனது  பின்னூட்டங்கள் அதாங்க  உங்களின் வலைப்பூவில் நான்  இடும்  கருத்துக்களில்  எனது பெயருடன் அதாவது, முத்தரசு (மனசாட்சி) என்று இருக்கும் அப்புறம் முத்தரசு ஆக  இருக்கும்.

தொடர்ந்து உங்களின்  நல்ஆதரவுடன்......

புரிதலுக்கு நன்றி  

நேசமுடன்

கோவை முத்தரசு



ரொம்பவே ஒசந்தவங்க - வாழ்க வளமுடன்
 
வித்தியாசமான நிஜ ஜோடிகள்






வாழ்க பல்லாண்டுகள்



பார்ரா....., இப்பூடி கூட ?? 

இது கூட நல்லாத்தாம்யா இருக்க்கு 

மனபிராந்தி: காத்துவாக்கில & காதுல

நட்புக்கு மரணம் இல்லை

அப்படி இறந்தால்,

அது இயற்கையான மரணம் இல்லை

கொலை செய்யப்பட்டுள்ளது..

மனப்பாங்கு

அறியாமை

நான் என்னும் அகங்காரம்.

இவைகளால்.


விஸ்கி :  லொள்ளு & ஜொள்ளு

அச்சச்சோ அச்சச்சோ  கெளப்புறா கெளப்புறா

பழைய  நெனப்ப  கெளப்புறா

உசுப்புறா உசுப்புறா உசுர  சுண்டி இழுக்குறா

அச்சச்சோ அச்சச்சோ.... 




 நன்றி படங்கள் முகநூல் மற்றும் கூகிள்

Monday, October 1, 2012

என்ன்னா வெரைட்டி..


என்ன்னா வெரைட்டி...... எத்துன பிகரு ச்சே  கலரு

சேலையை சொன்னேன்....

இப்ப தான் புரிது எம்புட்டு நேரம் ஜவுளிக்கடையில வீணடிக்கும் காரணம்   









தொப்பையை குறைக்க இப்படியும் ஒரு வழி  இருக்கா..?!

இது தெரியாம பய புள்ளைக 

வாக்கிங், ஜாகிங், ரன்னிங்னு  நேரத்தை வீண் பண்ணிக்கிட்டு...

போங்கப்பு...  


மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

படைப்பாளிகள் வாழ்க்கையின் விதிகள்

செய்ய சொன்னதை விட அதிகமாக செய்யவேண்டும்

புதிய விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும்  

என்ன தெரியுமோ அதை மற்றவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் 

வேலையில் புகுந்து விளையாட வேண்டும்

இடைவேளை எடுத்து கொள்ள  வேண்டும்  

மற்றவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் போது வேலை செய்ய வேண்டும் 

முப்பொழுதும்  உருவாக்குதலில் சிந்திக்க வேண்டும்

சுயமா உத்வேகமா இருக்க வேண்டும் 

எதை செய்தாலும் நேசித்து செய்ய வேண்டும்  இல்லைனா விட்ரனும்.



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு




மேற்காணும் இரு படங்களை மணிகணக்கா பாத்துட்டு இருந்தேன்
ஏன், எதுக்கு, என்ன மாயமோ, மந்திரமோ  ஒரு மண்ணும் புரியல (இடையிடையில மானே தேனே பொன்மானே போட்டுக்கங்...) ஆனா மீண்டும் மீண்டும் பாக்கணும் போல இருக்கு.




மனபிராந்தி மற்றும் விஸ்கி தொடர்ந்து, விரைவில் இன்னும்
ரண்டு வகை பஜ்ஜிகள் அறிமுகம்....


படங்கள் நன்றி முகநூல் மற்றும் கூகிள்

Wednesday, September 26, 2012

ஏனப்பு, அது ஏன்னு உனக்கு தெரியுமா

வணக்கம்
வாழ்க்கையில் சில சுவராஜ்யமான விடயங்கள்

எதிர்பாரா சமயத்தில் உங்களை பற்றி ஒருவர் இன்னொருவரிடம் நல்லவிதமாக சொன்னதாக கேள்விப்படும் போது

தூக்கத்தில்  இருந்து   விழித்து ஒ.. இன்னும் விடிய நேரமிருக்கா என்று தூங்குவது

முதல் நேசம் கொள்வது 

முதல் முத்தம் கொடுப்பது /பெறுவது 

புதிய நண்பர்கள் பெறுவதும்  மற்றும் பழைய நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது.

