நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, October 25, 2011

இறங்கி வந்த பாஜக!

கடந்த சில தேர்தல்களாக 2 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாங்கி வந்த பாஜக, உள்ளாட்சித் தேர்தலில் அதிலிருந்து சரிந்து விட்டது.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றிகளைப் பெற்றிருந்தது. 2 நகராட்சித் தலைவர் பதவி, 4 மாநகராட்சிக் கவுன்சிலர்கள், 37 நகராட்சி கவுன்சிலர்கள், 13 பேரூராட்சித் தலைவர்கள், 181 கவுன்சிலர்கள், 2 வார்டு உறுப்பினர்கள் என அனைத்திலும் பாஜக சொல்லிக் கொள்ளும்படியாக பிரிநிதிகளைப் பெற்றிருந்தது.

அதிமுக, தி்முக என தலா ஒருமுறை கூட்டணி அமைத்து தமிழகத்திலும் பாஜக பிரபலமானது. ஆனால் அதன் பின்னர் இரு திராவிடக் கட்சிகளும் பாஜகவை தூரத்தில் வைத்து விட்டன. இதனால் தொடர்ந்து அது தனியாகவே போட்டியிட்டு வருகிறது.

தனியாக போட்டியிட்டாலும் தலா 2 சதவீத வாக்குகளை ஒவ்வொரு தேர்தலிலும் அது பெறத் தவறியதில்லை. கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் தனக்குள்ள செல்வாக்கை அது தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

கடந்த 2006 சட்டசபைத் தேர்தலில் 2.02 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, 2009 லோக்பா தேர்தலில் 2.34 சதவீத வாக்குகளைப் பெற்றது.

இந்த நிலையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. 1.35 சதவீத வாக்குகளையே அது பெற்றுள்ளது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது பெற்ற வாக்குகளை இந்த முறையும் வாங்கியிருந்தால் இன்னும் கூடுதலான உள்ளாட்சிப் பதவியிடங்களைஅது கைப்பற்ற முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவைப் பொறுத்தவரை எது வந்தாலும் அதற்கு லாபம்தான். காரணம், யாரும்தான் அவர்களை கூட்டணிக்குக் கூப்பிடப் போவதில்லையே...!

எரியும் தீ - 'பிரா'வைத் தேடி ஓடிய நடிகை

சமீபத்தில் இங்கிலாந்து தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் வீட்டுக்கு விருந்தினராக சென்றிருந்தபோது திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய அவரது 90 வயது தாயாரை கைகளில் தூக்கிக் கொண்டு ஓடி வந்து காப்பாற்றி பரபரப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து நடிகை கேட் வின்ஸ்லெட், அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கிரஹாம் நோர்ட்டன் ஷோவின்போது கேட் அளித்த பேட்டியில், அதிகாலை மணி 4.30 மணிக்கு நாங்கள் அனைவரும் எழுந்தோம். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு விட்டதாக சத்தம் கேட்டது. இதனால் நான் பயந்து போய் விட்டேன்.

தீவிபத்து நடந்த இடத்தை நோக்கி நான் விரைவாக ஓடினேன். அப்புறம்தான் யோசித்தேன், நம் மீது தீ பரவி விட்டால் என்ன செய்வது என்று. பிறகு எனது குழந்தைகளிடம் சென்று உள்ளே போய் கதவைப் பூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை வந்தது.+

உடனே பெட்ரூமுக்கு ஓடினேன். ஒரு பிராவை எடுத்து அணிந்து கொண்டேன். அது எனக்கே வித்தியாசமாக இருந்தது. பின்னர் பிரா நம்மை காப்பாற்றாமல் போய் விடுமோ என்று நினைத்து ஒரு டி சர்ட்டை எடுத்து அணிந்தேன். பிறகு எனது குழந்தைகளை இழுத்துக் கொண்டு ஓடினேன். பின்னர் பிரான்சனின் தாயாரையும் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தேன் என்றார் கேட்.

Monday, October 24, 2011

என்ன கொடுமை அழகிரி

வரும் தேர்தலில் தி.மு.க. 234 தொகுதிகளிலும் ஜெயிக்கும். அதன் பின்னர் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது”

இந்த பேட்டியை கொடுத்தவர் வேறு யாருமில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான மு.க.அழகிரி தான். இதே ஆண்டு, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அழகிரியின் ராஜபாட்டை பேட்டி இது. எங்கு சென்றாலும் அவர் அளிக்கும் பேட்டி இதுதான்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க.வுக்கு வந்த சோதனைகளை விட, தி.மு.க. தொண்டனுக்கு வந்த சோதனையை விட தமிழ்நாட்டில் அதிகமாக பாதிக்கப்பட்ட தி.மு.க. பிரமுகர் அழகிரியாகத்தான் இருப்பார். கட்சியின் தலைவரின் மூத்த மகன். மத்திய அரசின் உரத்துறை அமைச்சர். தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிரி,  தான் வசிக்கும் வார்டில் தி.மு.க. தோற்றுவிட்டது கூட செய்தியல்ல.
அந்த வார்டில் தி.மு.க. நான்காவது இடத்தை பிடித்திருக்கிறதாம். என்ன கொடுமை அழகிரி இது?

'அது' கிடைக்காமல் போச்சே

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஜாமின் கோரி இன்று தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை மதியம் 2 மணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தேவையா?

 
வேலை கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று சொல்வோருக்கு இந்த பதில் - பிரச்சனைகளும் போராட்டங்களும் வந்தபிறகு இதுபோன்ற உறுதிமொழிகள் தந்து போராட்டத்தை திசை திருப்ப முயற்ச்சிக்காமல் இருந்திருப்பார்களா என்ன? நடந்தது, அதையும் மக்கள் தூக்கி எரிந்து விட்டார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள ஆசைப் படுகிறேன். பத்துவருடமாக அங்கு வேலை செய்துவந்த வெளிமாநில அன்பர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பேனும் நிகழ்ந்ததுண்டா? வேலைதான் காரணம் என்றால்? இத்தனை வருடம் இத்தனை வெளிமாநிலத்தவர் அங்கு வேளையில் இருக்கமுடிந்தது எப்படி?

