நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, May 21, 2012

எடுக்கவா பிடிக்கவா துடிக்கிறேன் மானே

பெண்ணை புகைப்படம் எடுப்பவர்  யார்?

 வலதுபுறம் உள்ளவரா? இடதுபுறம் உள்ளவரா? ( ரொம்ப முக்க்க்கியம்) 



 பட்ட பகலில் வெட்ட வெளியில்
மொட்ட பாறையில்......இது ஜோடி



இதுவல்லவோ ஜோடி


மேலே உள்ள மூன்று படங்களுக்கும் ஒரு ஒற்றுமை என்னான்னா? அவுங்க காதலர்கள் ஹி ஹி ஹி  ( அடிங்.. கொய்யால)


லேடி ஜேம்ஸ்பான்ட

 
என்னத்தை சொல்லி......கலி காலம்.... குளோபல் வார்மிங் 

(டேய்.... இது தான் மேண்டில்,....  அதுக்கெல்லாம் மச்சம் வேணுண்டா)




தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் உனக்கு...





விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு


யோசிச் யோசிச் ஒண்ணுமே தோணல.....

மன்னிச்...... சுட்டு விட்டேன்:

நீ கட்டும் சேலை இடுப்புல நா மயங்கி போனேனே

உன் எலிமிச்சை நிற இடுப்புல நா கிறங்கி போனேனே


இப்படி மயங்கியும் கிறங்கியும் சுயபுத்தி இழந்து கிடந்தால் எப்டிரா வரும் யோசனை  
\

 படங்கள் நன்றி முகநூல் & கூகிள்

Thursday, March 1, 2012

ஆண்னென்ன? பெண்னென்ன? உண்மையான வாழ்க்கை..


நட்பு என்பது காலை மாதிரி
நாள் முழுவது கூட  வராது
ஆனால் ஓன்று மட்டும் உறுதி
தூங்கி எழும் போதெல்லாம் வரும்
 நாளையும்  வரும் ஒவ்வொரு நாளும் வரும்
அடுத்த வருடமும்  வரும்.
வாழும் நாட்கள்  தாண்டியும்  வரும். 

நட்பு என்பது வைரங்கள்  மாதிரி
அது உண்மையானதும் அரிதானதும்
பொய்யான நட்பு என்பது இலைகள் மாதிரி
அது எல்லா இடமும் சிதறி கிடக்கும் சிதறியும்  போகும்

வாழ்க்கை என்பது
6 நண்பர்கள்.. 2  பைக்குடன் ..  பெட்ரோல்  இல்லாமல்...இருப்பது.
வாழ்க்கை என்பது
புகைப்பவர்கள் 6 பேர்...ஒரு சிகரட்டுடன்   கடற்கரையில் அமர்ந்து இருப்பது.

வாழ்க்கை என்பது
எல்லாமே முட்டாள்தனமானது ஆனால் அறிவோடு ஏதோ நட்பு போல. 


விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு  

ரோஸ் பிறந்தது அழகுக்காக
மல்லிகை பிறந்தது  மணத்துக்காக
நீ பிறந்தது எனக்காகா 
நான் பிறந்தது உனக்காகா 
நீயும் நானும் பிறந்தது நட்புக்காகா. 



Tuesday, December 6, 2011

அணு.....அணுவாய்...

அணு.....அணுவாய்...

பவர் உற்பத்திக்கு
மட்டுமல்ல
உயிர் உற்பத்திக்கும்
உத்திரவாதம் தாருங்கள் !

தேச முன்னேற்றத்தில்
மக்கள் நலம் இல்லை
மக்கள் முன்னேற்றத்தில்தான்
தேச நலன் இருக்கிறது !

எங்கள் போராட்டமெல்லாம்
வாழ்க்கைத்தரத்தை
பெருக்கிக்கொள்ள அல்ல -
வாழ்வாதாரத்தை
உறுதிபடுத்திக் கொள்ள...

மனசிலிருந்து அல்ல
உயிரிலிருந்து எழுப்பப்படும்
எங்கள் வினாக்கள் இதுதான்.....

அச்சம் போக்காமல்
ஆலையைத்
தொடங்கலாமா.?

கொடும நோய் தொற்றும்கடும் பயத்தை
விதைக்கலாமா..?

வளர்ந்த நாடுகள் கூட
சாத்தும் கதவுகளை
வலியப்போய் திறக்கலாமா?

காலம் பார்க்காமல்
முத்துக் குளிக்கும் மக்களை
ஆழம் பார்க்கலாமா?

வேருக்கு
வெண்ணிர் ஊற்றுவதுதண்ணீர் ஊற்றுவதுஆகாது..! 

விரதத்தை
முடித்து வைக்க
பழச்சாறு
தராவிட்டாலும்
பாதரசம் தராதீர்கள்..!

மூச்சுப் பிரச்சனையை
வெறும்ஆட்சிப் பிரச்சனையாக மட்டும்பார்க்காதீர்கள்


எழுதியவர் அண்ணா சிங்காரவேலு - அதிராமபட்டினம்