பாத்ரூமில் பாடுவது

அழகான  கனவுகள் அசைபோடுவது

உச்சி வெயிலில் ஐஸ் கிரீம்  சாப்பிடுவது

குளிர்ந்த அந்த காலை பொழுதில் உங்கள் நேசத்துடன் சேர்ந்து காப்பி பருகுவது

உங்களுக்கு பிடித்தவருடன் கைகோர்த்து நடப்பது

சூரியன் மறைவதை பார்ப்பது 

மனதுக்கு பிடித்தவரின் தோளிலோ /மடியிலோ தலை சாய்ந்து படுப்பது 

நம்மை பிரிந்து ஒரு உள்ளம் ஏங்குது  என தெரியும் போது 

பிறந்த குழந்தையை தடவுவது, முத்தம் கொடுப்பது 

விழும் கண்ணீர் துளி   ஆறுதலுக்கு ஆதரவுக்கோ கட்டி தழுவும் போது. 


இதுல ஒரு நுணுக்கம் எல்லாமே 'து' வில் முடியுது. 
(என்னா ஒரு கண்டுபுடிப்புடா)

(இன்னும் எதாவது இருந்தா சொல்லுங்க இத்துடன் சேர்த்துடுவோம்)




ஸ்டார் பிஷ்க்கு மூளை கிடையாதாம்.


என்னமோ உனக்கு மூளை இருக்குற மாதிரி பில்டப்பை பாரு
  



மைன்ட் வாய்ஸ்  கேக்குதுப்பா கேக்குது




 மனபிராந்தி : காத்துவாக்கில & காதுல

பூங்காக்களில் பார்க்கலாம் இப்படி ராணுவவீரன் / அரசன்  சுமந்தபடி குதிரை சிலைகளை, அதில் உள்ள நுணுக்கமான ஓன்று:

குதிரை இரண்டு கால்களை தூக்கியவாறு சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் போரில் இறந்ததாக அர்த்தம்.

குதிரை ஒரு  காலை தூக்கியவாறு சிலை இருந்தால்
சிப்பாய் / அரசன் போரில் காயம் பட்டு சிரமப்பட்டு இறந்தான்

குதிரை நான்கு கால்களின் பாதங்களும் தரையில் ஊன்றி  சிலை இருந்தால் சிப்பாய் / அரசன் இயற்கை மரணம் அடைந்தார்.


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
 தலைக்கி  குளிச்சி, தலை சீவி  ஜாக்கெட் போட்டு, தாவணியோ சேலையோ கலாச்சாரம்மா உடை அணிந்து, கண்ணுக்கு மை இட்டு, பூ வைச்சி,  பவ்டர் பூசி,
பொட்டும்  வைச்சி, உதட்டுக்கு சாயம் பூசி ,  அலங்காரம் பண்ணி நகை போட்டு நெத்திசூடி அழகு படுத்தி....தேவதை  போல சிங்காரிச்சி.........

கடைசியிலே கொஞ்சூண்டு முன் தலைமுடியை எடுத்து முகத்துல வுட்டுகுறாங்களே...

ஏம்பு அது ஏன்னு உனக்கு  தெரியும்..

அத  தான் சித்தப்பு  பல வருசமா மோட்டு வலய  பாத்து 

ஒசிச்சுட்டு இருக்கேன் ஒரு மண்ணும் புரியல..  

ஏங்.. மாப்ள உங்களுக்காவது தெரியுமா??







Monday, September 17, 2012

பதிவுலகத்துக்கு குட் பை

வணக்கம்  

போதும்டா,  பொழப்பத்து போயா பதிவுலகத்துக்கு  வந்தோம்... எம்புட்டு பொலப்புக்கும் இடையில் அப்ப அப்ப   தெரிஞ்சவங்க தளத்துக்கும், புதுசா வர்றவங்க தளத்துக்கும் போய்   முடிஞ்ச வரையில் 
அவுக பதிவுகளை படிச்சிட்டு...படிச்சிட்டு.....

( இருய்யா வாறன்)

நம்மகிட்ட உள்ள கெட்ட பழக்கம்  அட எங்க போனாலும் எந்த பதிவை  படிச்சாலும் கருத்து, பின்னோட்டம், மறுமொழி ( யோவ் தமிழ்ல சொல்லும்வோய்)
ஆங்.. அதாங்க கமண்டு போட்டாதான்  சமாதானம் அடையுது  மனசு.. 

சரி இதுல என்ன பிரச்னை நல்ல விடயம் தானே.....

அதுல தான் பிரச்சனையே....

நம்ம போடுற கமண்டு ஸ்பேம் பாக்ஸ்சில்  போய் ஒளிஞ்சுக்குது அதை அந்த 
ப்ளாக்கின் உடமஸ்தன்  தான்  வெளியவுடனும்.
(ஒ..... பப்ளிக்குட்டி பண்ணனும்)

இது சம்மந்தமா  இப்படியும் ஒரு பதிவர்     அப்படின்னு  ஒரு பதிவும்  போட்டாச்சிங்க....சரி மேட்டர் முடிச்சதுன்னு பார்த்தா.....