திடீர் போராட்டம் சந்தேகத்தை தூண்டுகிறது என்று நினைப்போருக்கு - இந்தியாவை திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு மக்கள் அறவழிப் போராட்டம் நடக்கிறது, 1500 கோடி ரூபாய் அணு உலையை மூட சொல்கிறார்கள் என்றால் இவ்வளவு நேரம் தமிழக உளவுத்துறைக்கும், இந்திய உளவுத்துறைக்கும் இந்த சந்தேகம் வராமல் இருக்கும்? அப்படி இருந்தும் இதுவரை அந்தகாரணம் வெளிவராதது ஏன்? அரசாங்கம் இந்த போராட்டத்திற்கு மதிப்பளிப்பது ஏன்?
ஏன் என்றால்? இந்தப் போராட்டம் சுயனலத்திர்க்கோ, அல்லது காசுக்காகவோ, நிலத்திர்க்காகவோ, வேலைக்காகவோ, அரசியளுக்காகவோ செய்யப் படுவதில்லை. வாழ்வாதாரம் போய்விடுமோ என்ற ஒரு இனத்தின் பயம், உழைக்கும் வர்க்கத்தின் பயம், சந்ததிகளைப் பற்றிய பயம், பயம், பயம் மட்டுமே காரணம்.

பாதுகாப்பு உத்தரவாதம் தந்தால் ஒப்புக்கொள்ளவேண்டிதானே என்று சொல்பவர்களுக்கு - இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பானை விட நாம் தொழில் நுட்பத்தில் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? இல்ல அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என்ன? அவர்களே விழி பிதுங்கி நிற்கும் போது நாம் என்ன செய்ய முடியும். அப்படி தவறி எதாவது நடந்துவிட்டால், ஒரு அறிக்கை விட்டுவிட்டும் வருத்தம் தெரிவித்துவிட்டும் போய் விடுவார்கள் அப்போ நீங்கபோய் கொண்டு வருவீர்களா இந்த உயிர்களை?

சரி சுனாமி இனிமேல் இந்தியாவில் வராது என்று உங்களால் உத்திரவாதம் தரமுடியுமா?.

பதுக்கப்பனது என்று நினைக்கும் நீங்கள் அங்கு வாழ்த்தயாரா?

இந்தியாவில் இரண்டு அணுமின் நிலையம் தமிழ் நாட்டில் மட்டும் தான் அது ஏன்? கல்பாக்கம் ஒன்று போதுமே நமக்கு.

2000 மெகாவாட் மின்சக்தி தயாரிக்க பயன்படுத்தப் படும் ரியாக்டரின் சக்தி என்னவென்று தெரியுமா? அதில் பயன்படுத்தப் படும் யுரோநியத்தின் அளவு தெரியுமா? இல்லை அடுத்த வருடம் மேலும் இரண்டு ரியாக்டர்கள் அதே கூடங்குளத்தில் நிறுவ இருக்கிறார்களே அது தெரியுமா? அப்படி நிறுவினால் மொத்தம் மூன்று ரியாக்டர்களின் அளவி நினைத்துப் பாருங்கள். அதன் கழிவுகளை நினைத்து பாருங்கள்.

சமீபத்தில் பிரான்சில் ஏற்ப்பட்ட அணுஉலை கழிவு பிரச்சனை என்னவென்று கொஞ்சம் இணையத்தில் தேடிப் பாருங்கள்

அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் தென் தமிழ்நாடு முழுதும் புல்பூண்டு இல்லாமல் போய் விடும். இன்று காற்றுவாங்க மின்விசிரிக்கு, குளிரூட்டிக்கு மின்சாரம் இல்லை என்று கவலைப்படும் நீங்கள் காற்றுவாங்க கறியில்லாமல் போய்விடும். அனைத்தும் உருகி ஓடிவிடும்.

(பத்து வருடமாக இல்லாமல் திடீர் போராட்டம் நடத்தி) தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு இந்திய வளர்ச்சி பாதைக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு -
அப்படி இருந்திருந்தால் இத்தனை நாள் கல்பாக்கம் இயங்கி இருக்காது, அது போல் கூடங்குளம் 2000 மெகாவாட் தமிழகத்திற்குத்தான் என்று கனவு காணாதீர்கள், அதில் வெறும் 976 மெகாவாட் தான் அதும் போராட்டம் ஆரம்பித்தபிறகு அறிவித்தது. அதற்க்கு முன் அதைவிட மிக்க மிக குறைவு.

அணுசக்தி பயன்படுத்தாத நாடுகள் இருளில் மூழ்கிப் போய் விட்டனவா? இல்லை ஒட்டுமொத்த இந்தியாவின் மின்சாரத் தேவையில் இந்த பத்து அணுமின் நிலையங்களின் பங்களிப்பு 4% தான் என்பதும் தெரியாதா?

அப்படி என்றால் இன்னும் எத்தனை எத்தனை அணுமின் நிலையங்கள் கட்டப் போகிறீர்கள்? அனைத்தையும் பாதுகாக்க என்ன என்ன நடவடிக்கைகள். போர் வந்து இந்த நிலையங்கள் தாக்கப்பட்டால் விளைவு?

உங்கள் வீட்டு மின்சார வசதிக்காகவும், நீங்கள் சீரியல், கிரிக்கெட் பார்ப்பதற்காகவும் எத்தனை மக்கள் உயிரை பணையம் வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
சரி அவர்கள் அங்கிருந்து காலி செய்தால் என்ன? என்று கேட்டால் -
தமிழ் நாடு மொத்தத்தையும் காலி செய்துவிட்டு அணுமின் நிலையங்களாக நிறுவி விடலாமா?

காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா நதிநீர், ஒக்கேனைகல் குடிநீர்த்திட்டம், செய்து சமுத்திரத் திட்டம், தமிழர் மீனவர் பிரச்சனை இவற்றை தீர்த்துவைத்தால் பிறகு யோசிக்கலாம்?

இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப் பட்டாலே போதும் தமிழ்நாடு வளமையோடும் செழிப்போடும் இருக்கும், இவற்றை கேட்க வக்கு இருக்கா நமக்கு? இல்லை என்றால் இந்த பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசக் கூடாது. வேடிக்கைப் பாருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை

இந்தியன், ஜனநாயகம், தேசப் பற்று, சிந்தனையாளர் என்று நினைத்து நம் மக்களின் போராட்டத்திற்கு நீங்களே தடையாய் இருக்காதீர்கள். ஒற்றுமை என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழன் இருக்கிறான். இல்லையென்றால் தமிழினம் என்பதை கல்வெட்டில் மட்டும் காணவேண்டிய நிலைமை வந்துவிடும்.
__________________
நன்றி- த.நிவாஸ்

அண்ணி வேடத்தில் - திரிஷா வேதனை

 
 
 திரிஷாவை தெலுங்கு படமொன்றில் அண்ணி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக வதந்தி பரவியது. பட வாய்ப்புகள் இல்லாததால் அண்ணி கேரக்ட்டருக்கு இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அப்படத்தில் வெங்கடேஷ், மகேஷ்பாபு என இரு நாயகர்கள் நடிக்கின்றனர்.

வெங்கடேஷ்பாபுவின் தம்பியாக மகேஷ்பாபு நடிக்கிறார். வெங்கடேஷ் மனைவி வேடத்தில் திரிஷா நடிக்கிறார். அதாவது மகேஷ்பாபுவின் அண்ணியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாயின.

இது பற்றி திரிஷாவிடம் கேட்ட போது வருத்தப்பட்டார். அவர் கூறியதாவது:-

மகேஷ்பாபு, வெங்கடேஷ் இணைந்து நடிக்கும் படத்துக்கு நான் ஒப்பந்த மாகவில்லை. எனவே மகேஷ்பாபுவின் அண்ணியாக நடிக்கிறேன் என்ற கேள்வியே எழவில்லை. விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. திறமையை காட்டுவதற்கு இப்படத்தில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

எல்லாமே அம்மா தான்

பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி முடிவெடுப்பது உள்ளிட்ட அனைத்தையும் சோனியா காந்திதான் செய்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

38 நாள் யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, ஒரிசா மாநிலம் பர்கார் என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் மன்மோகன் சிங்தான் நான் கண்ட பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர். பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி அனைத்து முடிவுகளையும் சோனியா காந்திதான் எடுக்கிறார்.

மன்மோகன் சிங் அரசைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால் மன்மோகன் சிங்கின் 'செயல்திறன்'தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அதிகாரப்பூர்வமாக அவர் பிரதமராக இருந்தாலும், அவர் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றே நான் கருதுகிறேன். அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ் தலைவர்தான் எடுக்கிறார் என்றார் அத்வானி.

கடந்த வாரம்தான் நாட்டிலேயே மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என்று கடுமையாக சாடியிருந்தார் அத்வானி. இதற்குப் பதிலளித்த பிரதமர், அத்வானி தனது பேச்சின்போது கடுமையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன், முடிவுகளை சோனியாதான் எடுக்கிறார் என்று அத்வானி சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?!


நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.

ஆயுளை அதிகரிக்க கடினமான சில விஷயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்.

ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.

எடையைக்குறைத்தல்

புகைத்தலைத் தவிர்த்தல்

உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்

நீரிழிவு கட்டுப்பாடு

சுறுசுறுப்பான வாழ்க்கை

பழங்களை அதிகம் உண்ணுதல்

அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

மகளுக்காக காத்திருக்கிறார்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக, கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ஜாமின் கோரி, இன்று மனு தாக்கல் செய்வதால், டில்லி சென்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று அங்கேயே தங்கினார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டதால், ஜாமின் கோரி கனிமொழி, இன்று மனு தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி தாக்கல் செய்யப்படும் போது, பெண் என்ற வகையில், அவருக்கு உடனே ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.அவர் ஜாமினை சி.பி.ஐ., எதிர்க்காது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களுக்காகவே, கருணாநிதி நேற்று சென்னை திரும்பவில்லை என்றும், மகளுக்கு ஜாமின் கிடைத்ததும், அவருடன் சேர்ந்து சென்னை திரும்புவதற்காக, நேற்று டில்லியிலேயே தங்கி விட்டார் என்றும், தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.அதே சமயம், மகளைத் திகார் சிறையில் சந்தித்த போது, அதிக அளவு இருவரும் உணர்ச்சிவயப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சி.பி.ஐ., வலையில் தயாநிதி

சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது:ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட விவகாரத்தில், மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. தயாநிதியின் வீட்டுக்கு 300 டெலிபோன் இணைப்புகள் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த வழக்கில் தொடர்புடைய, சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள், டி.டி.எச்., சேவையில் ஈடுபட்டுள்ளதை, சி.பி.ஐ., கண்டுபிடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக, டி.டி.எச்., நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை, தொலைத் தொடர்பு துறையிடம், சி.பி.ஐ., கேட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, டிஷ் "டிவி' இந்தியா லிட்., ரிலையன்ஸ் பிக் "டிவி' பிரைவேட் லிட்., பார்தி மல்டி மீடியா லிட்., பாரதி பிசினஸ் சேனல் பிரைவேட் லிட்., தூர்தர்ஷன், சன் டி.டி.எச்., பிரைவேட் லிட்., டாடா ஸ்கை லிட்., போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை பெற்ற சி.பி.ஐ., அவற்றை ஆய்வு செய்தது. இதன்பின், சன் டி.டி.எச்., தொடர்பான ஆவணங்களை தவிர, மற்ற ஆவணங்கள், தொலைத் தொடர்பு துறையிடம் திரும்ப அளிக்கப்பட்டு விட்டன.சன் டி.டி.எச்.,க்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதியின் பங்கு குறித்து விசாரிக்க, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்தன.

Sunday, October 23, 2011

சர்வாதிகார மன்மோகன் அரசு- ஜெயலலிதா

தமிழக அரசுக்கு தேவையான நிதியினை விடுவிக்காத மத்திய அரசினை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
நேற்று புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பாராமுகத்தைக் குறிப்பிட்டு, மத்திய அரசு ஜனநாயக விரோதமாக நடக்கிறது, இது ஒரு சர்வாதிகார அரசு என்று குற்றம் சாட்டினார்.

இந்த தேசிய வளர்ச்சி கவுன்சிலில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல் அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சியில், சரிவிகித சமான நிலையினை எட்டுவதற்கான கொள்கைகளை வரைவு செய்யும் முக்கியப் பணியினை இந்த கவுன்சில்தான் மேற்கொள்கிறது. இந்தக் குழுவின் கூட்டமானது, எந்தவிதத்திலும் பயனற்ற, சம்பிரதாயமான ஒரு கூட்டம்தான் என்று ஜெயலலிதா கூறினார்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் பார்க்கிறது என்று கடுமையாகச் சாடினார். இதற்கு சான்றாக, மத்திய ஆளும் கூட்டணியின் மிக முக்கிய கூட்டணிக் கட்சியான திரிணமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்துக்கு வழங்கப்படும் நிதியுதவிகளை எடுத்துக் கூறினார் ஜெயலலிதா. இவை தமிழ்நாட்டுக்கு மறுக்கப்படுவதன் காரணத்தையும் வினவினார்.

ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படம்

தமிழ்ப் படங்களின் வசூலையே மிஞ்சும் அளவுக்கு ஆங்கிலப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்துகொண்டு வருகிறது. அதன் விளைவாக ஜுராஸிக் பார் என தொடங்கி அவதார் என்று அத்தனை ஆங்கிலப்படங்களும் தமிழ்ப் பேசுகின்றன. இந்த நிலையை மாற்றி ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை நாம் அவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜேஷ் கண்ணா.

டீலா நோ டீலா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா, இயக்கும் முதல் படம் 'பெருமான்'. இந்த படத்தின் துணை தலைப்பாக தி ரஜினிகாந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்திற்கும் ரஜினிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம். சொல்லப்போனால் ரஜினிதான் இந்த படத்தின் ஹீரோவாம். இதை ரஜினியிடம் கூறி அவருடைய பெயரை பயன்படுத்த அவரிடம் அனுமதியிம் பெற்ற பின்புதான் இந்த வார்த்தையை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். அது சரி, ரஜினிக்கும் இந்த படத்திற்கும் என்ன தொடர்பு என்றால், அதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். என்று மற்ற இயக்குநர்களைப் போலவே பதிலளித்தார் ராஜேஷ்.

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இப்படத்தை வெளியிடப்போகிறார்கள். ஆங்கிலத்தில் 'சிக்ஸ் மில்லியன் டாலர்' என்ற தலைப்பில் பல நாடுகளில் இப்படம் வெளியாகப்போகிறது. எதற்கு இந்த முயற்சி என்று இயக்குநரிடம் கேட்டால், "எத்தனை நாள் தான் தமிழ்ப் பேசும் ஆங்கிலப் படங்களை நாம் பார்த்துகொண்டிருப்பது. ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை அவர்களுக்கு காட்டுவோம் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சி. இது ஆங்கிலப் படம் என்பதற்காக, கிராமருடன் கூடிய ஆங்கிலத்தில் யாரும் பேச மாட்டார்கள். தமிழ்நாட்டில் இளைஞர்கள் எப்படி ஆங்கிலம் பேசுவார்களோ அதே முறையில் தான் இருக்கும். மேலும் இதில் ஐந்து ஆறு காட்சிகளில் தமிழிலும் பேசுவார்கள். பொதுவாக ஆட்டோ டிரைவர், தெருவில் இட்லி விற்கும் பாட்டி போன்றோர்கள் தமிழில்தான் பேசுவார்கள் அதை அப்படியே ஆங்கிலப் படத்திலும் இணைத்திருக்கிறோம். அவர்களுக்கும், நமக்கும் இடையே கம்யூனிகேசனை வலுப்படுத்த இது உதவும்.

தமிழகத்தில் உருவான ஆங்கிலப் படமாக இருந்தாலும், ஆங்கிலப் படங்களில் உள்ள விறுவிறுப்பு இப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இருக்கும். அதே சமயம் கமர்ஷியல் ஃபார்மூலாவில் ஒரு தரமான படமாகவும் ரசிகர்களை திருப்தி படுத்தும்." என்று கூறுகிறார்.

இப்படத்திற்காக 'பிம்பிளிக்கா பிளாப்பி' என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு புரோமோசன் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் அந்த பாடலை படமாக்கியிருக்கும் இயக்குநர் படத்தையும் அப்படித்தான் இயக்கியிருப்பார் என்று நம்பலாம்.

வெற்றி தேடித் தந்தவர்களுக்கு - ஜெ. ரகசிய திட்டம்

உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க.,வின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையில், அரசின் நியமன பதவிகளை வழங்க, முதல்வர் முடிவு செய்துள்ளார்.முதல்கட்டமாக, மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிக்கான நபர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான நபர்களின் பெயர்கள், இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதையடுத்து, தமிழக அரசால் நியமனம் செய்யப்பட உள்ள கோவில் அறங்காவலர் குழு பதவி, வணிகர் நல வாரியம் உட்பட அரசின், 32 வாரியங்களின் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை வெளியிட்டு, தீபாவளி பரிசு வழங்க முடிவு செய்துள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, 38 ஆயிரத்து 421 கோவில்களின் அறங்காவலர்கள் குழு பதவிகளுக்கான பட்டியல் முதலில் வெளியாகிறது.தொடர்ந்து, தமிழ்நாடு முதலீட்டுக் கழகம், சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சி), சமூக நல வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் உட்பட, அரசின் 31 கழகங்களுக்கு, தலைவர் உட்பட மற்ற பதவிகளுக்கான நபர்களின் பட்டியல் வெளியாக உள்ளது. வணிகர் நல வாரியம், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம், ஆடு வளர்ப்போர் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு நல வாரியங்களுக்கான நியமன பதவிகளுக்கான நபர்களின் பட்டியலும், இந்த வாரத்தில் வெளியாக உள்ளது.

எம்.ஜி.ஆர்., விசுவாசிகள், இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை, ஜெயலலிதா பேரவை ஆகிய அமைப்புகளில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.இது குறித்து, முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் கூறியதாவது: இந்த பதவிகளுக்கு மாவட்ட செயலர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ள பட்டியல், உளவுத்துறை மூலம் தணிக்கை செய்யப்பட்டு, முதல்வரின் பார்வைக்கு சென்று விட்டது. இதனால், தீபாவளி பண்டிகைக்கு முன், நியமன பதவிகளுக்கான பட்டியல் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, October 22, 2011

தொழிலதிபரைத்தான் திருமணம் செய்வேன்: சமீரா ரெட்டி

எக்காரணம் கொண்டும் ஒரு நடிகரை திருமணம் செய்ய மாட்டேன். மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன் என்று நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார். பாலிவுட்டில் கோலோச்சி விட்டு, தெலுங்கு, தமிழில் கால் பதித்திருப்பவர் நடிகை சமீரா ரெட்டி. நீச்சல் உடையில் தொடங்கி, பட்டுப்புடவை வரை விதவிதமான காஸ்ட்யூம் அணிந்து திரையில் தோன்றி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வரும் இந்த ஆறடி உயர நடிகை வாரணம் ஆயிரம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெயரிடப்படாத தமிழ் படமொன்றில் நடித்து வரும் சமீரா அளித்துள்ள பேட்டியில்,

திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் ஒருபோதும் நடிகரை காதலிக்க மாட்டேன். நடிகரை திருமணம் செய்யப்போவதும் இல்லை. மிகப்பெரிய தொழில் அதிபரைத்தான் மணப்பேன். எனது தந்தை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதால் எனக்கு தொழில் பற்றிய விஷயங்கள் அனைத்தும் அத்துபடி. இதனால் கணவருக்கு தொழிலில் உறுதுணையாக இருக்க முடியும் என்று நம்புகிறேன், என்றார் சமீரா ரெட்டி. விவரமான பொண்ணுதான்!