முடியல...முடியல ராசா முடியல....


பின்ன என்னங்க, ஒரு பதிவுல ஒரு கமண்டு  போட்டேன் அதை காணோம்.......அவுக மெயில் ஐடியும் இல்ல அதனால,

இன்னொரு கமண்டு இப்படி போட்டேன்

//என்
கமண்டை
காணோம்//

அதுக்கு அவுக பதில் சொன்னாக :  
//ஹிஹி....போடாத கமென்ட் எங்கிருந்து வரும்....//


ஸ்பேம் அப்படின்னா  என்னான்னு தெரியல  சர்தான்.....

இது முழுக்க முழுக்க கூகிள் பிராபளம் தான்.... எப்படின்னா, யாம் இடும்  கமண்டுகள்  பிராப்ள ச்சே  பிரபல பதிவர்களுக்கு மட்டும் ஸ்பேம்  போறதுல்ல.... பிராப்ள ச்சே  பிரபல பதிவராக ஆகி கொண்டு இருப்பவர்களுக்கும்,  பிரபலமா நட்ட நடு சென்டர்ல இருப்பவங்களும், புதியவர்களுக்கும்   மட்டும்  அப்படி  நடக்குதுங்க.

சோ,... அதனால (கொய்யால ரெண்டும் ஒன்னு தான்)


பதிவுலகத்துக்கு குட் பை (ஒழிஞ்சதுடா  ஒரு தொல்லை) .....


அல்லோ இன்னும்  முடிக்கல...... 


அதுக்குள்ளே   என்ன்ன்னா ஒரு சந்தோசம் பக்கி பய புள்ளைக்கி...     ம்.....

குட் பை ஏன்  சொல்லணும் யோசிச்சேன் நின்னு யோசிச்சேன் படுத்து யோசிச்சேன் நடந்து யோசிச்சேன்....இன்னும் பலவாறும் யோசிச்சேன்...


வரும் காலம் ச்சே எதிர்காலத்துல ஒரு எழுத்தாளர (இக்கும் இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல) தமிழ்  கூறும்  நல்லுலகம்  இழந்து  வாடுமேன்னு.....  எண்ணத்தை மாத்திகிட்டேன்...


(அப்ப போகலையா...இன்னும் உசிர வாங்கனுமுனு  முடிவு பண்ணிட்ட...
கர்ர்ர்ரர்த்து) 

யோவ் மானிட்டரை தொடங்கைய்யா..



இனிமேல் எந்த தளத்துக்கு போனாலும் எந்த பதிவை படித்தாலும், படித்து விட்டு எப்பவும் போல கெட்ட   பழக்கத்தை கைவிடாமல் தொடர முடிவு பண்ணீட்டேன். எப்பூடீ... (அப்ப இந்த மாதிரி இன்னும் பதிவு வரும்னு சொல்லாம சொல்ற... வெளங்கிடும்ல)

ஹே ஹே ஹே ஏங்.. கேரக்டரையே புரிஞ்சுக்கல.

எஸ் ஜூஸ் மீ    ஒரு விடயம்,...


ஒரு புத்தகம் போடலாமுன்னு இருக்கேன். புத்தகத்தின் தலைப்பு

'லோலாய்'  


சரி நம்ம கடைக்கு வந்துட்டு,,, ஸ்பெசல் ஐட்டம்:  வாங்க பாஸ்



விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
சத்தியாமா தான் புள்ள நீ ஒரு ரவுண்டு வருவ நம்பு..


அட இது வேற ஆருமுல்ல  நம்ம சிலுக்கு இல்ல சிலுக்கு, சிலுக்குவோட வாழ்க்கை வரலாறை ஹிந்தி படத்துல எடுத்தாங்க அதுல சிலுக்கா  நடிச்ச  வித்யா பாலன்.....

என்னா  ஒரு ஹாப்பி லுக்கு....

கண்களில் சிரிப்பு என்பது இதுதானோ

 நம்ம கடைல ஜொள்ளு தூக்கலா இருக்காம்.. அப்படியா மக்கா'ஸ்??? ஙே.

 டிஸ்கி :
சமீபத்தில் பதிவுலகில் ஹிட்டுக்காக (அது என்ன ஹிட்டோ)என்னவெல்லாமோ  நடக்குது அவுக அவுகளுக்கு அவுக அவுக பிரச்னை என்ன நான் சொல்றது - எப்படி எல்லாம் சமாளிக்க  வேண்டி இருக்கு ஸ்...யபா..ஏதோ நம்மால முடிஞ்சது  ஹி  ஹி  ஹி...ஏம்பா நா சரியா தான் பேசுறேனா.