பிஜேபியும் ஊழல் கட்சிதான் - அத்வானி ஒப்புதல்

பா.ஜ.க., மூத்த  தலைவர் எல்.கே. அத்வானி ஊழலை ஒழிப்பதாகவும்,  வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு  வர வேண்டும் என்றும் கூறி ரத யாத்திரை நடத்தி வருகிறார்.

அவர் இம்மாதம் 11ஆம் தேதியன்று பீகாரில் ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த ஊரான சிதாப்தியாரா வில் இந்த யாத் திரையைத் தொடங்கி னார். பீகார் முதல் அமைச்சரும், அய்க்கிய ஜனதாதளத்தின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கொடியசைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க., பொதுச் செய லாளர் அனந்தகுமார், செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த யாத்திரை அடுத்த மாதம் 20ஆம் தேதியன்று டில்லியில் நிறை வடைகிறது. டில்லியில் பொதுக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி களைச் சேர்ந்த தலை வர்கள் உரையாற்று கிறார்களாம்.

நாகபுரியில் நேற்று முன்தினம்  ரதயாத்திரை நடந்தது. ரூ.500 லஞ்சம்

பொதுக் கூட்டத் தில் எல்.கே. அத்வானி பேசினார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். மத்தியப் பிரதேசத்தில் அத்வானியின் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களுக்கு கவரில் வைத்து ரூ.500 கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விவ காரம் குறித்து செய்தி யாளர்கள் சரமாரியாக கேள்விக்கணை தொடுத்தனர். அதற்கு அத்வானி பதில் அளித் தார்.

அவர் கூறியதாவது:

பி.ஜே.பி.யின் ஊழல்

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, நாங்கள் விடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர் அதைப் புறக் கணித்தார். அதனால் தான் அவருக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக சுரங்கத் தொழில் நடத் தப்படுகிறது என்பது தொடர்பாக லோக் ஆயுக்தா அறிக்கை வெளிவந்தவுடன் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று எடியூரப்பா விடம் நாங்கள் கண் டிப்புடன் கூறினோம்.

ஆனால் அவர் அதன் படி நடக்கத் தவறி விட்டார். இதனால் தான் இந்த இக்கட் டான நிலை ஏற்பட் டுள்ளது. ஊழல் பிடி யிலிருந்து பி.ஜே.பி.யும் தப்பவில்லை இதை ஒரு பாடமாக எடுத்துக்  கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழ இடம் கொடுக்கக் கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அத் வானி கூறினார்.

நீதிபதி சிங்வி விசாரிப்பார் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண் டனை வழக்கு விசார ணையை உச்சநீதிமன்றத் தின் 3 பேர் கொண்ட `பெஞ்ச்' விசாரிக்க மறுத்து விட்டது. வக்கீலின் கோரிக் கையை ஏற்று நீதிபதி கள், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதி பதி சிங்வி விசாரிப்பார் என அறிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை சென்னை உயர்நீதிமன் றம் 8 வாரத்துக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை டில்லி உச்சநீதிமன்றத் துக்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி யின் ஒரு அமைப்பின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி சிங்வி முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடப்ப தாக இருந்தது. ஆனால் இந்த மனுவை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதி சிங்வி விடுமுறையில் இருந்ததால், இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், டத்து, சி.கே.பிர சாத் ஆகிய மூவர் அமர் வின் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது.

நீதிமன்றம் தொடங் கியவுடன் வக்கீல் ராம் ஜெத்மலானி எழுந்து, `இதுபற்றிய விசாரணை, ஏற்கனவே நீதிபதி சிங்வி அமர்வில் நடத்தப்பட்டு விட்டது. வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு உள்ளன. அதுபற்றித்தான் முடிவு செய்து இருக்கும் தீர்ப்பை, தமிழ்நாடு அரசு தங்கள் தரப்பு பதிலை எழுத்து மூலமாக தருவ தற்கு அவகாசம் கேட் டதால், தற்பொழுது அறிவிக்கவில்லை என்று கூறி நீதிபதி சிங்வி தெரி வித்துள்ளார்' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி கபீர், `அப்படியா னால், இந்த அமர்வு நீதி மன்றம் இந்த வழக்கு விசா ரணையை எடுத்துக் கொள்ளாது' என்று கூறிவிட்டார். எனவே, இந்த வழக்கு, மீண்டும் நீதிபதி சிங்வி அமர்வுக்கே செல்லும் வாய்ப்பு இருக்கிறது. வழக்கு விசாரணை முடிந்ததும் செய்தியா ளர்களிடம் ராம் ஜெத் மலானி கூறியதாவது:-

மூன்று தமிழர்கள் உயிரைக் காப்பாற்ற, வைகோ உணர்வுபூர்வ மாகப் போராடி வரு கிறார். விசாரணையை மாற்ற வேண்டும் என் கின்ற மனு, தள்ளுபடி செய்யப்படும் என்றும், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, மூன்று பேர்களுடைய உயிரை யும் உறுதியாக காப் பாற்ற முடியும் என்றும் உறுதியாக நம்புகிறேன். - இவ்வாறு ராம் ஜெத் மலானி கூறினார்.

பலகீனமடையும் அன்னா ஹசாரே!!


அரசியல் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரி வித்து, அன்னா ஹசாரே குழுவில் இருந்து மேலும் சிலர் விலகக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹசாரேயும், அவரது குழுவினரும் `ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

அரியானா மாநிலம் ஹிசார் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அன்னா ஹசாரே குழு வினர் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய் தனர்.

மேலும் இந்த குழுவில் இடம் பெற் றுள்ள முக்கிய உறுப் பினரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது.

இப்படியாக அன்னா ஹசாரே குழுவின் சில செயல்பாடுகள் அரசி யல் ரீதியில் அமைந்து இருப்பது அந்த அமைப் பில் சலசலப்பை ஏற் படுத்தி உள்ளது.

ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே குழு வில் இருந்து பி.வி.ராஜ கோபால், ராஜீந்தர் சிங் ஆகிய 2 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் வில கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து, மேலும் சிலர் அந்த குழுவில் இருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளி யாகி உள்ளது. அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள டெல்லி கத் தோலிக்க ஆர்ச் பிஷப் வின்சென்ட் எம்.கான் செஸ்சாவ் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அவரும் விலகக்கூடும் என்று தகவல் வெளி யாகி உள்ளது.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வர்கள் இருக்கும் சமு தாயத்தின் தலைவரான அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான பிரசாரத்திலோ அல்லது ஆதரவான பிரசாரத் திலோ பங்கு கொள்ள மாட்டார் என்று டெல் லியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அன்னா ஹசாரே யுடன் சேர்ந்து ஊழ லுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை உரு வாக்கிய 20 பேரில் கத் தோலிக்க ஆர்ச் பிஷப் வின்சென்ட் எம்.கான் செஸ்சாவ்வும் ஒருவர் ஆவார்.

இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பலானோருக்கு அன்னா ஹசரேயுடன் நல்லுறவு இருந்த போதி லும் அரவிந்த் கெஜ்ரி வால், கிரண் பேடி உள்ளிட்ட சிலரின் செயல் பாடுகளில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அன்னா ஹசாரே குழுவில் இருந்து மெகமூத் மதானி, சையத் ரிஸ்வி, சையத் ஷா பஸ்லுர் ரகுமான் வாய்சி ஆகி யோரும் விலக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித் தன. ஆனால் தனது குழு வில் இருந்து மேலும் யாரும் விலகாமல் இருக்க அவர்களை சமா தானப்படுத்தும் முயற்சி யில் அன்னா ஹசாரே ஈடுபடுவார் என்று கூறப் படுகிறது.

வயிற்றைக் காப்பது எப்படி?


வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால் அது வயிற்றுக்கும் நன்மையே.

அப்படிப்பட்ட வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்­ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீ­ர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீ­ர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீ­ர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்­ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

மூளையை பாதிக்கும்


காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி கருப்பசாமி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

இரத்த புற்று நோயால் அவதிப்பட்ட அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்ற இன்று மரணமடைந்தார். இவர் சங்கரன்கோவில் (தனி) தொதிகு எம்.எல்.ஏ.

ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசில் அவர் கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரானார்.

தலித் இனத்தைச் சேர்ந்த விவசாயியான இவர், சங்கரன்கோயில் தொகுதி்யில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர் கருப்பசாமி.

ரத்தப் புற்று நோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்தது. எனவே அவரது பொறுப்புகளை அமைச்சர் சிவி சண்முகம் கவனித்து வந்தார்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஒரே அமைச்சர் கருப்பசாமியாகத்தான் இருக்கும். நோய் தீவிரமடைந்துவிட்டதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையி்ல் அவர் இறந்தார்
 
அன்னாரின் குடும்பத்திற்கு மனசாட்சியின் ஆழ்ந்த அனுதாங்கள்.

சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்

சிர்த்நகரில் பதுங்கியிருந்தபோது கடாபி கொல்லப்பட்டார். இந்த சண்டையின் போது அதை வழிநடத்தி சென்ற அவரது மகன் முட்டாசிம் கடாபியும் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை பொது மக்கள் பார்வைக்காக புரட்சிப்படையினர் வைத்திருந்தனர். அப்போது அவர் பேண்ட் மற்றும் பனியன் அணிந்திருந்தார்.

கழுத்தில் குண்டுகள் துளைத்ததால் காயம் இருந்தது. இதனால் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு அவர் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்தார். இதை அறிந்த புரட்சி படை அங்கு சென்றது. அப்போது அவர் வலது கையில் பாட்டிலை பிடித்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். இடது கையில் சிகரெட்டை பிடித்தபடி புகைத்து கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் புரட்சி படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். எனவே, அவர் பிணமாக கிடந்த இடத்தில் பாதி தண்ணீர் பாட்டிலும், பாதி நிலையில் எரிந்த சிகரெட்டும் கிடந்தது. இறுதி கட்ட சண்டையின் போது கடாபி அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பலியாகினர். இதற்கிடையே கடாபியின் நெருங்கிய ஆதரவாளர் சயீப்- அல்-இஸ்லாம் குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.

தற்போது அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது போட்டோ விரைவில் வெளியிடப்படும் என இடைக்கால அரசு அல்- அரேபியா டெலிவிஷனில் அறிவித்தது. கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இவர்தான் ராணுவத்தை வழி நடத்தி சென்றார்.

பல்டி அடித்த விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தே.மு.தி.க. ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.

ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க. தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தே.மு.தி.க. துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும். விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.

அதுபோல் தே.மு.தி.க. தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தே.மு.தி.க. அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

'மறுமலர்ச்சி' திமுகவுக்கு

மதிமுகவினர் நிச்சயம் இந்தத் தேர்தலை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். காரணம் 3 மாநகரட்சிகளில் அக்கட்சிக்கு எதிர்பாராத அளவுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. மேலும் பல இடங்களில் ஓரளவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் சீந்தப்படாத கட்சியாகவே இந்த தேர்தலை சந்தித்தது மதிமுக. இருந்தாலும் கூட்டணிக்காக யாரிடமும் போய் கெஞ்சாமல், அடிபணியாமல் துணிச்சலுடன் தனியாகவே தேர்தல் களத்திற்கு அனுப்பினார் வைகோ. அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. தன்னந்தனியாக, எந்தவித பின்பலமும் இல்லாமல், தமிழ் ஆர்வலர்களையும், மதிமுக கொள்கைப் பிடிப்பாளர்களை மட்டுமே நம்பி நின்ற வைகோவுக்கு சந்தோஷச் செய்தியாக கணிசமான வாக்குகள் இந்தத் தேர்தலில் கிடைத்துள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலி்ல அக்கட்சியின் வேட்பாளர் மிகப் பெரிய அளவில் 23,000க்கும் மேலான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோவையில் 11,000க்கும் மேலாகன வாக்குகளையும், திருச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளையும், அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் மதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தது. கடைசி நேரத்தில் அது சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இதுதவிர பல இடங்களில் மதிமுகவுக்கு அவர்களுக்கென்றே இருக்கும் 4000, 5000 வாக்குகள் அப்படியே கிடைத்துள்ளன. இந்த தேர்தலில் மதிமுகதான் தனது வாக்கு நிலை கரையாமல் நிலையாக உள்ளதை நிரூபித்துள்ள ஒரே கட்சி என்று சொல்ல முடியும் அளவுக்கு அதற்கான வாக்குகளை தொடர்ந்து பெற்று வருகிறது.

நிச்சயம் இந்த தேர்தல் மதிமுகவுக்கு நிச்சயம் மறுமலர்ச்சியைக் கொடுத்துள்ள தேர்தல் என்று கூறலாம். நிச்சயம், லோக்சபா தேர்தலில் மதிமுகவை கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா முன்வருவார் என்பதில் சந்தேகமில்லை.

கொச்சியில் குட்டித்தீவு நயன்தாரா


நடிகை நயன்தாரா கொச்சி அருகே குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் என்பது அனைவரும் தெரிந்ததே. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலாகின்றனர். அதற்காக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார் நயன். எப்பொழுது ஷாப்பிங் சென்றாலும் தனக்கு டிரெஸ் எடுக்கிறாரோ இல்லையோ, தவறாமல் பிரபுதேவாவுக்கு டிரஸ் எடுத்துவிடுவார்.

இந்நிலையில் கொச்சியில் இயற்கை எழில் கொஞ்சும் குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம் நயன்தாரா. இது தவிர திருவல்லா, எர்ணாகுளம், தேவரா ஆகிய இடங்களிலும் வீடு வாங்கியுள்ளாராம்.

சம்பாதித்த பணத்தை எல்லாம் நயன் பிரபுதேவாவுக்காக செலவளித்துவிட்டார். தான் ஆசை, ஆசையாக வாங்கிய பிஎம்டபுள்யூ காரைக் கூட விற்றுவிட்டார் என்றெல்லாம் ஒரு காலத்தில் செய்திகள் வந்தது என்பது குறிப்பிடத்தகக்து

காணாமல் போன தேமுதிக

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடங்களில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்றுவரும் நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டசபைத் தேர்தலை சந்தித்து தற்போது தனிதத்துப் போட்டியிட்ட தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கியுள்ளது.

மாநகராட்சிகளிலும் சரி, நகராட்சிகளிலும் சரி இந்தக் கட்சி அதிமுகவின் வெற்றியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. பேரூராட்சிகளில்தான் இக்கட்சிக்கு ஓரளவு வார்டுகள் கிடைத்து வருகின்றன.

10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் தேமுதிக 3வது மற்றும் 4வது இடத்தில்தான் உள்ளது. இங்கு வார்டுகளிலும் கூட தேமுதிக வேட்பாளர்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

பேரூராட்சித் தலைவர் பதவியைப் பொறுத்தவரை ஒரு இடத்திலும் தேமுதிக முன்னணியில் இல்லை. அதேசமயம் கவுன்சிலர் பதவியிடங்கள் ஓரளவு இக்கட்சிக்குக் கிடைத்துள்ளது.

தபால் ஓட்டுக்களிலும் கூட தேமுதிகவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் ஓட்டே கிடைக்கவில்லை.

தேமுதிக வாக்குப் பிரிக்கும் கட்சியாகவே மீண்டும் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அதிமுகவின் வாக்குகளை தேமுதிக எதுவும் செய்யவில்லை. மாறாக திமுகவின் வெற்றியைத்தான் இந்த முறை தேமுதிக பல இடங்களில் பாதித்துள்ளது. கடந்த காலங்களில், அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையைப் போட்ட தேமுதிக இந்த முறை அதிமுகவை விட்டு விட்டு திமுகவின் வெற்றிவாய்ப்பை பல இடங்களில் பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thursday, October 20, 2011

நடிகையோடு அதுவா...!

சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன் படத்தின் இசைவெளியீடு பிரமாண்டமான முறையில் நடந்தது. விழாவுக்கு பல நடிகைகள் வந்திருந்தும் படத்தின் நாயகி பூர்ணா வரவில்லை. அதே போல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் வரவில்லை.

ஆனால், பூர்ணா வராதது தான் விழாவுக்கு வந்த பலரால் பேசப்பட்டது. அதை தொடர்ந்து, படம் நடித்து முடிப்பதற்குள் படாதபாடு படுத்திவிட்டார் இயக்குனர், அதனால் தான் பூர்ணா வரவில்லை என்று செய்திகள் எழுதப்பட்டது. 

இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த, ‘வித்தகன்நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், நான் நடிகைகள் எல்லோரையும் மிகவும் மதிப்பேன். நடிகை தொழில் என்பது அழகான ஒரு விஷயம். நம்முடைய விருப்பத்திற்கு எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் இடம் கொடுப்பாங்க, ஆனால் அவர்கள் எல்லோரையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடியாது. நடிப்பது என்பது ஒரு ஸ்பெஷலான விஷயம்.

நான் நடிகைகளிடம் நடிப்பை தவிர எந்த விஷயத்தையும் எதிர்பார்ப்பதில்லை. இதை உண்மையாகவே சொல்கிறேன். ஆசாபாசங்களை நிறைவு செய்துகொள்ள வசதிகள் நிறைய இருக்கிறது. அதை போய் ஒரு நடிகையிடம் எதிர்பார்ப்பது என்னை மாதிரி இந்த தொழிலை கௌரவமாக நேசிக்கிற இயக்குனர்களிடம் இல்லாத ஒரு விஷயம்.

இதை நிறைய இயக்குனர்கள் சார்பாகவே சொல்கிறேன். நடிகையிடம் நடிப்பை தவிர மற்ற விஷயங்களை எதிர்பார்த்தால் அவர் ஒரு சரியான இயக்குனர் இல்லை என்பதே என்னுடைய கருத்து.

அந்த மாதிரி ச்சீப்பான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. இதை அந்த நடிகையிடமே கேட்டு தெரிந்துகொள்ளளாம். பூர்ணாவை ஷூட்டிங்கில் யாரோ கையை பிடித்து இழுத்த மாதிரியும்... இல்லை, இழுக்க முயற்சி செய்த மாதிரியும்... இந்த செய்திகள் ரொம்ப ரொம்ப அறுவருப்பாக இருக்கிறது.

அப்படிப் பார்த்தால் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் தான் விழாவுக்கு வரவில்லை. அவரையும் நான் கையை பிடித்து இழுத்தேனா என்ன? பூர்ணா வராததால் வித்தகன் விழாவுக்கு எந்த பாதிப்புமே இல்லை என்றார்.  

Wednesday, October 19, 2011

ஆண்களை கடத்தி பாலியல் சகோதரிகள் கைது

ஜிம்பாப்வேயில் ஆண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த சகோதரிகள் 3 பேரை பொலீசார் கைது செய்தனர்.
ஜிம்பாப்வேயைச் சேர்ந்தவர்கள் ரோஸ்மேரி சாக்விசிரா(28), சோபியா(26), நெட்காய் கோக்வாரா(24). இவர்கள் 3 பேரும் சகோதரிகள் ஆவர். அவர்கள் ஆண்களைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் காரில் சென்று கொண்டிருந்த சகோதரிகள் 19 வயது வாலிபருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர். 3 பெண்கள் லிப்ட் கொடுத்ததால் சந்தோஷமாக காரில் ஏறிய வாலிபரை தங்கள் வீட்டுக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

அதேபோல ராணுவ வீரர் ஒருவரைக் கடத்திச் சென்று தங்களுடன் உறவு வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரை சுட்டுக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் பொது மக்களை காக்கும் பொலிஸ் ஒருவரையே கடத்திச் சென்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களின் செயல் குறித்து பொலீசாருக்குத் தெரிய வரவே அவர்களை பொலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறல்

கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்துகொண்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களை நடிகர் நவ்தீப்பும் நண்பர்களும் சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக நவ்தீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அறிந்தும் அறியாமலும், இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன் அஆஇஈ, சொல்லச்சொல்ல இனிக்கும் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நவ்தீப். தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார்.

ஐதராபாத் அருகே மாதாபூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நவ்தீப், அவரது நண்பர் ஜெயவர்த்தன், அவர்களது கேர்ள் பிரெண்ட்கள் உள்ளிட்டோர் சென்றனர். ஓட்டலில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் இருந்தனர்.

அவர்கள் நவ்தீப்பின் கேர்ள் பிரெண்டிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்து அவர்களை தேடினார் நவ்தீப். அதற்குள் அவர்கள் அருகே உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றுவிட்டனர். நவ்தீப் மற்றும் நண்பர்கள் அங்கு சென்று மாணவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நவ்தீப்பின் நண்பர் ஜெயவர்த்தன் ஒரு மாணவரின் செல்போனை பிடுங்கி தரையில் வீசி உடைத்தார். இதையடுத்து மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே மாதாபூர் போலீசில் புகார் அளித்தனர். நவ்தீப், நண்பர்கள் மற்றும் மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஜெ.வுக்கு திடீர் ஆதரவு

காவிரி நதி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுக்கும் நல் முயற்சிகளுக்கு திராவிடர் கழகம் துணை நிற்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நதி நீர்ப் பங்கீடுபற்றி நாம் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று காவிரி நடுவர் மன்றம். பல ஆண்டுகளுக்குப் பிறகு இறுதித் தீர்ப்பினை காவிரி நதி நீர் நடுவர் மன்றம் நமக்கு 2007ல் வழங்கியது.

அதன்படி நமக்கு ஆண்டுதோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டிய நீர்ப் பங்கீடு, சில, பல ஆண்டுகளில் தவறுவதும், கிருஷ்ண சாகர், கபினி போன்ற அணைகள் நிரம்பி வழியும் போது அணைகளைப் பாதுகாக்க, தண்ணீரைத் திறந்து விடுவதும் அதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்புவதும், அந்த கணக்கினையும் காட்டி, தர வேண்டிய பாக்கி நீரைக் கணக்கிட்டு கர்நாடகம் கூறுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

2007ல் வெளியிட்ட காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிடாமல் இருப்பது மிகவும் வியப்பையும், வேதனையையும் நமக்கு அளிக்கிறது. மத்திய அரசு இதில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து, கடந்த 4 ஆண்டு காலம் காலதாமதம் செய்துவருவது ஏன் என்று புரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு நாம் சலுகை கேட்கவில்லை. நீதிமன்ற ஆணையை சட்டப்படி அரசிதழில் வெளியிட வேண்டிய கடமையை ஏன் செய்யவில்லை என்றுதான் மத்திய அரசிடம் நமக்குள்ள உரிமையை வற்புறுத்துகிறோம்.

முதல்வர் ஜெயலலிதா இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி வற்புறுத்தியிருப்பதற்கு அரசியல் கட்சி கண்ணோட்டமின்றி தமிழ்நாட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளும், சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து நம் ஒன்றுபட்ட ஒருமித்தகுரலை எழுப்பிடத் தவறக் கூடாது.

கர்நாடக அரசியலில் ஒரு கட்சியை எதிர்த்து மற்றொரு கட்சி நடத்தினாலும், காவிரி நதி நீர்ப் பிரச்சனை போன்ற அவர்களது மாநிலப் பிரச்சனைகளில் ஒரே அணியில் நின்று குரல் கொடுக்கின்றனர். தமிழ்நாட்டில் மாத்திரம், இதுபோன்ற பொது உரிமைப் பிரச்சனைகளில் ஏன் ஒற்றுமை இல்லை?.

அரசியல் பார்வைகளால் ஒருவரை மற்றொருவர் விமர்சிப்பது- வாதங்கள்- எதிர்வாதங்களுக்கே நமது நேரம் செலவழிக்கப்பட்டு, ஒற்றுமையே காணாமற் போய்விடும் வேதனையான நிலை - இனி மேலாவது இருக்கக்கூடாது.

ஆளுங்கட்சியும் முதல்வரும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவினையும் திரட்ட முயற்சிக்க வேண்டுமே தவிர, கடந்த கால குற்றச்சாட்டுகளைப் புதுப்பித்து, பொது எதிரிகள் மகிழும் வண்ணம் நமது நதிகள் உரிமை பறிபோக இடமளிக்காது சிறப்பாக செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். அரசு எடுக்கும் நல் முயற்சிகளை திராவிடர் கழகம் வரவேற்று, விரைந்து செயலாக்க துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.